வெருளி நோய்கள் 1541-1545 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1536-1540 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1541-1545 நோயர் வண்டி(ambulance) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நோயர் வண்டி வெருளி.ambulance என்றால், இடம்விட்டு இடம் செல்லுதல், இடம் விட்டு இடம் பெயர்தல், நடத்தல், நடப்பதற்குப் பயன்படுத்துகிற எனப் பொருள்கள். அவசர நேர்வில் நோயாளிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு – அஃதாவது இல்லத்திலிருந்து அல்லது இருக்குமிடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதால் நோயர் ஊர்தி எனப்பெற்றது. நாம் நேர் பொருளாகப் பாராமல் பயன்பாட்டு அடிப்படையில் அவசர மருத்துவ ஏந்து(வசதியு)ம் உடைய நோயாளிகளுக்கான ஊர்தியான இதனை நோயர் ஊர்தி…
வெருளி நோய்கள் 1526-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1521-1525 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1526-1530 நெடும்பாசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடும்பாசி வெருளி.நெடும்பாசிகள் அழுகும்போது, நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.இந்த வாயுக்களை மூச்சு இழுத்து விடுவதால் கடுமையான தலைவலி, குமட்டல், மூச்சிரைப்பு முதலியன ஏற்படும் எனப் பேரச்சம் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.00 நீண்ட ஒடுங்கிய வெள்ளை கருப்பு இறகுகளை உடைய ஒரு வகை நீள்வால் பறவையைப்(magpie) பார்த்தால் தீயது நிகழும் என்ற நம்பிக்கையில் அப்பறவையைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது நெடுவாலி வெருளி.இலத்தீனில் ‘pica’ என்னும் சொல் மேகுபை(magpie) என்னும் பறவையைக்…
வெருளி நோய்கள் 1521-1525 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1516-1520 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1521-1525 ஒட்டகச்சிவிங்கி போன்ற நீளமான கழுத்துகுறித்த அளவுகடந்த பேரச்சம் நெடுங்கழுத்து வெருளி.ஒட்டகச்சிவிங்கி வெருளி(Kamilopardaliphobia)எனவும் தனியாக உள்ளது.பிறர் கேலியாக எண்ணுவார்கள் என்று அஞ்சியும் நடமாட்டத்தில் குறைபாடு நேர்வது கருதியும் நீளமான கழுத்துகுறித்த பேரச்சம் கொள்கின்றனர்.00 நெடுங்கைக் குரங்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுங்கைக் குரங்கு வெருளி.இது, கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள நீண்ட கைகளுள்ள வாலில்லாக் குரங்குவகையைச் சேர்ந்தது.00 நெடுஞ்சாலைகள்(highways and expressways) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுஞ்சாலை வெருளி.நெடுஞ்சாலைகளில் ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வதால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும், உடலுக்கோ…
வெருளி நோய்கள் 1516-1520 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1511-1515 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1516-1520 நூறு கோடி / நிகற்புத எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நூறு கோடி எண் வெருளிநிகற்புதம் என்பது 1,00,00,00,000 ஐக் குறிக்கும்.00 நெகிழ் நுரை குவளை(Styrofoam cup) குறித்த வரம்பற்ற பேரச்சம் நெகிழ் நுரை குவளை வெருளி.நெகிழ் நுரை குவளை என்பது எடை குறைந்த, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கொள்கலன் ஆகும். இது சூடாகவும் குளிராகவும் உள்ள பானங்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும். சிறந்த வெப்பக் காப்புத்தன்மையை வழங்கி, பானங்களை அவற்றின் சரியான வெப்பநிலையில் வைத்திருப்பதோடு,…
வெருளி நோய்கள் 1511-1515 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1506-1510 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1511-1515 கூரிய முனை உள்ளபொருள்கள் மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் நுனை வெருளி.“முல்லை வைந் நுனை தோன்ற இல்லமொடு” எனப் புலவர் குறுங்குடி மருதனார் (அகநானூறு:4:1) முல்லைஅரும்பின் கூரிய முனையை நுனை என்கிறார். 2.கூற்றம் அஞ்சும் கொல்நுனை எஃகின் இளையானும் (சீவக சிந்தாமணி 1.361)எனத் திருத்தக்க தேவர், கூற்றுவனும் நடுங்கும் கொல்லும் முனையுடைய வேல் ஏந்திய இளைஞன் கந்துக் கடன் எனச் சொல்லும் பொழுது வேல் முனையை நுனை என்கிறார். .“வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய…
வெருளி நோய்கள் 1506-1510 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1501-1505 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1506-1510 நீளமான புதுச்சொல் குறித்து ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் நீள் புதுச்சொல் வெருளி.நீளமான சொற்களைப் பயன்படுத்த இயலாமை, அதனைச் சொல்வதற்கு வராமை போன்றவற்றால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அந்தச் சொல் மீது வெறுப்பு வருவதும் உண்டு. பழக்கமில்லா நீளச் சொல்லைத் தவறாகச் சொல்லி விட்டால் பிறரின் ஏளனத்திற்கு ஆளாக நேரும் என அஞ்சுவோரும் உண்டு.இதுவும் நீள்சொல் வெருளியைப்போன்றதுதான். ஆனால் நீளமான நன்கு அறிமுகமான சொல் கண்டு பயப்படாமல் புதிய நீளமான சொற்களைக்…
