மாசி 18 /சனி/மார்ச்சு 2 மாலை 5.00

சந்திரசேகர் மண்டபம்,
மேற்கு மாம்பலம் , சென்னை

அனைவருக்கும் வணக்கம்!

சாதி மதவெறியால் மக்களை இரு கூறாகப் பிரிக்கும் ஆரியத்துவ ஆன்மிகத்திற்கு மாற்றாக, சாதி – மத வேறுபாடுகளுக்கு எதிரான வள்ளலாரின் தமிழர் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் வகையில் தமிழ்நாடெங்கும் ‘வள்ளலார் பெருவிழா’ நிகழ்ச்சிகளைj; தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வருகிறது.

வரும் மாசி 18 /மார்ச்சு 2 அன்று மாலை சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் நடைபெறும் “வள்ளலார் பெருவிழா” நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், தமிழர் ஆன்மிகச் செயல்பாட்டாளர் ஐயா சத்தியவேல் முருகனார் முதலானோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

திரு.வி.க. நகரில் வள்ளலார் வழியில் நாள்தோறும் எட்டாயிரம் பேருக்கு உணவளித்து வரும் திருமதி. தனலட்சுமி அம்மையார், கண் பார்வையற்றோருக்குப் பள்ளி நடத்தி உதவிகள் செய்து மறைந்த ஐயா கண்ணியப்ப சுவாமிகள் போன்றோர் விருது அளித்துப் பாராட்டப்படவுள்ளனர்.. தமிழர்களின் வீரக்கலைகளும், கலை நிகழ்வுகளும் நடக்கின்றன.

இந்நிகழ்வில், தாங்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமெனத் தங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யவும் வேண்கோள் விடுக்கிறேன்.

நன்றி!

தோழமையுடன்,
க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 9025162216, 9841949462