வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 2. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. (திருக்குறள் 731)   தள்ளா-குறையாத, விளையுளும்-விளைவிக்கப்படும் பொருள்களும், தக்காரும்-விளைவுக்குக் காரணமான அறிஞரும், தாழ்வுஇலா-குறைவுஇலாத, செல்வரும்-செல்வமுடையவரும், சேர்வது-சேர்ந்திருப்பது, நாடு-நாடு ஆகும். ‘விளையுள்’ என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள்கள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக்கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க வேண்டும். ‘தக்கார்’ என்பது நாட்டின் நலனைப் பெருக்கத்தக்கார் என்பதாகும். கற்றறிஞர், புதியன கண்டுபிடிப்போர், புதியன ஆக்குவோர் (Scholar, Discoverers,…

அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டி

ஏற்காடு (தனி) தொகுதிக்குப் புதிய சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த அக்டோபர் 4-  இல் வெளியிடப்பட்டது. இதன்படி, ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, அதிமுக (பெ.சரோசா), திமுக (வெ.மாறன்) வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

இலங்கைக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் தேவை: த.ஈ.ஆ.அ (டெசோ)

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு உசாவல் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற,த.ஈ.ஆ.அ (டெசோ) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் நடைபெற்று வரும் பொதுவளஆய மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு, திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி தலைமையிலானஇவ்வமைப்பு அமைப்பு, மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. எனினும் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரினப்படுகொலையை வெறும் போர்க்குற்றமாகவும் மனித உரிமை மீறல்களாகவும் மட்டுமே குறிப்பிட்டுள்ளது வருந்தத்தக்கது.

தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

அன்புடையீர், வணக்கம்.  ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை அமைக்க விரும்புகிறோம்.  ஆகவே இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் சூழ்நிலையில், எந்த கட்சியின் தலையீடும் இல்லாத வகையில் இந்த இல்லத்தை உடனடியாக நாம்…

தீக்குச்சி – கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

  கலைவளர் அறுபத்து நான்கு கயமையைப் பொசுக்க நாமும் தவத்தீக் குச்சிகள் கொண்டே தீய்த்திட்டே தமிழைக் காப்போம்   கவலைகள் சொன்ன ஆசான் கவனமாய்த் தீர்க்க நாமும் புவனத்துத் தமிழ்த்தாய் எண்ணி பூமியில் ஓங்கி வாழ்வோம்!   ஒளியினை வழங்கும் குச்சி ஒண்டமிழ் காக்கும் வேள்வி பழியினைப் போக்க என்றும் பாவத்தைப் பொசுக்கி வெல்வோம்!   விழிகளின் தோழன் ஒளியே விண்டிடும் தீக்குச்சி வழியே தளிர்விடும் அறத்தைக் காக்க தீக்குச்சியால் சமைத்தே ஈவோம்!   தீமைகள் கலையும் ஆசான் பாக்குச்சி சமைத்து நானும் பாதைவழி…

ஆய்வுக் களம்

  தாய்ப்பால் வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத் தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின் கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர் நல்குரவு சேரப்பட்டார்                                                 நல்லாதனார்,      திரிகடுகம். 84  ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர் தளர் நடை வருத்தம் வீட அலர் முலைச் செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து அமளித் துஞ்சும் …      கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பா ணாற்றுப்படை, ,249- 252   தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படி புனைந்த நல்ல சிறு…

பூட்டப்பட்டது அண்ணா மேம்பாலம்!

  மாணாக்கர் எழுச்சி!   முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டியும் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன்  முதலான தமிழ் ஆர்வலர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டியும்  மாணாக்கர் போராட்டம் நாடெங்கும் நடைபெறுகிறது. அதில் ஒன்றாக, வரலாற்றில் முதன்முறையாக சென்னை அண்ணா மேம்பாலத்தைச் சங்கிலியால் பூட்டிப் போக்குவரத்தை முடக்கினர்  மாணாக்கர்கள். இப்போராட்டத்தில் 70 மாணாக்கர்களும் இயக்குநர் கௌதமன்  முதலான உணர்வாளர்கள் பலரும் தளையிடப்பட்டுள்ளனர். போராட்டங்கள் மேலும் பரவும் முன்னர் அரசு தலையிட்டு நல்ல முடிவு காணும் எனப் பொதுமக்கள்…

பரிவுகாட்டப்பட வேண்டியவர்களைப் பாழ்கிணற்றில் தள்ளலாமா?

சிறப்புமுகாம்வாசிகள் மடல் அனுப்புநர் : இலங்கைச் சிறைவாசிகள் இலங்கைச் சிறப்புச்சிறை மத்தியச் சிறை வளாகம் திருச்சி ஐயா வணக்கம். நாம் இந்த  மக்களாட்சி நாட்டின் விருந்தாளிகள். எம்மீது ஐயத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுப், பிணையில் வெளியே வந்தவர்கள் . வழக்கை முடிக்காமல் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள் எனும் அடிப்படையில் வெளிநாட்டவர் தடுப்புச் சட்டம் 3[2]உ-ஐப் பயன் படுத்தி எம்மைச் சிறப்பு முகாம்களில் அடைக்கின்றீர்கள். எமது விடுதலைக்கு நீண்ட காலம் ஆகும் என்பதைக் கருத்திற் கொண்டு உச்சநீதி மன்றம், உயர் நீதி மன்றங்கள்…

மாமூலனார் பாடல்கள் 2 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   அகம்                                                                                                                                                                பாலை 1         வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,   5           “சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்” என்ற சொல்தாம் மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,   10        அழல் போல் வெங்கதிர்…

மும்பை சு.குமணராசனுக்குப் பாராட்டு

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில்  பத்து நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ”தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் இதழியல் பணிக்காகப் பாராட்டப் பெற்றார்.   விழாவில் பாலச்சந்திரன் இ.ஆ.ப. பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.

மருத்துவப் பண்டுவம் கடனாளி ஆக்குகிறது: சசி தரூர்

சென்னை : ”மருத்துவப் பண்டுவத்திற்காகக், கடனாளிகளாகும் நிலை, இந்தியாவில் நிலவுகிறது. எனவே, குறைந்த செலவில், தரமான மருத்துவம் வழங்க, மருத்துவர்கள் முன்வர வேண்டும்,” என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கேட்டுக் கொண்டு உள்ளார். இராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 18 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், பட்டயப்  படிப்புகளில், சிறப்பிடம் பெற்ற, 51 மாணவ, மாணவியருக்குத் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றுகளை வழங்கி, சசி…

காரைக்கால் பேயின் பெண்ணியம் – முனைவர்.ப. பானுமதி

    ஆண்களுக்குத் துணையாக நின்று  அவர்களின் வாழ்வில் சுவை சேர்ப்பவர்கள் பெண்கள். தமிழகம் கண்ட பெண்மணிகள் பலரும் “தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்னும் வள்ளுவரின் வாக்கின் படி சிக்கல்களின்போது தம் கற்பையும் நிலை நிறுத்திக் கொண்டு தம் குலத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் துணிச்சலுடன் வாழ்ந்து வரலாறு படைத்துள்ளனர். அதே சமயத்தில் அநீதி கண்ட போது ஆர்த்தெழுந்து அதனை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்தி வெற்றியும் பெற்றுள்ளனர். மன்னனின் மடத்தனத்தைச் சுட்டிக் காட்டி, முலை திருகி மூட்டிய நெருப்பால் ஊரை…