தமிழ்க்குடிலின் கவிதைப் போட்டி
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெறுக! பரிசு வெல்லும் வாய்ப்பினை பெறுக! அன்புத் தோழமைகளுக்கு, ‘தமிழ்க்குடில்’ பொறுப்பாளர்களின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு “தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதைப் போட்டியினைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். கவிதைப் போட்டி விதிமுறைகள்: தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம். கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது எனக் குறிப்பிடவும். ( எ.கா.)…
வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 3/3 – இராம.கி.
(வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 தொடர்ச்சி) 3/3 அடுத்த கதை மதுரையில் நடந்ததுபோல் புகாரில் நடந்த சகக்கிழத்திகள் கதையாகும். ………………………………………………………………. இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 17-19) புகார்வணிகன் ஒருவனுக்கு இருமனைவிகள். (ஒருவனுக்கு இருவரென்பது கண்ணகியைப் பெரிதும் பாதித்திருக்கலாம்.) இருவருக்கும் ஓரிரு வயதுவேறுபாட்டிற் குழவிகளுண்டு. வீட்டுக் கிணற்றுச்சுவரில் உட்கார்ந்த மாற்றாள்குழந்தை தவறிவிழுந்துவிட அதைக்கண்ட ஒரு கிழத்தி “வேண்டுமென்றே திட்டமிட்டுத் தள்ளிவிட்டதாய் மாற்றாளும், பங்காளி, உறவினரும், ஊராரும் சொல்வரோ?” என்று…
வெள்ளப் படிப்பினை : இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக!
இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக! கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. (திருவள்ளுவர், திருக்குறள் 15) கெடுப்பதும் கொடுப்பதும் மழைதான். எனினும் இதன் விளைவுகளும் நன்மைகளும் பெருகுவதும் குறைவதும் மக்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றன. இதனை இப்போதைய கடும் மழையும் கொடுமழையும் உணர்த்தியுள்ளன. எங்கும் வெள்ளக்காடு! காணுமிடமெல்லாம் மனைப்பொருள்கள் மிதப்பு! பல இடங்களில் உயிரற்ற உடல்கள் நீரில் அணிவகுப்பு! எங்கும் அவலம்! இவையே சென்னை, கடலூர் முதலான நகரங்களின் துன்புறு நிலை! பலர் கூறுவதுபோல், நீரிருந்த இடத்தைநோக்கி நீர்…
பழமொழியில் விளைந்த கனிகள் – இ. சூசை
காண்ஒளி வந்தபின்னும் வானொலி விருமபும் நேயர்களே! வணக்கம். தமிழின் வாழ்வில் பட்டறிவில் விளைந்தவை பழமொழிகள். முன்னோர் கூறிய பழமொழிகள் நம்மை நெறிப்படுத்தும் உயர்பண்பாளர்கள் ஒருபோதும் அழிசெயல்திட உடன்படமாட்டார்கள். கடுங்கோபம் வந்தாலும் சான்றோர் வைதாலும், தீய செயல்களைச் செய்திட உடன்பட மாட்டார்கள். உயர்பண்பு இல்லாத இழிந்தோர் தீங்கு செய்யும்போது ஆத்திரம் வரும். மாண்போடு பிறந்து வாழ்ந்தவர்கள் கோபப்படுவதில்லை. . இதனைப், பழமொழி நானூறு(51), “நல்ல விறகிலும் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா வாறு” என்கிறது. நிறைய, தரமான விறகினால் சூடேற்றினாலும், தண்ணீர்…
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளரான சமாலுதீன் முகமது சாலி [(Jamaludeen Mohamed Sali /ச.மு.சாலி/ J.M.Sali) (76 : பங்குனி 28, தி.பி. 1970 ஏப்பிரல் 10, 1939)], இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க தென்கிழக்கு ஆசியாவின் இலக்கிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதனைத், தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இவ்விருது, தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 தொடர்ச்சி) 07 ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 ) செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா…
