![தமிழ் வாழ்த்து, முடியரசன் ;thamizh_vaazhthhu_mudiyarasan]()
தமிழ் வாழ்த்து
வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்
கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்
நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே
ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே
– முடியரசன்
(கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை)
பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்
(தன்வரலாறு) பக்கம் 20
Leave a Reply