ஆட்சிமொழிக்கருத்தரங்கம் , புதுச்சேரி
புதுவைத் தமிழ்ச் சங்கம் ஆவணி 14, 2045 / ஆக.30, 2014 இல்
ஆட்சிமொழிக்கருத்தரங்கம் ஒன்றைநடத்தியது.
அதன்தலைவர் வெ.முத்து தலைமை தாங்கினார்.
செயலர்மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தனித்தமிழ் இயக்கத் தலைவர்முனைவர் க.தமிழமல்லன் புதுச்சேரியின் ஆட்சிமொழியே என்பதைச் சட்டப்பொத்தகம்அரசாணைகள் சட்டமன்றத்தில் 1965 முன்வடிவு வைக்கப்பட்டபோது ச.ம.உக்கள் அதன்மேல் நிகழ்த்திய உரைகள் முதலியவற்றைச் சான்றுகளாக்கி நிறுவிக்காட்டினார். தமிழுக்கு இதுவரை நன்மை செய்த முன்னாள் முதல்வர்கள் பாரூக், இராமசாமி ஆகியோரைப் பாராட்டியும் பேசினார்.
இதில் ந.மு.தமிழ்மணி, கல்லாடன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.
கடைசியில் விசாலாட்சி நன்றி கூறினார்.
Leave a Reply