உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளிவிழா

    வணக்கம்! உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று வணிக நோக்கமற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முழுவதுமாக உட்பட்டு, சிறப்பாக இயங்கிக்,  கடந்த 25ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகின்றது.   தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும்;  உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும்; இவற்றுடன் மிகவும் முதன்மையான குறிக்கோளான தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும், உலகத் தமிழ் அமைப்பு கடந்த 25ஆண்டுகளாக அயராது உழைத்து வருகின்றது.   உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து…

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வுப்படங்கள்

ஆவணி 19, 2047 / செட்டம்பர் 04, 2016 பிற்பகல் 3.00 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

நூல்களை எண்மியமாக்கல் – தமிழக அரசிற்குப் பாராட்டும் வேண்டுகோளும் : இலக்குவனார் திருவள்ளுவன்

படைப்பாக்கப் பொதும உரிமப்பரவலாக்கலுக்குப் பாராட்டு! தொடர்நடவடிக்கைகளுக்கு வேண்டுகோள்   எல்லாத்தமிழ் நூல்களும் எண்மியமாக்கப்பட வேண்டும் என்பதே இணையத்தமிழ் ஆர்வலர்களின் உள்ளக்கிடக்கை. இது குறித்துப் பலரும் பேசியிருந்தாலும் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் முறையாக முறையீடு அளித்துத் தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எல்லா நூல்களையும் எண்மியமாக்கல் என்பது  பொதுவான கருத்து. அதைப் படிப்படியாக எப்படிச்  செய்யலாம் எனத் தெரிவித்துள்ளோம். முதலில் அரசுத் துறைகள், அரசுசார் நிறுவன  நூல்களை எண்மியமாக்க வேண்டும் என்பது போன்று படிநிலைகளை வேண்டியிருந்தோம்.    தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் ஆட்சிக்குழுவில் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குர்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. நன்றி யறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 24. நன்றி யறிதல் நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி. மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும். உறவினர் முதலியோ ருதவுதல் கடனே. உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும். பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே. பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல். துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும். உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல். உதவியில் உயர்ந்தது பதிலுக்கு…

பாரதியார் சங்கம் நடத்தும் பாரதியார் விழா, சென்னை 28

  ஆவணி 27, 2046 / செட்டம்பர் 12, 2016 பிற்பகல் 3.00 பாரதியார் விருது & பாரதி மணிச்செல்வர் விருதுகள் வழங்கல்

பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

பேரா.சி.இலக்குவனார்  வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! –  2 / 2   தமிழியக்கப்பணிகளாலும் திராவிட இயக்கப்பணிகளாலும் தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்டது குறித்து மகிழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவர், ‘இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று புதுமைப் பாவலர்கள்  முழக்கம் செய்தனர். எங்கு நோக்கினும் இன்பத்தமிழ்; செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்;  மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில்வண்டமிழ்; நற்றமிழில் பேசுதலே  நற்புலமைக்கு அடையாளம் என்ற எண்ணம் உருப்பெற்று விட்டது. நமஃச்காரம் போய் வணக்கம் வந்தது. சந்தோசம் மறைந்து மகிழ்ச்சி  தோன்றியது. விவாகம்  விலகித் திருமணம் இடம் பெற்றது….

பாரதியின் பாதையிலே – நிகழ்வு 04, சென்னை 600 004

  ஆவணி 30, 20417 / செட்டம்பர் 15, 2016 மாலை 6.30 பாரதிச்செம்மல் விருது  பெறுநர் : முனைவர் க.இராமசீதாலட்சுமி் பாரதியார் சங்கம்   கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்

பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா . முனைவர் அரங்க.பாரி பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழியல்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் : தொடர் 79

வ.உ.சிதம்பரனார், மறைமலையடிகள், சி.இலக்குவனார் புகழ் போற்றும் விழா: புரட்டாசி 04, 2047 / செட்டம்பர் 20, 2016 மாலை 6.00 – இரவு 9.00 இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் ஆடற்கலையரங்கம் பேச்சுக்கலைப் பயிற்சி யரங்கம் பரிசுவழங்கிப் பாராட்டரங்கம் எண்கண்மணி

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : தஞ்சை பிரகாசு

  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 28, 2047 / 13.09.2016 அன்று   மறு வாசிப்பில் தஞ்சை பிரகாசு    சிறப்புரை : திரு தஞ்சாவூர்க் கவிராயர் தலைமை: முனைவர் ப. சரவணன் அன்னம் விருது பெறுபவர்:  எழுத்தாளர் பொன்.வாசுதேவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: வழக்கறிஞர் அ .க. இராசாராமன் வழக்கம்போல் உறவும், நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

(மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று 1/5 தொடர்ச்சி)   மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5    கற்பனைக்கும்    எட்டாத   அற்பு   தங்கள் கரத்திருக்கும்   பேசியிலே   செய்யும்   நாமோ நற்காலம்   காட்டுகின்ற   கடிகா   ரத்தை நாள்காட்டி   கணக்கியினை   துறந்து  விட்டோம் பற்றியெங்கும்    எடுத்துசென்று   செய்தி   யோடு பாடல்கேட்ட   வானொலியைத்   தொலைத்து  விட்டோம் நற்றமிழில்   நலம்கேட்டு   எழுதி   வந்த நற்கடிதப்   பழக்கத்தை   விட்டு  விட்டோம் ! பக்கத்தில்   பெற்றோர்கள்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்   உடன்பிறந்தோர்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்   சுற்றத்தார்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்  …