(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2 தொடர்ச்சி)

திருவள்ளுவர்  : 3

 

  1. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும். (263)

 

நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவா

நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின்.

(கலி. நெய்தல்-8)

 

  1. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்

தொளித்ததூஉ மாங்கே மிகும். (928)

 

. . . . . . . . . காமம்

மறையிறந்து மன்று படும். (1138)

 

தோழிநாங்,

காணாமை யுண்ட கருங்கள்ளை மெய்கூர

நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக்

கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாங் கண்டாய்.

(கலி. முல்லை செய்-15)

 

  1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு. (791)

நாடி நட்பி னல்லது

நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே. (நற்றிணை-32)

 

  1. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர். (580)

 

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சு முண்பர் நனிநா கரிகர் (நற்றிணை)

 

  1. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு. (20)

 

நீரின் றமையா உலகம் போலத்

தம்மின் றமையா நந்நயந் தருளி. (நற்றிணை-1)

 

  1. சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்

காக்க மெவனோ உயிர்க்கு. (31)

 

அறத்தான் வருவதே யின்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில. (39)

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல. (புறம்-31)

 

  1. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர். (528)

 

வரிசை யறிதலோ வரிதே பெரிதும்

ஈத லெளிதே மாவண் டோன்றல்

அதுநற் கறிந்தனை யாயிற்

பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. (புறம்-121)

 

  1. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல். (679)

 

நட்டார்க்கு நல்ல செயலினிது எத்துணையும்

ஒட்டாரை யொட்டிக் கொளலதனின் முன்னினிதே.

(இனியவை நாற்பது-18)

 

  1. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று

நிலையாமை காணப் படும். (349)

அற்றது பற்றெனி லுற்றது வீடு. (திருவாய்மொழி1-2-5)

 

  1. ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே

பேரா வியற்கை தரும். (370)

 

சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசை யற்றால்

அன்றே அப்போதேவீ டதுவே வீடு வீடாமே.

(திருவாய்மொழி-8-8-6)

 

  1. அங்கணத்து ளுக்க வமிழ்தற்று (720)

 

ஊத்தைக் குழியி லமுதம் பாய்வதுபோல்

(பெரியாழ்வார் திருமொழி-4-6-9)

 

(தொடரும்)

நாவலர் சோமசுந்தர பாரதியார்