திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர்.   பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார்,      இன்சொல் இழுக்குத் தரும்.      அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும்        பரத்தையின் இன்சொல் இழிவுதரும்.       பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர்,      நயன்தூக்கி, நள்ளா விடல்.      பெறுபயன் ஆய்ந்து பண்போடு        பேசும், பரத்தையரை நெருங்காதே.        பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்…

திருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ஆட்சியரிடம் பழகும் பொழுது  கடைப்பிடிக்க  வேண்டிய  முறைகள்.   அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க,      இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார்.         மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல்,         நெருங்காமல் ஆய்ந்து பழகு.   மன்னர் விழைய விழையாமை, மன்னரால்      மன்னிய ஆக்கம் தரும்.      ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை,         நிலைக்கும் நன்மைகள் தரும்.     போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின்,      தேற்றுதல்…

திருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராசன்

(அதிகாரம்  068. வினை செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 069. தூது தூதரது கல்விஅறிவு, தூதுஇயல் அறிவு, செயல்உறுதி, சொல்முறை.       681.  பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு.               நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும்,          பண்பும், தூதர் இலக்கணம்.   அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு)             இன்றி யமையாத மூன்று.         அன்பும், அறிவும், சொல்ஆய்வுத்         திறனும், தூதர்க்கு மிகத்தேவை. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள்      வென்றி வினைஉரைப்பான்…

திருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம்  068. வினை செயல் வகை  தூய செயலை, மனஉறுதியுடன் செய்தற்கு உரிய வழிமுறைகள்   சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு,      தாழ்ச்சியுள் தங்குதல் தீது.                    ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக்,         காலம் தாழ்த்தாது, துணிந்துசெய்.   தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க,      தூங்காது செய்யும் வினை.           செயல்களைப் பொறுத்துக் காலம்         தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க.    ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 057. வெருவந்த செய்யாமை

(அதிகாரம் 056. கொடுங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை   குடிமக்கள், அஞ்சி நடுங்கும்படி, கொடுமைச் செயல்கள் செய்யாமை   தக்காங்கு நாடித், தலைச்செல்லா வண்ணத்தால்,      ஒத்(து),ஆங்(கு), ஒறுப்ப(து), வேந்து.    தக்கபடி ஆய்ந்து, குற்றம்   மீளநடவாவாறு, பொருந்தத் தண்டிக்க.   கடி(து)ஓச்சி, மெல்ல எறிக, நெடி(து)ஆக்கம்,       நீங்காமை வேண்டு பவர்.         கடுமையாக மிரட்டி, மென்மையாகத்        தண்டிப்பதே, ஆக்க நீதி.   வெருவந்த செய்(து)ஒழுகும், வெங்கோலன் ஆயின்,       ஒருவந்தம்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 056. கொடுங்கோன்மை

(அதிகாரம் 055. செங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 056. கொடுங்கோன்மை   மக்களை அலைக்கழிக்கும், தீமையான, முறைஇல்லாக் கொடுமையான வல்ஆட்சி.   கொலைமேற்கொண் டாரின் கொடிதே, அலைமேற்கொண்(டு),      அல்லவை செய்(து)ஒழுகும், வேந்து.   மக்களை வருத்தி, அலைக்கழிக்கும், ஆட்சி, கொலையினும் கொடிது.   வேலொடு நின்றான்,”இடு”என்றது போலும்,       கோலொடு நின்றான் இரவு.   வன்முறையால் வரிகேட்டல், வேல்காட்டிக் கொள்ளை அடித்தலுக்குச், சமம்.   நாடொறும் நாடி, முறைசெய்யா மன்னவன்,       நாடொறும் நாடு கெடும்.   நாள்தோறும்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 055. செங்கோன்மை

(அதிகாரம் 054. பொச்சாவாமை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 055. செங்கோன்மை   மக்களது நலன்களைக் கருதியே, முறையோடு நடைபெறும் நல்ஆட்சி    ஓர்ந்து,கண் ணோடா(து), இறைபுரிந்து, யார்மாட்டும்,       தேர்ந்து,செய்வ(து), அஃதே முறை.   ஆராய்ந்த, இரக்கம் காட்டாத நடுநிலைத் தண்டனயே முறைஆம்.   வான்நோக்கி, வாழும் உல(கு)எல்லாம்; மன்னவன்       கோல்நோக்கி, வாழும் குடி.   உலகம் இன்மழையால் வாழும்; மக்கள், நல்ஆட்சியால் வாழ்வார்.   அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய்       நின்றது, மன்னவன் கோல்,  …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 054. பொச்சாவாமை

