நிகழ்-மாணிக்கவாசகர்பள்ளி,தொலைஊடக வகுப்பு01 : nigha_manikkavasakampalli_c.d.lesson01 நிகழ்-மாணிக்கவாசகர்பள்ளி,தொலைஊடக வகுப்பு02 :nigha_manikkavasakampalli_c.d.lesson02 நிகழ்-மாணிக்கவாசகர்பள்ளி,தொலைஊடக வகுப்பு03 : nigha_manikkavasakampalli_c.d.lesson03

 

தமிழர்களின் அடையாளம் திருக்குறள் அமெரிக்க வாழ் தமிழர் உரை

 

காட்சி வழியாகத் தமிழில் இயற்பியல் கணிதம்,  பாடங்களைப்

  பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழா 

 

  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும், அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.

 

     பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம், விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.

  பள்ளிச் செயலர் சோமசுந்தரம் தலைமை தங்கினார்.

  பள்ளிக் கல்வித் தலைவர் மீனாட்சி ஆட்சி, கண்ணங்குடி உதவித்  தொடக்கக் கல்வி அலுவலர் அடைக்கலராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநர் அழகப்பா இராம் மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும், இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் வழங்கிச் சிறப்புரையாற்றுகையில், பின்வருமாறு பேசினார்:-

“அறிவியல் இயற்பியல் மிகவும் முதன்மையானவை. அவற்றின் மொழி கணிதம். இவை வழி வந்தவையே வேதியல் மற்றும் ஏனைய அறிவியல் துறைகள். நாமும், நம்முடைய உலகமும், வகிக்கும் சூரியக் குடும்பமும், அக் குடும்பம் இயங்கும் இந்த அண்ட வெளியும் அதன் விண்மீன் தொகுதிகளும் கொண்டதே இப் பிரபஞ்சம். ஆண்ட இயந்திரம் என்ற இப் பிரபஞ்சத்தின் இயந்திரமயமான இயக்கத்தையும் அதற்கு அப்பாலும் உள்ள அறிவியல் உண்மைகளையும், உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் மூன்று பகுதிகளாக வழங்குகிறது. இதை முதல் நூலாக அமெரிக்காவில் உள்ள ஆனேன்பெர்க்கு அறக்கட்டளையும், கேம்பிரிட்சு பல்கலைகழகமும் வெளியிட்டதைத் தொடர்ந்து இவை  பரிசுகளையும், பல்வேறு நாட்டு அங்கிகாரத்தையும்  உலகளாவிய முறையில் பெற்றுள்ளன. உலக அளவில் பல மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல நாடுகளில் இயற்பியல் துறையில் சாதனை படித்துக் கற்பிக்கபடுகிறது. அதன் தமிழ் வடிவமே நீங்கள் பார்க்கும் இந்த நூல்கள். இயற்பியலை 26 மணியளவில் 52 அரை மணி நேரக் காட்சிகளாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் துணைப் பாடமாக இரு பகுதிகளாகவும் கேம்பிரிட்சு பல்கலைகழகத்தால் எழுதி தயாரிக்கப்பட்டவை இந்த நூல்கள். அதோடு இந்த நூல்களில் வரும் கேள்விகளுக்கு விடையும் மூன்றாவது பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

 

    ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்‘ என்று நமது சூரியக் குடும்பத் தலைவனைப் போற்றி தனது சிலம்புக் காவியத்தை இளங்கோ அடிகள் தொடங்குகிறார். இந்தக் கதிரவன் வரலாறுதான் நம் வரலாறு. அந்த வரலாறுதான் இயற்பியல். அதனை இரு தொகுதிகளாக இப் புத்தகம் விளக்குகிறது. முதல் தொகுதி விண்ணில் இயங்கும் பெரிய உருக்களைப்பற்றிக் காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும்  செல்கிறது. அதனை ‘இயந்திர அண்டம்’என்ற தலைப்பில் விளக்குகிறது.அதனை அடுத்து இரண்டாம் தொகுதி ‘இயந்திர அண்டமும் அதற்கு  அப்பாலும்’என்று பிரபஞ்சத்தில் இயங்கும் மிக சிறிய உருக்களை பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும் சொல்லி செல்கிறது. இதனை இளம் வயது மாணவர்களாகிய நீங்கள் நன்றாகப் பார்த்து எதிர்காலத்தில் அறிவியல் விஞ்ஞானிகளாக வர வேண்டும்” திருக்குறள்தான் தமிழர்களின் அடையாளம் என்றும் பேசினார்.

  குறுந்தகடு  பெரிய திரையில்  வெளியிடப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.  அறிவியல் தொடர்பான காட்சி வழி ஆர்வமூட்டுவதாக இருந்ததாகத் தெரிவித்தனர்.

விழா நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

 

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/