மின்னூல் : தூண்டுகோல் [சிறுகதைகள்] இரா.பாரதி
தூண்டுகோல் – சிறுகதைகள் – இரா.பாரதி மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – படைப்புப் பொதுவுடைமை / Creative Commons Attribution-Non Commercial-NoDerivatives 4.0 International License. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். அட்டைப்படம் – மனோசு குமார் – socrates1857@gmail.com என்னுரை படைப்பாளி, தான் காணவிரும்பும் சமுதாயத்தைத் தனது கற்பனைத்திறனைப் பயன்படுத்தி வடித்துக்காட்டுவதுதான் சிறுகதை. எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் சமூகச் சீர்கேடுகளை வெளிப்படையாக எதிர்க்க இயலாத காலக்கட்டத்தில் அவற்றைத் தனது எழுத்தில் வடித்துக்காட்டி சமூகத்தினரை விழிப்புணர்வு அடையச்செய்கிறான். இத்தகைய நோக்கில் பல சிறுகதைகள்…
மனத்தில் பதிந்த மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்
மனத்தில் பதிந்தவர்கள் : பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன் பாவேந்தருடன் பழகுதற்கியலாத வாய்ப்பை உடன்பிறப்பு மன்னர்மன்னனுடனும் எழுத்தாளர் தமிழ்வாணனுடன் கிடைக்காத தொடர்பைச் உடன்பிறப்புகள் லேனா, இரவி தமிழ்வாணன் ஆகியோரிடமும், இசைமேதை சீர்காழியுடன் பெறாத தோழமைப் பேற்றினைத் தம்பி மரு.சிவசிதம்பரத்திடமும் பெற்றதைப் போல மூத்த தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களுடன் பழகக் கிடைக்காத குறையை இறைவன் எனக்குப் பேராசிரியர் மறைமலையுடனான நட்பில் அருளியிருக்கிறான் என்கிற நிறைவு என் நெஞ்சில் நிரம்பவுண்டு. பேராசிரியர் மறைமலை அவர்களைப்ப்றறி…
கண்ணப்பர்விழா இன்று(13.12.2015) நடைபெறுகிறது.
பேரா.மருத்துவர் முதுமுனைவர் கண்ணப்பரின் 81 ஆம் பிறந்தநாள் விழா, 5 ஆம் ஆண்டு நினைவு நாள் மறைமலை இலக்குவனார் முதலானவர்க்கு விருது வழங்கும் விழா இசைப்பொழிவு நூல் வெளியீடு கார்த்திகை 27, 2046 / திசம்பர் 13, 2015 சென்னை
வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! – மறைமலை இலக்குவனார்
வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! திட நெஞ்சுடனே களத்திலிறங்கிப் பிடுங்கிப் பாம்புகள் கண்(டு)அஞ்சாமல் மழைவெள்ளத்தில் உள்ளம் சுருங்கி ஒடுங்கித் துன்புறும் மக்களை அணுகி உணவும் உடையும் உறுபொருள் பலவும் வழங்கும் பணியில் முனைந்து செயற்படும் ஆற்றல்சார் இளைஞர் கூட்டத்தினரே! வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் சொல்லாமல் கொடுத்த வள்ளல்கள் போலவே அழியாப் புகழை அடைந்தீர்!வாழிய! முனைவர் மறைமலை இலக்குவனார்
விழுந்தது மழை! எழுந்தது மனிதம்! – இராசி. அழகப்பன்
நான் கடலுக்கே போகிறேன்! – மாவீரன் மணிகண்டன்
அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே! நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்! பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்! கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன், உனக்காகக் கீழ் இறங்கினேன்! கொஞ்சமும் நினைவு இல்லையா? வஞ்சனை செய்கிறாயே… என்னை அழைத்து விட்டு…! வறண்ட என் நிலக் காதலி நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்…. சுரண்டி அவள் மேனியெல்லாம் பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்! நனைத்து அணைப்பதாலே உடல் குளிர நலம் கொள்வாள்! அனைத்தும் மறுதலித்து, கடல் சேரவே வழி செய்தாய்! குளம் குட்டை ஏரியென அங்கங்கே தங்கியிருந்தேன்! வளம் கொழித்த அத்தனைக்கும் பங்கம்…