(அதிகாரம் 053. சுற்றம் தழால் தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 054. பொச்சாவாமை  மகிழ்ச்சியிலும், கடமை மறவாமை, மனத்தின்கண் சோர்வு அடையாமை   இறந்த வெகுளியின் தீதே, சிறந்த      உவகை மகிழ்ச்சியின், சோர்வு.        மகிழ்ச்சியில் செயலை மறத்தல்        மிகுந்த சினத்தைவிடத், தீயது.   பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை,       நிச்ச நிரப்புக்கொன்(று) ஆங்கு.    மறதிமை புகழையும் கொல்லும்;         வறுமை அறிவையும் கொல்லும்.   பொச்சாப்பார்க்(கு) இல்லை புகழ்மை; அது,உலகத்(து)      எப்பால்நூ லோர்க்கும்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 053. சுற்றம் தழால்

(அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 053. சுற்றம் தழால்   உறவினர்க்கு வேண்டியன கொடுத்து, அரவணைத்துக் காப்பாற்றும் உயர்பண்பு.   பற்(று)அற்ற கண்ணும், பழைமை பாராட்டுதல்,        சுற்றத்தார் கண்ணே, உள.        ஏழ்மையிலும் பழைய உறவைக்        கொண்டாடல், உறவாரிடமே உண்டு.   விருப்(பு)அறாச் சுற்றம் இயையின், அருப்(பு)அறா      ஆக்கம் பலவும், தரும்.        விருப்பம் குறையா உறவாரால்        அறுபடா வளநலம் அமையும்.   அள(வு)அளா(வு)…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 052. தெரிந்து வினை ஆடல்

(அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் பணியில் அமர்த்தியபின், அவர்அவர் திறன்கள் அறிந்து, கையாளுதல்   0511 .நன்மையும், தீமையும், நாடி, நலம்புரிந்த      தன்மையால், ஆளப் படும்.      நன்மை, தீமைகளை, ஆராய்க;       நன்மையரைப் பணியில் அமர்த்துக. வாரி பெருக்கி, வளப்படுத்(து), உற்றவை      ஆராய்வான், செய்க வினை.  வருவாய் பெருக்கி, வளப்படுத்திப், பயன்கள் ஆய்வான் செயற்படுக. அன்(பு),அறிவு, தேற்றம், அவாஇன்மை, இந்நான்கும்,       நன்(கு)உடையான் கட்டே,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 051. தெரிந்து தெளிதல்

(அதிகாரம் 050. இடன் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் எப்பணிக்கும், தக்காரை ஆராய்ந்து,  தெளிந்து, பணியில் அமர்த்தல்   அறம்,பொருள், இன்பம், உயிர்அச்சம், நான்கின்,       திறம்தெரிந்து, தேறப் படும்.      அறமும், பொருளும், இன்பமும்,  உயிர்அச்சமும், ஆராய்ந்து தேர்க.   குடிப்பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப்பரியும்,       நாண்உடையான் கட்டே, தெளிவு.         நற்குடிமை, குற்றம்இன்மை, பழிக்கு       வெட்குதல் பெற்றாரைத், தெளிக.   அரியகற்(று), ஆ(சு)அற்றார் கண்ணும், தெரியும்கால்,      …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 050. இடன் அறிதல்

(அதிகாரம் 049. காலம் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 050. இடன் அறிதல் வலிமையை, காலத்தை, ஆய்ந்தபின்,  உரிய இடத்தைத் தேர்ந்துஎடுத்தல்.   தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க முற்றும்,       இடம்கண்ட பின்அல் லது.         எந்தச் செயலையும் இகழற்க;         இடத்தைக் கண்டபின், தொடங்குக.   முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண்சேர்ந்(து)ஆம்       ஆக்கம், பலவும் தரும்.    வலியார்க்கும், கோட்டையின் பாதுகாப்பும்         நன்மையும் நல்இடம்தான் தரும்.   ஆற்றாரும், ஆற்றி அடுப; இடன்அறிந்து,…