தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்   வாணாள் இடரீட்டுக் கழகம்(எல் .ஐ.சி.) சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தேவகோட்டை  வா.இ.க./எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி   இடரீட்டுக் கழகம் .வைரவிழா கொண்டாடுவதைக் குறித்து சிறப்புரையாற்றினார். கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார். இந்திய  வாணாள் இடரீட்டு நிறுவனம் தொடர்பாக  இராசி என்ற மாணவியும், அதன்…