16 ஆவது உலகத்தமிழிணைய மாநாடு – முழக்கம், இலச்சினைக்கானபோட்டிகள்

அன்புடையீர், வணக்கம். 16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மிகு தொராண்டோ மாநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டுநிறைவும் ஆகும்.  மாநாட்டின் கருத்து முழக்கங்கள் அல்லது உள்ளுறைத் தலைப்புகள் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதும் ஆகும்.  தமிழ்க்கணிமை ஆய்வுலகில்  இயற்கைமொழியியல் ஆய்வுகள் பெருகிவருகின்றன.  ஒளிவருடி எழுத்துணரி நுட்பம், எழுத்துரையிலிருந்து ஒலிவடிவப் பேச்சுரையாக்குவது, திராவிடமொழிகளுக்கிடையே இயந்திர மொழிபெயர்த்தல், மொழியியல் நோக்கில்…

மொழிமானக் காவலர் தமிழமல்லன் – மு.பாலசுப்பிரமணியன்

  மொழிமானக் காவலர் தமிழமல்லன் தமிழுணர்வு குன்றாத தகையாளர் தன்மானம் நின்றோங்கும் நெறியாளர் உமியாக அயற்சொற்கள் கலப்பதையே உரக்க எதிர்க்கின்ற வீராளர் மல்லனுடை பாக்கள் என்றால் அனல்பறக்கும் நல்லொழுக்கம் கருத்துவளம் அணிவகுக்கும் கன்னலென தேன்பாக்கள் கரும்பினிக்கும் நன்னெறியில் பிறழ்வோரை சுட்டெரிக்கும் மின்சாரம் பாய்ந்ததுபோல் வீச்சிருக்கும் தென்னிலங்கை மண்பெருமை மூச்சிருக்கும் மண்மானம் மொழிமானம் காத்திருக்கும் எதுகையும் மோனையும் எழுந்துநிற்கும் எழுதென்று உவமையெலாம் ஏங்கிநிற்கும் தொடைவந்து தோள்சாய்ந்து காத்திருக்கும் தோதான இடம்கேட்டு பார்த்திருக்கும் படையெடுத்துச் சொல்லெலாம் படியிருக்கும் மடைதிறந்த வெள்ளம்போல் கவிசிறக்கும் பாவேந்தர் புகழ்பரப்பும் பண்பாளர் பாடாற்றி…

தமிழ் முழக்கம்! – சுத்தானந்த பாரதியார்

“வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள் கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள் தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம் நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்”   . கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்