திருக்குறள் விக்கி – குறள் நிகழ்வு ஒருங்கிணைப்புத் தளம்

உலகெங்கும் இயங்கும் திருக்குறள் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்” குறள் பரப்பும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்குடனே திருக்குறள் விக்கி தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் நடத்தும் கூட்ட நிகழ்ச்சிகளை எம்பி4  வடிவத்தில் அனுப்புங்கள். காணொளி நறுக்குகளாகப் பதிவேற்றம் செய்யலாம். பத்துப் பத்து மணித்துளிகள் கொண்ட பதிவுகளாக அமைக்கவேண்டும். அப்போதுதான் அலுப்பு தட்டாமல் கேட்கலாம். உங்கள் ஊரில் இருபதுபேர் கூடிய கூட்டமாக இருப்பினும் வலைத்தளம் மூலம் ஆறு கோடித் தமிழரும் கேட்கும்படிச் செய்யலாம் அல்லவா?  வான்புகழ் வள்ளுவம் மானிடம் தழைக்க வாய்த்த மாமருந்து.இன்றைய சூழலில் உலகம் முழுமையும் அமைதி நிலைத்திட அல்லல் தொலைந்திட…

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

1/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2      உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.     சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர்…

கம்பன் கழகம், காரைக்குடி : மே மாதக் கூட்டம், 2016

  67 ஆம் கூட்டம்   அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூட்டம் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா திருமண மண்டபத்தில் சித்திரை 24, 2047 / மே 07, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்நிரல் இறைவணக்கம் – செல்வி எம். கவிதா வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராசா அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு பற்றியும் காரைக்குடி தாய் கம்பன் கழகச் சீராட்டு…

செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! செம்மொழி பேசும் பெருமை பெற்ற, நம்மினம் அறிவில் வறுமை உற்று, ஐம்புலன் கருகி ஆற்றல் இழந்து, பொம்மையைப் போலப் பேசாமல் இருந்து, செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! இம்முறை யாவது சிந்தனை செய்து, சிம்மம் போலச் சீறி எழுந்து, செம்மை மிகுந்த தலைவன் கையில், நம்தமிழ் நாட்டின் ஆட்சியைக் கொடுப்போம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

கருமலைத் தமிழாழனின் ‘மண்ணும் மரபும்’ – கவிதைத் தொகுப்புக்கு மா.செங்குட்டுவன் அணிந்துரை

மண்ணும் மரபும் – இளைய  தலைமுறையினருக்கு  இனிய  அறவுரைகள் நிறைந்த கவிதைநூல் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   ‘மண்ணின் மணம்’  என்னும் முதற்பகுதியில்  தமிழ் ஒரு பூக்காடு என்னும் தலைப்பில்  தாய்த்தமிழை வணங்கி, தமிழ்மணம் வீசச் செய்யும் பாடலில் தொடங்கி  தமிழ்கொலை  புரிந்து வரும் தொ(ல்)லைக்காட்சி வரை இக்காலத்திற்கு  மிகவும் தேவையான பல்வேறு தலைப்புகளில் பத்தொன்பது கவிதைகளைத் தந்துள்ளார்.   ‘மரபின் வேர்கள்’ என்று இரண்டாம் பகுதியில்  மாதரி வீட்டில் கண்ணகி, தமிழ்மன்னன் இராவணன் என்னும் தலைப்புகளில் அருமையான இலக்கிய விருந்து படைத்துள்ளார். தந்தை…

மே நாள் தொடர்பான கலந்துரையாடல்

மே நாள்  தொடர்பான கலந்துரையாடல் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  மே நாள் நிகழ்வு தலவாக்கலையில் நடைபெற்றது.   அதற்கு முன்னதாக, முற்போக்குக் கூட்டணியின் அங்கத்துவ கட்சியான மலையக மக்கள் முன்னணியின் மே நாள் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் தலவாக்கலையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முண்னனியின் தலைவரும் கல்வித்துணைஅமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முண்னனியின் செயலாளர் யு. இலாரன்சு,  நாடாளுமன்ற உறுப்பினர் யு.அரவிந்தகுமார், மத்திய மாகாண  அவை உறுப்பினர் சு. இராசாராம்  முதலான  கட்சியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். :

கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மங்கையரே வாருங்கள்! கண்ணகிபோல் சீறுங்கள்! கார்குழல் சுருட்டி அள்ளி முடித்து, குடும்பச் சுமைகளைக் கொஞ்சம் விடுத்து, கூர்மதி படைத்த பெண்கள் கூட்டம், கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்! அறுவை சிகிச்சையில் பிள்ளையைப் பெற்று, ஆயுள் முழுவதும் அல்லல் உற்றிட, அரக்கத் தனியார் மருத்துவத் தொழிலே, அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து, அனைவர்க்கும் மருத்துவச் சேவையை முழுதாய், அகிலத் தரத்தில் வழங்கும் அரசை, அச்சம் இன்றித் தேர்ந்து எடுங்கள்! அரசுப் பள்ளியின் தரத்தைத் தாழ்த்தி, கல்வியை வணிகம் ஆக்கும் அரசை, “பரத்தை” என்று பழித்தலும் தகுமே!…

தேர்தல் சீர்திருத்தம் – தஞ்சை இறையரசன்

தேர்தல்  சீர்திருத்தம் தேர்தல் நெருங்கிவிட்டது; சாலைகள் போடுகிறார்கள்; ஊர் ஊராக தெருத்  தெருவாக மக்களைச் சந்திக்கிறார்கள்; குடிசைக்குள் நுழைந்து கிழவிகளோடு படம்  எடுத்துக் கொள்கிறார்கள். தேநீர்க்கடைக்காரர் “இனி வருசம் ஒரு தேர்தல் வந்தாலும் நல்லதுதான்; தேர்தல் வரும் என்றதும் உடனே சாலை போடுகிறார்களே!” என்றார். பால் ஊற்ற வந்த உள்ளூர் ஆசிரியர் சொன்னார்: “இந்தத் தெருச் சாலை முன்று முறை போட்டதாச் சொல்லிப் பங்குபோட்டுக்கொண்டார்கள். அதிலே ஆளுக்குக் கொஞ்சம்பணம் போட்டு இப்ப இந்தச் சாலை!” “எவ்வளவு பெரிய பணக்காரர்களும் சேற்றிலே காலை வைத்துக் குடிசையிலே…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5 இன் தொடர்ச்சி) 6. நல்லினஞ் சேர்தல் நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே. நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும். நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர். நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள். அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர். உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள். தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர். தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து நிற்பவர்கள் . நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர். நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார். உலகிய லெல்லா முணர்ந்து…

எங்கள் சமஉ – முனைவர் க.தமிழமல்லன்

எங்கள் சமஉ எங்கள் சமஉ இணையே  யற்றவர்! தங்கக் கடத்தல் தலைவர்! மாற்றான் மனைவியைக் கைப்பிடித்து மகளையும் மணந்தவர்! மனைவணி கத்தில் மாபெரும் கொள்ளையர்! ஒருமனை காட்டி இருவர்க்குப் பேசி! உருப்படி யாக உயர்த்தி விற்பவர்! காலில் விழுவதைக் கைகழுவி விட்டவர்! காலைக் காட்டிக் கவிழ்ந்திடச் சொல்லுவார்! மற்றவர் பணத்திலே பதாகை நட்டவர்! கற்றவர் நல்லவர் கறையிலா அறிஞரைப் பார்த்தால் பதறுவார்! வேர்த்துத் தம்மின் அறைக்குள் பதுங்குவார்! அண்ணன் தம்பி, கறைமது விற்பவன், காலைச் சொறிபவன், தேடித் தேடித் திறத்தைப் போற்றி விருதுகள் வழங்குவார்!…

15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் காந்தி ஊரகப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற  ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15ஆவது) உலகத் தமிழ் இணைய மாநாடு ஆவணி 24,25&26, 2047 / 2016 செப். 9,10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்தியூர் ஊரக (கிராமிய)ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள து  . 2016 மாநாட்டின் முதன்மைத் தலைப்பாகக்  “கணிணியெங்கும் தமிழ்! கணிணியெதிலும் தமிழ்!” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில்…