பாட்டின் இயல்பு என்ன? 1/3 – மறைமலையடிகள்

பாட்டின் இயல்பு என்ன? 1/3   முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தகையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர்…

உலக வாழ்த்து – நாமக்கல் கவிஞர்

உலக வாழ்த்து   வாழ்க வாழ்க உலகம் எலாம் வாழ்க எங்கள் தேசமும் வாழ்க எங்கள் தமிழகம் வாழ்க எங்கள் மனை அறம் வாழ்க மேழிச் செல்வமே வளர்க நாட்டுக் கைத்தொழில் வாழ்க எங்கள் வாணிபம் வாழ்க நல்ல அரசியல் அன்பு கொண்டு அனைவரும் அச்சம் இன்றி வாழ்கவே துன்பம் ஏதும் இன்றியே துக்கம் யாவும் நீங்கியே இன்பமான யாவும் எய்தி இந்த நாட்டில் யாவரும் தெம்பினோடு தெளிவு பெற்றுத் தேவர் போற்ற வாழ்குவோம்! – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்

தமிழ் தனிமொழியே! – பரிதிமாற்கலைஞர்

தமிழ் தனிமொழியே! தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சார்ந்ததே ‘தனிமொழி’ எனப்படும். பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியினுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குத லொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவியில்லாமலே சிறிது மிடர்ப்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இஃது இந்திய மொழி நூற்புலவர்கள் பலர்க்கும் ஒப்ப முடிந்தது. ஆதலின் தமிழ் தனிமொழியேயென்க.  பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரியநாராயண (சாத்திரி) : தமிழ் மொழியின் வரலாறு

பிறமொழி எழுத்தொலிகள் தமிழில் இன்மை அதன் சிறப்பே! –

பிறமொழி எழுத்தொலிகள் தமிழில் இன்மை அதன் சிறப்பே!   முதலில் பிறந்த மொழி தமிழ்.  அதனால் தமிழ் அழிந்து  போகாமல் இருக்கிறது. தமிழ் மரபியல் கண்ட மொழி. தமிழ் வழிவழியாக  இளமையோடு வழங்கிவருகிறது. மலையாளம் 700 ஆண்டுகளுககு முன்னர்த் தமிழாக இருந்தது. கன்னடமும் துளுவும் கூட தமிழாகத்தான் இருந்தன. 1000 ஆண்டுகளுக்கு முன் கன்னடம் தமிழாக இருந்தது. மக்கள் பழகிப் பழகி வேறு மொழியாகிவிட்டது. ஆனால் தமிழ் மட்டும் இன்றும் தனித்து இயங்குகிறது. தமிழ் எந்தக் காலத்துக்கும் அழியாது. தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுவர்கள்…

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50   காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன்  – ஐயூர் முடவனார் ,  புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33.    காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே!) 34.    மலைத்தலைய கடல்…

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்

(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3   – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி  கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ?. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது?   இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை  ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால்  அணைத்துக்கொள்ளவும் எனது…

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 – க.வி.விக்கினேசுவரன்

(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3  தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3   நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன?   ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் நிகரான நிலை அளிக்கப்பட்டு வந்தது.   ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் வல்லாட்சியை (ஆதிக்கத்தை) நாடு முழுவதும் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற,…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9   பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் குறித்து நாவலர் நெடுஞ்செழியன்,  “மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயப் பற்றும், வருணாச்சிரம சனாதனதருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும்உண்மை.   மேற்கண்ட காரணம் பற்றித்தான்…

திருக்குறள் அறுசொல் உரை 106. இரவு : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 105. நல்குரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல்        அதிகாரம் 106. இரவு உழைப்புத் திறன்இல்லார், பொதுநல உதவியாளர் கேட்டுப் பெறலாம். இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின்,       அவர்பழி தம்பழி அன்று. தகுதியாரிடம் உதவி கேட்க; மறைத்தால், மறைத்தார்க்கே, பழி.   இன்பம் ஒருவற்(கு) இரத்தல், இரந்தவை       துன்பம் உறாஅ வரின். துன்பம் இல்லாமல் வருமானால், கேட்டுப் பெறுதலும் இன்பம்தான்.   கரப்(பு)இலா நெஞ்சின் கடன்அறிவார்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை –     தொடர்ச்சி   தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள்  உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர் அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும் தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள் விண்ணப்பம் அனுப்ப…

அரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல! கருநாடகாவில்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல! கருநாடகாவில்! பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். (திருவள்ளுவர், திருக்குறள் 196)   ‘அந்த ஆள்’  பேச்சைப் பொருட்படுத்தக்கூடாதுதான். என்றாலும் பா.ச.க.வின் ஊதுகுழல் போல்  அவ்வப்பொழுது உளறிக்கொண்டிருப்பதால்  இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.   முதல்வரின் நலக்குறைவால் தமிழக அரசு செயல்படாமல் உள்ளதால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்பதே அந்த ஆளின் வேண்டுகோள்.   ‘தமிழக அரசு கலைப்பு’ என்னும் மிரட்டல், பா.ச.க. குறுக்கு வழியில் அரசை நடத்துவதற்கு வழி வகுப்பதே ஆகும். கட்டுப்பாட்டுடன்…