வாழ்ந்து காட்ட வேண்டும்! வலிமையுள்ள மனிதனாக வாழ்ந்து காட்ட வேண்டும் ! எளிமையான வாழ்வுக்கே இடமளிக்க வேண்டும்! தனிமையிலும் இனிமை காண தன்னடக்கம் வேண்டும் ! தரணியெல்லாம் போற்றும் வகை தயவு நெஞ்சில் வேண்டும்! கலியுகத்தின் போக்கை மாற்ற கருணை தம்முள் வேண்டும் ! கடவுள் என்றும் கொண்டாட கடமை உணர்தல் வேண்டும் ! பழியுணர்வை போக்க வல்ல பாசம் இங்கே வேண்டும் ! பகைவரையும் மன்னிக்கும் பக்குவமும் வேண்டும் ! மனித குலம் உயிரினத்தை மதித்து வாழ வேண்டும்! மரணம் வரும் என்ற…