திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை
(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை. நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக், குற்றமும் ஆங்கே தரும். பிறரது பொருளைப் பறிக்க விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும். படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார், நடுஅன்மை நாணு பவர் வருபயன் விரும்பிப், பழிப்புச் செயல்களை நடுநிலையார் செய்யார். சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…