மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 நேரினிலே நான்பார்க்கா நாட்டி லெல்லாம் நேரியநல் நண்பர்கள் இருப்ப தெல்லாம் பாரினையே பேனாக்குள் அடக்கி யெங்கும் பார்க்கவைக்கும் அஞ்சல்தம் அட்டை யாலே ஊரினையே கடக்காத பெண்கள் கூட உலகத்தின் மறுகோடி பெண்க ளோடே சீரியநல் நட்புதனை வளர்த்துக் கொண்டு சிறந்தறிவு பெறுகின்றார் பேனா வாலே ! சிங்கப்பூர் தனைநேரில் பார்க்கா முன்பு சிறப்பான மலேசியாவைப் பார்க்கா முன்பு சிங்களரால் தமிழுறவு சிதைந்து …
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. நடுவு நிலைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 25. நடுவு நிலைமை நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல். நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும். பிறவுயிர் நடுவள விறனடு வின்மை. பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும். நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள். அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும். அறனெலா நிற்பதற் கஃதா தாரம். எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும். அதுசிறி தசையி னறனெலா மழியும். நடுவு நிலைமையில் இருந்து…
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் விழா
ஆவணி 31, 2047 / 16.09.2016 பிற்பகல் 2.30 தமிழ்மேம்பாட்டுச் சங்கப் பலகைத்துறை
பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் வரும் வெள்ளிக்கிழமை ஆவணி 31, 2047 / 16.09.2016 அன்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற உள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுக்கின்றது.
தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு? இ.பு.ஞானப்பிரகாசன்
தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு? இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காசுமீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்தாம்! அண்டை மாநிலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கமாகிப் போன ஒன்று. காவிரியில் தமிழ்நாடு தண்ணீர் கேட்டால், தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்குவது; முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு…
நவநேசனின் தற்றொழிலுக்கு உதவுவோம்!
தளபதி கிட்டு குண்டுவீச்சுக்கலன் படையணி நவநேசனின் இன்றைய இரங்கத்தக்க நிலை! நந்தகுமார் நவநேசன். ஈழத்தையும், ஈழமக்களையும் நேசித்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,அல்லது சிங்களத் தேசியக் கூட்டமைப்பு போன்ற வேட்டிகட்டிய தலைவர்களினால் கைவிடப்பட்ட நிலையில், 2009 இறுதிப் போரில் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டு இடுப்புக்குக் கீழே இயங்காமல், தனது மருத்துவம் ஒரு பக்கம் தனது வாழ்க்கைச் சுமை மறு பக்கம் எனத் தனது அன்றாட வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார். எனினும் தன்னால் ஒரு தற்றொழில்…
விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக!
நாட்டினருக்காகத் தன்னை ஒப்படைத்த விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக! சன்னங்களையும், தகடுகளையும் தன் உடலில் தாங்கி வேதனையில் வாடும் முன்னாள் போராளி பிறையாளனின் வாழ்வு செழிக்குமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை களமுனைப் போராளியாகப் பல களம் கண்டவர்தான் பிறையாளன் என்றழைக்கப்படும் நல்லையா இயேசுதாசன். இலங்கைப்படையினரின் அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்வை ஒப்படைத்தவர்களில் பிறையாளனும் ஒருவர். தமது வாழ்க்கையை ஈகம் செய்து, உணர்வுகளையும்,…
ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தனுக்கு உதவுங்கள்!
ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தன் அவர்களுக்கு உடனடியாக உதவுங்கள்! ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும் தேன்குரலில் உலகமெங்கும் கொண்டுசென்ற ஈழத்தின் இசைக்குயில், எமதன்பிற்கினிய சாந்தன் அண்ணா அவர்கள் இன்று தனது இரண்டு சிறுநீரகங்களும் வலுவிழந்த நிலையில் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இரத்தத் தூய்மை செய்து கொண்டு, அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றார். மாற்றுச் சிறுநீரகமும் ஆயத்தமான நிலையில் அதற்கான நிதியுதவி மட்டுமே தாழ்ச்சியாகின்றது. உடனடியாக மாற்றுச்சீரகம் பொருத்த வேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கை இப்போதைய செய்தி. …
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு: குற்றச்சாட்டு தமிழ் மக்களின் சார்பாளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசியல் கைதிகளை விடுப்பதில் வலுவான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமை குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு இன்று கொழும்பில் தொடங்கிய கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையின் போதே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க்…
எம்.பி.நிர்மலுடன் பல்வழி அழைப்பில் உரையாடல்
தமிழ், தமிழென்று பேசுவோர்க்கும், தமிழகத்திற்கு நமது பங்களிப்பு என்னவென்று கேட்போருக்கும் அரிய மாலைப் பொழுது ! சிந்தனைச் செம்மல், செயல் வீரர் நிருமல் அவர்களுடன் கலந்துரையாடல் . [https://youtu.be/pg2ANFKl1Cs Periyar International USA] சமூகவியல் சொற்பொழிவு தமிழகம்: சமூகநல களப்பணிகள். திரு. எம்.பி. நிருமல் உலகத்தின் மாசுவான சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய எக்சுநோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய எம்.பி. நிருமல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க ‘மொழி மொழி’ என்ற அமைப்பையும் உருவாக்கி…
துபாய் (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம்
துபாய் : துபாய் (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி கடந்த 2 ஆம் நாள் கல்ஃப் முன்முறைப் பள்ளியில் நடை பெற்றது. ,,சிறுவர் சிறுமிகள் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளையும் வாசித்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். மேலும் இங்கு தொடர்ச்சியாகப் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களில் சில பதிவிசை(கரோக்கி)யுடன் இணைந்து பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். மேலும் இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள் ஐதர், மற்றும் …
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடு!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும் 10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல். தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி 27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது. 10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக…