thiravidathamizharperavai-muthirai-madaledu

காதலுக்கு எதிரான சாதி வெறியை எதிர்த்துக்  கண்டன ஆர்ப்பாட்டம்

சுப.வீரபாண்டியன் அறிக்கை

  அண்மைக்காலமாக காதலுக்கு எதிரான சாதிய வெறி மிகுதியாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அணி திரட்டல்கள் நடைபெறுகின்றன. தங்கள் வீட்டுப் பெண்களைக் காதலிக்கும் இளைஞர்களைப் படுகொலை செய்வது கை, கால்களை வெட்டுவது போன்ற மனிதநேயமற்ற காட்டுவிலங்காண்டிக் காலச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராசு, விழுப்புரம் செந்தில் என்று பட்டியல் நீள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாக உள்ளது.

  இவைபோன்ற சாதிய வெறியாட்டங்களைக் கண்டித்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆனி 24, 2046 / 09-07-2015 வியாழன் காலை 10 மணிக்கு, நடத்தப்பட உள்ளது. சாதி வெறியை எதிர்க்கும் மனித நேயர்கள், சனநாயகவாதிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தோழமையுடன்

 சுப.வீரபாண்டியன்