வேந்தர் முதலானவருக்கு வள்ளுவர் கூறியன அலுவலகத் தலைவருக்குப் பொருந்துகிறது – பெ.(உ)லோகநாதன்

அன்றைய  வேந்தர் முதலானவருக்கு வள்ளுவர் கூறியன இன்றைய அலுவலகத் தலைவருக்குப் பொருந்துகிறது.   பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்த காலம் குழுமங்களில்லா, அரசர்கள் கோலோச்சும் காலமாக இருந்தபடியாலும், அவ்வரசர்களுக்கு அறிவுரைகளைக் கூறிக் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் அமைச்சர்கள் இருந்தமையாலும், அவ்வமைச்சர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளை ‘அமைச்சு’ என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை முதன்மைச் செயலர் (Chief Executive) ஒருவர் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் அல்லது குணநலன்கள் எனக் கொள்வோமேயானால் குழும ஆளுகை (Corporate Governance or Corporate Management) கோலோச்சும் இக்காலக்கட்டத்திற்கும்…

தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் : தீர்மானங்கள்

  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 107-ஆவது கூட்டம் பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 அன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் – திருவில்லிப்புத்தூர் தீர்மானம் – 1 :  நன்றியும் பாராட்டும்         தமிழகப் புலவர் குழுவை அழைத்துச் சிறப்பித்து இந்த 107 -ஆவது கூட்டத்தைச் சிறப்புற அமைத்துத் தந்த கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர்.க.சிரீதரன் அவர்களுக்கு…