மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்

    அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.)   செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…

செயற்கரிய செய்த பெரியார் – புலவர் வி.பொ.பழனிவேலன்

ஈரோட் டரிமா இணையற்ற இராம சாமிப் பெரியார் இத்தமிழ் நாட்டில் தோன்றா திருந்தால் தமிழர் யாவரும் ஆரியர்க் கடிமையாய் ஆகி யிருப்போம். இதனில் ஐயம் ஒருசிறி தில்லை. தமிழர் குமுகம் தன்மா னத்துடன் தலைநிமிர்ந் துலவத் தண்ணளி செய்த அண்ணல் ‘பெரியார்’ அன்றி வேறிலை. துணிவும் பணிவும் தூய உள்ளமும் நனியும் பெற்றவர் நந்தமிழ்த் தலைவர். செல்வச் சிறப்பும் சீர்பல பெற்றும் சொல்லில் உரப்பும் சோர்விலா உழைப்பும் தமிழர் நலனே தம்நல மென்றும் பட்டி தொட்டிகள் பலவும் சென்று தமிழர்க் குணவைத் தட்டி ஊட்டி…