arusolcurai_attai+arangarasan(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி)

 

01. அறத்துப் பால்

03.துறவற இயல்

அதிகாரம் 027. தவம்

 

தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை,

தூயநல் அறச்செயல்கள் செய்தல்.

 

  1. உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை,

   அற்றே, தவத்திற்(கு) உரு.

 

     துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை

       தூய தவத்தின் இலக்கணம்.  

.

  1. தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை

   அஃ(து)இலார், மேற்கொள் வது.   

 

  மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு;

       பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு.

 

  1. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி, மறந்தார்கொல்…..?

      மற்றை யவர்கள் தவம்.

 

    துறவிகட்கு உதவவே, இல்லறத்தார்.

       துறவு வாழ்வைத் துறந்தாரோ….?

 

  1. ஒன்னார்த் தெறுதலும், உவந்தாரை ஆக்கலும்,

   எண்ணின், தவத்தால் வரும்.

 

         பகையை நீக்கவும், நட்பை

       ஆக்கவும், தவத்தால் முடியும்.

 

  1. வேண்டிய வேண்டியாங்(கு) எய்தலால், செய்தவம்,

   ஈண்டு முயலப் படும்.

 

   வேண்டியதை வேண்டியபடி கொடுக்கும்,

       உண்மைத் தவத்தை முயல்க.

 

  1. தவம்செய்வார், தம்கருமம் செய்வார்;மற்(று) அல்லார்,

   அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

 

தவத்தார் கடமையும், தவத்தை

       அறியார் வீண்முயற்சியும், செய்வார்.

 

  1. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும், துன்பம்

     சுடச்சுட, நோற்கி பவர்க்கு.

 

        சுடச்சுடப், பொன்ஒளிரும்; துன்பத்துள்

       படப்படப், தவத்தர், ஞானியர்.

 

  1. தன்உயிர், தான்அறப் பெற்றானை, ஏனைய

     மன்உயிர் எல்லாம் தொழும்.

 

    உயிர்ப்பற்றை, ஆணவத்தை அறவே

       விட்டாரை, உயிர்கள் வணங்கும்.

 

  1. கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்

     ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

 

      தவஆற்றல் பெற்றால், ஆற்றல்மிகு

         எமனையும், வெல்லல் கைகூடும்.

 

  1. இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்

   சிலர்;பலர் நோலா தவர்.

 

  பொய்த்தவத்தார் பலர்ஆனார்; காரணம்,

         மெய்த்தவத்தார் சிலர்ஆனார் என்பதால்.

 

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 028. கூடா ஒழுக்கம்)