நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.2 /2

(நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1 /2 தொடர்ச்சி) நான் கண்ட வ. உ. சி.    வெள்ளையர் கப்பல்கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ் நாட்டு வணிகத்திற்கே கேடு விளைவித்தன. இதனை யறிந்த பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும் நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தானே ஒரு கப்பலை ஓட்டித் தமிழ் நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள். அவர் ஒரு தொழிலாளர் தலைவர். தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல் தொழிலாளரைத் தன் போக்கில் நடத்திச்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 2.விதியியல் அறிதல்

மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]  2. விதியியல் அறிதல் 11. வினையின் விளைவே விதியென வந்துறும். நாம் செய்யும் செயல்களின் விளைவே நம்முடைய விதியாகி நம்மிடம் வந்து சேரும். விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே. ஆதலால் விதியைச் செய்யக்கூடிய மூலப்பொருள் செயல்களைச் செய்யக்கூடிய உயிரே ஆகும். மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும். இறைவன் வினைகளின் விளைவை உயிர்களுக்குக் கொடுக்கிறோம். தீவினை விளைவிற் சேருவ துன்பம். தீவினைகளால் துன்பமே வந்து சேரும். நல்வினை விளைவி னணுகுவ…