வெருளி நோய்கள் 1501-1505 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1496-1500 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1501-1505 பாடும் பறவை என்று சொல்லப்படும் நீலப்பறவை(Bluebird) மீதான அளவுகடந்த பேரச்சம் நீலப்பறவை வெருளி.பாடும் பறவை தீங்கற்றவை. அதனைக் கூண்டில் அடைத்தாலும் பாடும். இதனை மகிழ்ச்சியின் வெளிப்பாடாகக் கருதக்கூடாது. விடுதலை பறிக்கப்பட்டதன் வலியாகக் கருத வேண்டும் என்பர்.எனவே, நீலப்பறவை வெருளி என்பது நீலப்பறவையின் நிலைமை கண்டு கவலையும் அச்சமும் கொள்வது என்பர் சிலர்.பறவை வெருளியின் வகையைச் சேர்ந்தது. எனவே, பறவை வெருளி உள்ளவர்களுக்கு நீலப்பறவை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.சிலர் இதனை பிலெபிலியா –…
வெருளி நோய்கள் 1491-1495: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1486-1490-தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1491-1495 நீரிழிவு தொடர்பான தேவையற்றஅளவு கடந்த பேரச்சம் நீரிழிவு வெருளி.போதிய கணைய நீர் சுரக்காமையால் இந்நோய் ஏற்படுகிறது.நீரிழிவின் பக்க விளைவுகளான அளவுகடந்த பசி, உடல் சோர்வு, உடல் இளைத்தல், தலை சுற்றுதல்,மயக்கம், கை, கால்களில் விரைப்புத் தன்மை, உடலில் பருக்களும், கட்டிகளும் தோன்றல், இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சி, பார்வைக் குறைவு, புண்கள் ஏற்படின் அவை மெதுவாக ஆறுதல், எளிதில் சினம் அடைதல், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல், உயர் இரத்த அழுத்தம், இறப்பு போன்றவை…
வெருளி நோய்கள் 1486-1490: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1481-1485 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1486-1490 வேலையிலிருந்து முதலில் நீக்கப்படலாம் என அளவுகடந்த பேரச்சம் கொள்வது வேலை நீக்க வெருளி. சுருக்கமாக நீக்க வெருளி என்கிறோம்.ஆட்குறைப்பு, பணியகம்/தொழிலகம் மூட இருத்தல் போன்ற காரணங்களால் வேலையாள் நீக்கம் ஏற்படும் என்ற அச்சத்தால் வரும் பெருங்கவலையால் உருவாகும் (வேலை) நீக்க வெருளி. வேலை நீக்கம் தொடரும் முன்பே தன்னை முதலில் நீக்கி விடுவார்கள் என்றும் அஞ்சுவர்.Prima என்னும் கிரேக்கச் சொல் முதலில் என்பதைக் குறிக்கிறது.fora என்பது முதலில் இலத்தீனில் மக்கள் கூடும் அங்காடிகளைக் குறித்தது….
வெருளி நோய்கள் 1481-1485: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1476-1480) வெருளி நோய்கள் 1481-1485 1482. நிற்பு வெருளி-Stasibasiphobia/ Stasiphobia/ Stasophobia நிற்றல் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் நிற்பு வெருளி.நிற்பு வெருளியில் நடப்பதையும் நடை வெருளியில் நிற்பதையும் சேர்த்தே கூறுகின்றனர்.நிற்க இயலாமல் போகும்பொழுது பாதுகாப்பின்மை குறித்த அச்சம் உருவாகி மருட்சியை உண்டாக்குகிறது. நிற்க இயலாமல் போகும் பொழுது கீழே விழுந்து அடிபடலாம், ஊர்திகளில் சிக்கலாம், மரணமடையலாம் என்றெல்லாம் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர்.இயலாமைக்கு மருந்து கவலையல்ல. அந்த இயலாமையைப் போக்குவதே. எனவே இது நடை வெருளி(Ambulophobia) போன்றதே. வீழ்பு…
வெருளி நோய்கள் 1476 -1480: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1471-1475) வெருளி நோய்கள் 1476 -1480 நிலைப் பேழைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நிலைப் பேழை வெருளி.மூடிய பேழையைத் திறந்தால் பூதம் வரும் என்பது போன்ற கதைகளைப் படித்தவர்கள் அல்லது கேட்டவர்கள் அதனை உண்மை என நம்பி பேழைமீது பேரச்சம் கொள்கின்றனர்.சிறுஅகவையில் பேழையில் நுழைந்து அது மூடப்பட்டிருந்தாலோ பிறருக்கு இத்தகைய நேர்வு நடந்திருந்தாலோ பேழை மீது பேரச்சம் கொண்டு (நிலைபபேழை வெருளிக்கு ஆளாகின்றனர்.சிறுவகை பேழையும் உள்ளதால் நிலைப்பேழை எனக் குறித்துள்ளோம். சுவர்ப்பேழை மீதும் இதே போன்ற காரணமற்ற அச்சத்தால் வெருளி வரும்.அறைகலன் வெருளி…
வெருளி நோய்கள் 1471 -1475: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1466 -1470: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1471 -1475 மாற்றுணா/நிலாச்சோறு (potluck) விருந்து தொடர்பான அளவு கடந்த பேரச்சம் நிலாச்சோறு வெருளி.தனித்தனியே உணவுவகைகளைக் கொண்டுவந்து சேர்த்துப் பகிர்ந்து மற்றவர் உணவை உண்ணுதல் மாற்றுணா விருந்து எனப்படும். பெரும்பாலும் சோறு முதலான மைய உணவு பொதுவாகவும் துணை உணவுகள் பங்கு கொள்வோராலும் அளிக்கப்படுகின்றன.மொய்விருந்து என்னும் பொருள் கொண்ட potlatch என்னும் (வட அமெரிக்க நாட்டின் மரபு மக்களின்) விருந்து முறையில் இருந்து potluck வந்ததாகச் சிலர் கூறுவர். 16 ஆம் நூற்றாண்டில் தாமசு…
