பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்-மறைமலை உரை

சென்னைக் கம்பன்கழகம் சிற்றிலக்கியச் சுற்றுலா பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்- முனைவர் மறைமலை இலக்குவனார் உரை பேரா.மு.இரமேசிற்குத் தமிழ்நிதி விருது வழங்கல் இராம.வீரப்பன் தலைமை மார்கழி 7, 2045 / திசம்பர் 22, 2014 சென்னை  

கலைச்சொல் தெளிவோம்! 6.] வழக்குரைஞரும் தொடுநரும் – இலக்குவனார் திருவள்ளுவன்

வழக்குரைஞரும் தொடுநரும்   பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல் ஆசிரியர் உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் (பட்டினப்பாலை :169 – 71) பலவாகிய கேட்டற்றொழிலையுடைய நூற்றிரளை முற்றக்கற்ற பெரிய ஆக்கினையைடைய நல்ல ஆசிரியர் வாதுசெய்யக்கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடிகளும், என உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். எனவே, உறழ்(3) என்பது வாதிடுதல் என்னும் பொருளில் வந்துள்ளதை உணரலாம். இப்பொழுது நாம் வழக்குரைஞர் என்னும் சொல்லையே பொதுவான சொல்லாகக் கருதிப் பயன்படுத்துகிறோம். ஆட்சியியல், மனைஅறிவியல், சட்டவியல், ஆகியவற்றில் advocate…

துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம் :திருச்சி.

  திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி  தமிழாய்வுத்துறை தை 22, 23. 2046 – 2015 பிப்.5,6  துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம் இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆத்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் வளர்ச்சி பெற்றிருந்தால் கட்டுரையாக வழங்கலாம். கட்டுரை வழங்கி நேரில் வர இயலாதவர்கள் கருத்தரங்க நாளில் இந்திய நேரப்படி பகல் 1.30 முதல் 4.30 வரை இணையப்பேசி(skype_யில் உரையாற்றலாம். அதற்கான…

கலைச்சொல் தெளிவோம்! 5.] உயரமும் உம்பரும் : இலக்குவனார் திருவள்ளுவன்

உயரமும் உம்பரும்     height-உயரம்எனவேளாணியல், பொறி-நுட்பவியல், கணக்கியலில் பயன்படுத்து கின்றனர். ஆனால், elevation-உயரம்எனவேளாணியல், புவியியல், மனைஅறிவியல், மருத்துவயியல்ஆகியவற்றில்பயன்படுத்துகின்றனர். அதேநேரம், உயிரியல், பொறி- நுட்பவியல், கணக்கியல், கால்நடைஅறிவியல்ஆகியவற்றில்ஏற்றம்எனப்பயன்படுத்துகின்றனர். ஆட்சியியலில்உயர்வு, உயர்த்துதல், ஏற்றம்எனவும்வேறுபொருளில்கையாளப்படும்பொழுதுமுன்புறத்தோற்றம், மேடுஎனவும்பயன்படுத்துகின்றனர். எனவேஇரண்டையும்வேறுபடுத்திக்குறிப்பிடவெண்டும். சங்கஇலக்கியங்களில்உம்பர், உவணம்என்னும்சொற்கள்உயரத்தைக்குறிக்கின்றன. உம்பர்வரும்சிலஇடங்கள்வருமாறு: பன்மலர்க்கான்யாற்றுஉம்பர்க்கருங்கலை (நற்றிணை : 119.6) ஈனும்உம்பரும்பெறல்அருங்குஉரைத்தே (ஐங்குறுநூறு : 401.5) உம்பர்உறையும்ஔிகிளர்வான்ஊர்பாடும் (பரிபாடல்: 11.70) இமையத்துஉம்பரும்விளங்குக! (கலித்தொகை : 105.75) உம்பர்என்பதுஉயர்ச்சியைக்குறிக்கிறது. எனினும்சிலஇடங்களில்ஓரிடத்திற்குஅப்பால்உள்ளதொலைவுஅல்லதுஉயரத்தைக்குறிக்கிறது. உயரம் – height உம்பர் – elevation, elevated spot – இலக்குவனார் திருவள்ளுவன்  

சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னையில் திருவையாறு  தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு இலக்குவனார் திருவள்ளுவன்     அமிழ்தினும்இனிய தமிழ்க் கடலில்நஞ்சு ஆறாகப் பெருகிக் கலந்தால்அழிவுதானே நமக்கு!ஆனால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அழிப்போருக்குஉதவுகிறோம். அல்லதுகண்டும் காணாமல்இருப்பதன் மூலம் மறைமுகமாகத்துணைபுரிகிறோம்.திசம்பர்த் திங்களுக்கு உரிய பெருமைகளுள் ஒன்று, ‘சொல்லில்உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை உணர்த்தி அதனைத் தொழுது படித்திடச் சொன்னபாரதியார்பிறந்த திங்கள் என்பது. இந்தத் திங்களில்தான் சென்னையில் சிலஆண்டுகளாகநஞ்சு கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவையாறு தமிழிசைப் பரம்பரைக்குரிய ஊர்தான். என்றாலும் நமக்கு என்னநினைவிற்கு வர வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர்களின் பொருளால் தமிழர்களால்கட்டப்பட்ட மேடையில் தமிழ்ப்பாட்டுப்…

