தலைப்பு-போலி அந்தணர், திருவள்ளுவர், சி.இலக்குவனார் ;thalaippu_poalianthanar_S.Ilakkuvanar

திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த

போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார்

  தமிழ்நாட்டில் இரக்கத்திற் சிறந்து அருள் உளம் கொண்டு மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் தொண்டாற்றுகின்றவர்களை அந்தணர் என்று அழைத்து வந்தனர். அவர்களே மக்களின் தலைவர்களாகவும் மதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் தம்மைப் பிறப்பால் உயர்ந்தவராகக் கூறிக்கொண்டு அந்தணர் என்றும் ஐயர் என்றும் அழைத்துக் கொண்டனர். ஆனால், செயலில் வன்கண்மை பூண்டு தம் கூட்டத்தினர் அல்லாதவரை ஒடுக்கியும் இழித்தும் விலங்கினும் கீழாக நடத்தி வந்தனர். அதனால் வள்ளுவர் அந்தணர் யார் என்று விளக்கம் கொடுத்துப் போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார்.

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழு கலான்”

என்று முழக்கம் விடுத்துள்ளமை காண்க.

–  பேராசிரியர் சி.இலக்குவனார்,

திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர் 

குறளமுதம் : பக்கம் 518-519