மதி படைத்த யானை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதி படைத்த யானை   குள்ளநரிகள் கள்ளவெறியில் தேர்தல் மணியை அடிக்குதாம், குருட்டு மறிகள் அந்த ஒலியில் பழசையெல்லாம் மறக்குதாம், குருதி வெறியில் நரிகளோடு கழுதைப்புலிகள் சேருதாம், குற்றுயிராய்க் குலையுயிராய் மறிகள்சாகு மென்றறிந்து, கொல்லும் அலகுக் கழுகுகளும் ஆசையோடு பறக்குதாம்! உள்ளம் குமுறிக் கண்டவர்கள் என்னசொல்லித் தடுத்த போதும், உண்மை அறியும் ஆற்றலின்றி ஊனமறிகள் சிரிக்குதாம்! மறிகளுக்கு அறிவையூட்டி, நல்வழியைக் காட்ட, மதிபடைத்த யானைஒன்று, தரை நடுங்க வருகுதாம்! தமிழ் நலம்பெருக்க வருகுதாம்! தன் நலம்மறந்து வருகுதாம்! தேர்தல் களம்வெல்ல வருகுதாம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மாமூலனார் பாடல்கள் – 11சி.இலக்குவனார்

   –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்    (சன.26, 2014 இதழ்த் தொடர்ச்சி) தோழி! வருந்தாதே – “வினையே ஆடவர்க்கு உயிர்” என்ற கோட்பாட்டில் சிறந்த உள்ளம் கொண்டவனாய், தலைவன் வெளியூர் சென்றுவிட்டான். தலைவி தலைவன் பிரிவால் நாள்தோறும் மெலிந்து கொண்டே இருந்தாள். தோழி ஒரு நாள் உற்று நோக்கினாள். ஆறுதல் கூறத் தொடங்கிவிட்டாள். “தோழி! வருந்தாதே, குவளை மலர் போன்ற கண்கள் தம் அழகை இழந்துவிட்டனவே, தொய்யில் எழுதி அழகுடன் விளங்கும் உன் தோள்கள் இன்று என்ன இப்படிக் காணப்படுகின்றன?…