செந்நெருப்புக்காரியே! – தமிழினி தமிழினி

செந்நெருப்புக்காரியே! பெருமை கொள்கிறேன்! முகத்தில் மஞ்சள் எங்கே? காலில் கொலுசெங்கே? காதில் தோடு எங்கே? நெற்றியில் பொட்டெங்கே? அழகிய புன்னகை எங்கே? கோதி முடித்த கூந்தல் எங்கே? கண்ட கனவெங்கே? பஞ்சணையில் உருண்டு படுத்த தூக்கம் எங்கே? பூப்பொன்ற கை, மரம் போன்று காய்த்ததேன்? பூக்கொய்த கையில் ஆயுதம் தரித்ததேன்? ஊரில் உன்னை அழகி என்பர் உன் வயிறும் ஒட்டிப்போனதேன்? பருவத்தில் உன் பின் ஒரு கூட்டம் உன் பருவம் சொன்னது என்ன? எனக்கென ஓர் உலகம் என்றோ! நீண்ட குதி செருப்பணிந்து பஞ்சாபிச்…

அதிமுகவினர் இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம் – அஇஅதிமுக

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாகக்கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.   இது தொடர்பாகத் தமிழ் இந்து நாளிதழுக்கு அதிமுக நிருவாகி ஒருவர் அளித்த பேட்டியில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாகக் கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம். 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி) 06   “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே…

‘எதிரும் புதிரும்’: வெள்ள அரசியல் குறித்து இலக்குவனார் திருவள்ளுவன்

  விண் தொலைக்காட்சி ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் வெள்ள அரசியல் குறித்த கலந்துரையாடலில் இலக்குவனார் திருவள்ளுவன் விண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் கார்த்திகை 26, 2046 / திசம்பர் 12, 2015 சனியன்று இரவு 7.00 மணிக்கு வெள்ள அரசியல் குறித்த கலந்துரையாடலில் நான் பங்கேற்கிறேன் மறு ஒளிபரப்பு அன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம். வாய்ப்புள்ளவர்கள் காண்க. வெள்ளத்தில் மீண்டவர்கள் கருத்து வெள்ளத்தில் மூழ்கலாம்.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

மழையே ! – க.தமிழமல்லன்

ஓலமிட் டழுதிடும் உன்மகற் குதவுநீ! மண்மேல் மட்டும் மழைநீ பெய்தால் மக்களுக் கெதுவும் சிக்கல் இல்லை! மனைக்குள் புகுந்தாய், மாடியில் ஏறினாய், மயக்கிடும் திருடன் புகுவது போலே! மகிழுந் தெல்லாம் மறைந்து மூழ்கிட, மழையே பொழிந்தாய்! மடைகளை உடைத்தாய், ஏரியைத் திறந்தாய், ஏழையர் வாட, மாரியே வெளுத்தாய்! மாந்தர் வாழ்க்கை, குலையச் செய்தாய்! தலைமேல் ஏறினாய்! நிலைமையோ மோசம்! தலைநகர் எங்கே? மின்விசை உணவு,வெண்பால்,குடிநீர் என்னும் தேவைகள் எங்கே தொலைத்தாய்? பேருந் தில்லை, சிற்றுந் தில்லை! யாரும் பணத்தை எடுத்திட வழியிலை ! கன்னெய்…

உரிய தமிழ் கற்பிப்போம் ! – பாவலர் கருமலைத்தமிழாழன்

தமிழ்படித்தால்  பூரித்தே  வாழ்ந்திடுவேன்! ஆங்கிலந்தான்  அறிவுமொழி  ஆங்கி  லத்தில் அருங்கல்வி  கற்றால்தான்  ஏற்றம்  என்றே தீங்கான  எண்ணத்தில்  தமிழர்  நாமோ திசைமாறிச்  செல்கின்றோம்  வழியை  விட்டே மாங்குயிலைத்  தன்குஞ்சாய்  வளர்க்கும்  காக்கை மடத்தனம்போல்   குழந்தைகளைப்  பயிற்று  கின்றோம் தாங்குகின்ற  வேர்தன்னை  மறந்து  மேலே தரைதெரியும்  மரந்தன்னை  புகழு  கின்றோம் ! ஆங்கிலத்தைப்  படித்தால்நீ  பெருமை  யோடே அரும்வாழ்வு  வாழ்ந்திடலாம்  பூலோ  கத்தில் பாங்கான  சமற்கிருதம்  படித்தால்  நீயும் பான்மையுடன்  வாழ்ந்திடலாம்  மேலோ  கத்தில் ஏங்குகின்ற  படியிந்த  இரண்டு  மின்றி ஏலாத  தமிழ்படிக்கப்  போவ  தாக…

