(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 979-984-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990

  1. Art – கைவன்மை
    கைத்திறன் என்பது மனிதன் உள்ளத்தில் உள்ள ஆன்ம வுணர்ச்சியையும் இறைவனையும் ஒன்றுபடுத்துவதாகும். இதன் பெருஞ் சிறப்பை உளங்கொண்ட நம் முன்னோர் அழகினை ஆதரித்தனர். அழகிய சோலைகளை அமைத்தனர். அழகொழுகு கட்டடங்களைக் கட்டினர், இயற்கை அழகு வாய்க்கப் பெற்ற இடங்களில் செயற்கை அழகையும் சிறப்புறச் செய்தனர். இயற்கையும் செயற்கையும் கூடிய வழி இன்ப வெள்ளம் பெருக்கெடுத்தோடுகின்றது போலப் பேரழகு பெரும் பொலிவுடன் விளங்கும் அன்றோ? இங்ங்ணம் நம் முன்னோர் பேரழகில் பிறந்தனர். பேரெழிலில் வளர்ந்தனர்; அவ்வழகிலேயே இரண்டறக் கலந்தனர். அவ்வழகினை அகமகிழக் காட்ட வல்லது கைவன்மை ஒன்றேயாகும்.
    நூல் : அறிவியல் கட்டுரைகள் (1949), பக்கம் : 11
    நூலாசிரியர் : பேராசிரியர் பி. இராமநாதன் எம். ஏ.
  2. Outline Map – புறவரிப்படம்
    நூல் : கட்டுரை விளக்கம் (1949)
    நூலாசிரியர் : வித்துவான் ஆர். கன்னியப்ப நாயகர்
    ⁠தமிழாசிரியர் ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
  3. சி. சென்ராயல் – தமிழன்பன்
    1950இல் தமிழரசன், தசாவதானி கணக்காயர் மீ. உ. கான்முகமது புலவர் அவர்கள், சென்ராயல் என்ற பெயரை தமிழன்பன் என மாற்றம் செய்தார்.
  4. தாளப்பேச்சு
    சாவி : சுழட்டவும் இல்லை கழட்டவுமில்லை
    சோறு சமைக்க சலம் எங்கே?
    விதூ : சொல்றதைக் கேளடி தோண்டியைத் தூக்கினேன்
    டுடுப்புன்னு ரெண்டா போச்சிடி
    புத்தகம் : இராசா – விக்கிரமா, திரைப்பாடல் புத்தகம் (1950) பக்கம் : 6
    சொல்லாக்கம் : திரைப்பாடலாசிரியர் சிதம்பரம் ஏ. எம். நடராச கவி
  5. வ. இராசமனோகரன் – வ. கோவழகன் (1950)
    பழனி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1950-51 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது கேடயம் என்னும் பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்தப்பட்டது.
    ‘கோவழகன்’ என்கிற புனைபெயரில், கவிதை, கட்டுரை, கதை எழுதினேன்.
    வ. கோவழகன் (1950)
    (வ. இராசமனோகரன்)
    புலவர் மா. நடராசன், தமிழாசிரியர்
    பழனிநகராட்சி உயர்நிலைப்பள்ளி, என் பெயரை மாற்றினார்.
  6. Black Marketing – இருட்டு வாணிபம்
    இருட்டு வாணிபமும், (Black-Marketing) திருட்டுக் கொள்ளையும், சுருட்டிப் பதுக்குதலும், பிரட்டுப் பித்தலாட்டமும் தமிழனுக்குப் பிடிக்காதன என்பதற்கு இப்பாடல் ஒன்றே போதியசான்றாகும்.
    நூல் : தமிழ் உள்ளம் (1950), பக்கம் : 110
    நூலாசிரியர் : வித்வான் ஜி. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ. பி.எல்.
    ⁠(துணைப் பேராசிரியர்,
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்