கலைச்சொல் தெளிவோம்! 7. ] மூத்த குடிமக்களை மூதாளர் என்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  மூதாளர் – இலக்குவனார் திருவள்ளுவன்   மூதாய், மூதாளர், மூதாளரேம், மூதாளன், மூதிலாளர், மூதிலாளன், மூதிற்பெண்டிர், மூதின் மகளிர், முதலான சொற்கள் மூலம் புலவர்கள் மூத்தோரைக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள், மூதாளன், மூதாளர் என வரும் இடங்கள் வருமாறு : நரைமூ தாளர் நாயிடக் குழிந்த (மருதன் இளநாகனார் : புறநானூறு : 52.14) நரைமூ தாளர் கைபிணி விடுத்து (அகநானூறு :366.10) பெருமூ தாளர் ஏமஞ் சூழப் (முல்லைப்பாட்டு : 54) முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை (பதிற்றுப்பத்து: 76.24) இவற்றின் அடிப்படையில்,…

கலைச்சொல் தெளிவோம்! 4.] தோலும் அதளும் : இலக்குவனார் திருவள்ளுவன்

   தோலும் அதளும் – (skin and leather)   தொல்லியல், பொறிநுட்பவியல், கால்நடையியல் ஆகியவற்றில் leather-தோல் எனப்படுகின்றது; மனையியலில் பதனிட்ட தோல் எனப்படுகிறது. வேளாணியல், தொல்லியல், மருத்துவயியல், கால்நடையியல் ஆகியவற்றில் skin-தோல் எனப்படுகின்றது. இவற்றை வேறுபடுத்திக் கூற வேண்டும். அதளன்(1) (அகநானூறு 274.6) அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண் ஆற்றுப்படை 151) அதட்பள்ளி- தோற்படுக்கை இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி – மதுரைக் காஞ்சி 310 மெய்உரித்து இயற்றிய மிதிஅதள் பள்ளித் – மலைபடுகடாம் 419 ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் –…

தாய்போல யாருமுண்டோ? – செயராமர், மெல்பேண்

தலைவருடி எனையணைத்து தனதுதிரம் தனைப்பாலாய் மனமுருகித் தந்தவளே மாநிலத்தில் தாய்தானே மடிமீது எனைவைத்து மாரியென முத்தமிட்டு விழிமூடித் தூங்காமல் விழித்தவளும் தாய்தானே படிமீது கிடந்தழுது பலமுறையும் வேண்டிநின்று பாருலகில் எனைப்பெற்ற பண்புடையோள் தாய்தானே விரதமெலாம் பூண்டொழுகி விதியினையே விரட்டிவிட்டு வித்தகனாய் இவ்வுலகில் விதைத்தவளும் தாய்தானே மலடியென மற்றவர்கள் மனமுடையப் பேசிடினும் மால்மருகன் தனைவேண்டி மாற்றியதும் தாய்தானே நிலவுலகில் பலபிறவி வந்துற்ற போதினிலும் நிம்மதியைத் தருவதற்கு நிற்பவளே தாய்தானே தாய்மைக்கு இலக்கணமே தாய்மைதான் ஆகிவிடும் தாய்போல இவ்வுலகில் தகவுடையார் யாருமுண்டோ வேருக்கு நீராகத் தாயிருப்பாள் எப்போதும்…

புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் – வைகை அனிசு

தேனிமாவட்டத்தில் புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் தேனிமாவட்டத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது ஆடு வளர்க்கும் தொழில். நமது நாட்டில் கால்நடைக்கணக்கெடுப்பு இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடைப் பேணுகை, பால்வளம், மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. இக்கணக்கெடுப்பு 19191 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 19ஆவது அகில இந்தியக் கால்நடைக் கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்டுக் கால்நடைப் பேணுகைத்துறை புள்ளியல் பிரிவு வாயிலாக வெளியிடப்படுகிறது. இக்கணக்கெடுப்பு கால்நடைகளின் இனவளர்ச்சிக் கொள்கைகளை வழிவகுப்பதற்குப் பயன்படுகிறது. கால்நடைகளின் நலவாழ்வு…

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை – வைகை அனிசு

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை தேனிப்பகுதியில் பகுதியில் ஆலைக் கழிவுகளால் நீர்க்காக்கை இனங்கள் அழிந்து வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், வைகை அணை, அ.வாடிப்பட்டி பகுதிகளில் காப்பித்தொழிற்சாலை, சர்க்கரைத்தொழிற்சாலை, சாயத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரோடு கலந்து விட்டன. மேலும் கழிவுநீர்களை இப்பகுதியில் உள்ள ஊருணிகளில் இரவோடு இரவாக ஊற்றி வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள், பறவைகள் இறந்து வருகின்றன. நவம்பர் மாதம் முதல் பிப்பிரவரி மாதம் வரை இப்பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்தத்தண்ணீரில் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள், கொக்குகள்,…