மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் : மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம்   மறைமலையடிகளின் நாட்குறிப்பு : 13-1-1899 :  மாண்புமிகுந்த இராமானுசர் கி.பி. 986இல் பிறந்தார். விளக்கம் : இவர், வைணவ சமய ஆசிரியராவர். ‘பாஃசியகாரர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். வைணவ சித்தாந்தத்தைத் தம் பேருரைகளாலான நூல்களாலும், சொற்பொழிவுகளாலும் பாரத நாடெங்கும் பரப்பியவர். வடமொழியிற் பலவும், தமிழிற் சிலவும் ஆக நூல்களையியற்றியவர். -வித்துவான். மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – வித்துவான். மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் 1-1-1899 என் தமிழாசிரியர் நாராயணசாமி(ப் பிள்ளை)யைத் திருவாரூர் சென்று கண்டேன். – மறைமலையடிகள் மறை. திருநாவுக்கரசு விளக்கம்: இவர் நாகப்பட்டினத்தில் புத்தகக்கடை வணிகம் நடத்திவந்தவர். கள்ளர் குலத்தோன்றலார்; வெ.நாராயண சாமி(ப்பிள்ளை),  திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்(பிள்ளையின்) மாணவராவர். இவர் சிறந்த இயற்றமிழாசிரியர். அடிகள் தமது இளமைப்பருவத்தே இவரையடுத்து இவர்பால் செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச் செவ்வையாகக் கற்றுத் தேர்ந்தார். வித்துவான். மறை. திருநாவுக்கரசு (மறைமலையடிகள் வரலாறு: பக்கம் 4). நன்றி: குறள்நெறி, 01.02.1964