அழை-சாருநிவேதிதாகநூல்கள் வெளியீடு -azhai_charunivethidaha_nuulveliyeedu அட்டைகள்-சாருநிவேதிதாகநூல்கள் - attaikal_charunivethidabooks

  மாசி 15, 2047 – பிப்ரவரி 27, 2016. மாலை 6.30.

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியிடப்படுகின்றன.

  சென்னையில் நடைபெறுகிற இந்த விழாவில் ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன், தொகுப்பாளர் இலெனின், பாவலர் மனுசிய புத்திரன், இதழாளர் சமசு, கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்திரி சேசாத்திரி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

வெளியிடப்படும் நூல்கள்:

உயிர்மை வெளியீடு:

இச்சைகளின் இருள் வெளி: பாலியல் தொழிலாளி நளினி சமீலாவுடன் உரையாடல்.

வேற்றுலகவாசியின் குறிப்புகள்: புதிய தலைமுறையில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு.

மனம் கொத்திப் பறவை:  ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளின் மறு பதிப்பு.

கிழக்கு வெளியீடு:

பழுப்பு நிறப் பக்கங்கள்: தினமணி இணையத்தளத்தில் வெளிவரும் எழுத்தாளர்களைப் பற்றிய தொகுப்பு.

எங்கே உன் கடவுள்: துக்ளக்கில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

கடைசிப் பக்கங்கள்: நியூசு சைரன் வார இதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு.

அந்திமழை வெளியீடு:

அறம் பொருள் இன்பம்: கேள்வி – பதில்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:

இராசா அண்ணாமலை மன்றம்,

பல் மருத்துவக் கல்லூரி அருகில்,

கோட்டை (Fort) தொடர்வண்டி நிலையம் எதிரில்,

பிரகாசம் சாலை(பிராட்வே), சென்னை.