தீ மூட்டிய கவியரசே! புதுவை ஐயாவே! – ஈழம் இரஞ்சன்

தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தேழாவது பிறந்தநாள் வாழ்த்துகள்!                நள்ளிரவின் கீதத்தை நடுப்பகலின் கோபத்தை காட்டுக்குள் இருக்கும் வேங்கையை கவிதை எனச் சொல்லுக்குள் போட்டுத் தீ மூட்டிய கவியரசே! இன்று (திசம்பர் 3) உனக்குப் பிறந்த நாளாம்! தாயகப் புதல்லவர்களைச் சீராட்டி அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த ஆசானே! அறுபத்தேழை எட்டி விட்டாய் அகவைய ஒன்றால்… உன்னை அவ்வளவு எளிதாக எழுதி விட என்னால் முடியாது.. என் எழுதி(பேனா) முனையோ வன்னிப்பரப்பின் புழுதியில் மேடு பள்ளம் எல்லாம் சென்று நிதானம் இழந்து நடுக்கத்துடன்…

இணையவெளியில் பாரதியார் விழா – மறைமலை இலக்குவனார்

இணையவெளியில் பாரதியார் விழா திசம்பர் 11: பாட்டுக்கொரு புலவர் பாரதியார் பிறந்தநாள். மழைத் தொல்லையில் வெளியே விழாவுக்குப் போகமுடியவில்லை. வீட்டிலேயே கணினிமுன் அமர்ந்து கொண்டாடுவோம். பாரதியாரைப் பற்ரிய உங்கள் கவிதையை, கட்டுரையை ஒருங்குறி எழுத்தில் வடித்துக் கவிதை விக்கிக்கு அனுப்புங்கள். உங்கள் முகநூல் கணக்கைக் கொண்டு கவிதை விக்கியில் சிக்கலின்றி நுழையலாம் .உடனடியாகத் தரவேற்றம் செய்யலாம். உங்கள் பேச்சைக் கூட எம்பி4 கோப்பில் பத்து மணித்துளிகளுக்கு மிகாமல் அனுப்பலாம். வாருங்கள். உலகப்பெரும் பாவலன் பாரதியின் புகழ் பரப்புவோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1   பாட்டுக்கு ஒரு புலவராம் மாபெரும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் சமய நல்லிணக்கம், இறையொருமை, சாதி மறுப்பு, விடுதலை வேட்கை, நாட்டுப்பற்று, வீர உணர்வு, கல்விப்பற்று, தொழில் நாட்டம், பெண்ணுயர்மை, அறிவியல் உணர்வு, பொதுமை வேட்கை, வினைத்திறம் முதலிய பண்புகள் இணைந்த ஓர் ்அறிவுப் பெட்டகமே ‘புதிய ஆத்திசூடி’.   சப்பானிய மொழியின் குறுவரிப்பாடல்களைப் புதுமையாகக் கருதும் நாம், தமிழில் நாலடி வெண்பா, முவ்வரிச் சிந்து, ஈரடிக்குறள், ஒற்றையடி வரிப்பா(ஆத்திசூசடி, பொன்றை வேந்தன், வெற்றி வேற்கை முதலியன) ஆகியவற்றின் மரபார்ந்த சிறப்புகளை உணர்ந்து…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 108   கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி)   உணவு முதற்பல ஒன்றும் விரும்பாள் காதலன் பிரிவினும் சாதலே இனிதெனத் துயரம் பெருகத் தொல்நோய்ப் பட்டு இழந்தன ளெழிலை; இவள்சோ தரரை “வாடிய மலரென மங்கை தோன்றிடக் காரணம் யாதெனக்” கண்டோர் வினவ “நோயா லவளும் நோத லுற்றனள் தேர்ந்த மருத்துவர் ஓர்ந்து பற்பல மருந்துங் கொடுத்தனர்; மன்னிய நோயும் தீர்ந்திடக் காணேம்! செய்வதென் யாமும்” என்றேயியம்பிக் கன்றிய மனதுடன் உண்மை வெளிப்படின் உற்றிடுந் தீங்கென எழிலர சியுந்தன் *இகுளை யோடும்…

செங்கொடியூர் சென்று வந்தேன்! நீங்கள்….தமிழ் இராசேந்திரன்

தமிழ் உணர்வாளர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய தமிழ்க் கோயில்….. தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சியிலிருந்து 6  புதுக்கல்  தொலைவில் உள்ள , நேர்மை மிகு ஆட்சிப் பணியாளர் உ.சகாயம் அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள, ஒரே சமையல் , ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டில் பல குடும்பங்கள் ஒன்றிணைந்து பெருங்கூட்டுக் குடும்பமாக வாழுகிற, பொது உடைமை வாழ்வு (Community Life) என்ற அடிப்படையில் இயங்குகிற, திருமணத்தை மற்றவர் நலனுக்காகப் புறக்கணித்து, முதிர் கன்னியாக, ஈக வாழ்வு நடத்தும் மகேசு என்ற நேர்மையின் இலக்கணமாக…