பிரதிலிபியின் கதைப்போட்டி ‘ஒரே ஓர் ஊரில்’ – 2016/17
வாசகர்களுக்கு வணக்கம், பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி ‘ஒரே ஒரு ஊர்ல’ – 2016/17 இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் திசம்பர் – சனவரியில் கதைகளுக்கான இந்தச் சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனைக் கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையைப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 1/6 “இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும் தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய் வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் பேபோல் வந்திடும் சிறுவர் வாட்டம் கூறாய்” எனவே வினவிட இளைஞனும் நிமிர்ந்தே …5 “அன்புடன் வினவும் ஐய! என் குறைதனைச் சொல்லக் கேண்மின்! துயர்மிக உடையேன்; பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துளேன்; முதல்வகுப் பினில்நான் முதன்மையன் பள்ளியில் ஆயினும் செய்வதென்; அப்பனும் அற்றேன்! …10 கல்லூ ரியில்நான் கற்றிட வழியிலை; உதவும் உற்றார் ஒருவரும் பெற்றிலேன்; செல்வரை…
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன் தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியச் செல்வங்களுள் தலை சிறந்தது திருக்குறள். தமிழரே அல்லாமல் அயலவரும் உரிமை பாராட்டிப் பயன் எய்துதற்கு மிக்க துணையாவது இந்நூல். தான் தோன்றிய நாள் முதல் தலைமுறை தலைமுறையாக எத்தனையோ நாட்டவரும், மரபினரும், மொழியினரும், சமயத்தினரும் நுகர்ந்து பயன் பெறுமாறு செய்தும் அழியாச் செல்வமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும். இது சான்றாண்மை நிறைந்த அரும் பெரும் புலவர் பெருமானார் என உலகில் உள்ள எல்லா மொழிப் புலவர்களாலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும்…
அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை
அறம் செய விரும்பு! வாகை சூடி வரவேற்று, வந்த விருந்தினர் மகிழ வகை செய்து பணிவுடன் அன்பும் காட்டுந் திறம் பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்! ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம் ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம் கொல்லா நெறியும் வாய்மையும் அறம் கோபம் வென்ற சாந்தம் அறம்! தன்னல மில்லாத் தியாகம் அறம் தாய், தந்தையரைப் பேணுதல் அறம் பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம். பேதம் இல்லா சமுதாயமே அறம்! அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம் அறத்தின் சிறப்பே அன்ன…
ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்
ஊக்கமது கைவிடேல்! எல்லைகள் வேண்டா! உன்மன வெளியில் நிற்பாய் நடப்பாய் சிறகுகள் விரிப்பாய்! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! எதுவரை முடியும் அதுவரை ஓடு அதையும் கடந்து சில அடி தாண்டு! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! இலக்குகள் நிருணயி பாதைகள் வடிவமை தடைகளைத் தகர்த்தெறி பயணங்கள் தொடங்கு! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! காரிருள் என்பது கருக்கல் வரைக்கும் விடியலில் ஒளியின் கதவுகள் திறக்கும் ஊக்கமது கைவிடேல் இளைஞனே! காலங்கள் மாறும் வருடங்கள் ஓடும் – உன் கனவுகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்! ஊக்கமது கைவிடேல் இளைஞனே!…
தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்
தமிழின் இன்றைய நிலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தனித்துவமான சொல்வளத்தையும், அறிவியற்கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணத்தையும் பெற்று, இந்நாள் வரையில், அதன் இளமை மாறாது, வளர்ந்துவரும் தமிழ்மொழி, உலகின் உன்னத மொழிகளாய் அமைந்த ஒருசில மொழிகளுள் ஒன்று. வெறும் இலக்கியமொழியாக மட்டுமே அமைந்துவிடாது, இன்றுமட்டும், வாழும் மொழியாகிய அமைந்த தமிழ்மொழி, உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்பட்டு, அதன் மூலம், பல்வேறு வகையான பேச்சுவழக்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகு தமிழின் இன்றையநிலையை ஆறு கூறுகளாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம். வளர்ந்தோங்கும் இம்மொழியின் சிறப்புகளை மட்டுமே…
குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா!
குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா! திருச்சிராப்பள்ளி: கார்.12 / நவ.27: திருச்சி சுருதி அரங்கில் நந்தவனம் அமைவம், கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் இணைந்து குழந்தை இலக்கியத்திற்காக விருது பெற்ற கவிஞர் மு. முருகேசு, கவிஞர் மு. பாலசுப்ரமணியன் ஆகியோருக்குப் பாராட்டு விழாவினை நடத்தின. கல்வியாளர் எமர்சன் செய்சிங்கு இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். ’இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், கவிஞர் பொன்னிதாசன், விருதுபெற்ற மு.முருகேசு எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி இராசாவும்’ எனும் சிறுவர் கதை நூலை…
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு, தி.பி.2047 / கி.பி.2046
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(UCL) புதன்கிழமை மாலை தாயக மண்மீட்புப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளையோர் அமைப்பும் இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்தனர். இந்த நிகழ்வில் ‘ஒருதாள்’ (oru paper.com கோபி, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி செகன் , சத்தியசீலன், தமிழ்வாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் எப்படி தொடக்கக்காலத்தில் ஈழப்போரினில்…
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி! இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது. கோவை : கோவை மத்திய சிறைச்சாலை…
புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்
புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்! விடுதலைப் போராளி, உலகை ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த மாவீரன், 638 தடவை அமெரிக்க எமனிடமிருந்து மீண்டவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலோன், நாட்டில் கல்லாமையை ஒழித்த செயற்பாட்டாளன், பரப்பளவில் சிறியதான கியூபாக் குடியரசு அல்லது கூபாக்குடியரசு நாட்டைப் பெரிய நாடுகளுக்கு இணையாக மாற்றிய தலைவன், இவ்வாறான பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் புரட்சித்திலகம் பிடல் காசுட்டிரோ (Fidel Alejandro Castro Ruz : ஆடி 28, தி.பி. 1957 / ஆகத்து 13, 1926 – கார்த்திகை…
போற்றியே தொழுகின்றோம்! -ஈழத்து நிலவன்
விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக் குழந்தைகளே! – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள்! – நீங்கள் வெளியினில் வாருங்கள்! (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா? (விழிகளை மூடிக்…) மானம் அழிவின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே! – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே! (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம்! –…
கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! இன்னும் எத்தனைக் காலம்தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவற்றை எண்ணி? இன்னும் எவ்வளவு நேரம்தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னால் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஓர் இருளின் உகத்தை எரிப்பதற்காகத் தான் அவன் சூரியனாகிப் போனான் போராளி நடந்த சுவடுகளைத் தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று சுடும் அவன் விடுதலையின் தாகங்கள் ! அவன் உயிரின் ஆன்மா எதை நினைத்து உறங்கிப் போயிருக்கும் தனது…