அழை-இயற்கைவேளாண்கருத்தரங்கம் : azhai_iyarkaivelankarutharangam

  தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் திரு. அ.அம்பலவாணன் தலைமையில் நம்மாழ்வார் அவர்களின் 78 ஆவது பிறந்த நாள் விழா பங்குனி 24, 2047 / 06.04.2016 புதன் கிழமை காலை 9.30 மணியளவில் குத்தாலம் வட்டத்தில் உள்ள பாலையுரில் நடைபெற உள்ளது.

  இவ்விழாவில் இயற்கை வேளாண்மை குறித்தும் நம்மாழ்வாருடைய கொள்கை – திட்டங்களை எடுத்துச் செல்வது குறித்தும் ஒரு விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் நம்மாழ்வார் அவர்களோடு பல ஆண்டு காலம் பணி செய்த முன்னோடிகளும் மாநில அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்விழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்

– 9445675961, 9486718853, 9942099925, 9443320954

இந்த அலைபேசிதொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளவும்.

நெல். இரா. செயராமன்.