ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!    ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில்  காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம்.   இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில்  இருந்து கனடா நிறுவனம் ஒன்று…

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!   உலகின் மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.   ஆறு பேராயிரம்(மில்லியன்) அமெரிக்க தாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை அங்கே தொடங்கப்படவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான   மருத்துவர் விசயராகவன் சானகிராமன் பி.ஒ.நி. / பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.   அவரும் அவரது நண்பரும் மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை நூறாயிரம் தாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், எஞ்சிய ஐந்து பேராயிரம்(மில்லியன்) தாலர்களை வட அமெரிக்காவில் வாழும்…