இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 15 : வீரக்கல்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்-தொடர்ச்சி) தமிழர் வீரம் வீரக்கல் வீரரை வியந்து போற்றிய நாடு தமிழ்நாடு. போர் முனையில் விழுப்புண் பட்டு விழுந்தவர்க்கும், கடும்புலியைத் தாக்கி வென்ற காளையர்க்கும், இன்னோரன்ன வீரம் விளைத்தவர்க்கும் வீரக்கல் நாட்டிச் சிறப்பைச் செய்தனர் தமிழ்நாட்டார். நடுகல்வீரருக்கு நாட்டுதற்கேற்ற கல்லை முதலில் தேர்ந்தெடுப்பர்; எடுத்த கல்லைப் புனித நீராட்டுவர்; வீரனுடைய பீடும் பேரும் அதில் எழுதுவர்; உரிய இடத்தில் அதனை நாட்டுவர்; மாலையும் மயிற் பீலியும் சூட்டுவர். இவ்வாறு நட்ட கல்லைத் தெய்வமாகக் கொண்டு…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 03. என் தமிழ்ப்பணி
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 02. என் கடன் பணி செய்து கிடப்பதே! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி தலைமையுரையில், ஞானியார் அவர்கள் “கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் அனைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்துவிட்டான்” எனக் கூறிப் பாராட்டினார்.மற்றுமொரு நிகழ்ச்சி : நான் வித்துவான் பட்டம் பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் ம. வீ. இராகவன் அவர்கள் அந்த ஆண்டு. வித்துவான் தேர்வு எழுதியிருந்தார், அந்நிலையில் திருவத்திபுரத்திற்கு வருகை…
சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 276-280 276.Abuse of process சட்டநடவடிக்கை முறைகேடு சட்ட நடவடிக்கையைத் தீய எண்ணத்துடனோ தவறான நோக்கத்துடனோ தவறாகவோ பயன்படுத்துதல். சட்ட நடவடிக்கைகளில் முறைகேடு நிகழாமல் இருக்க முறை மன்றங்கள் கருத்து செலுத்துகின்றன. சட்ட நடைமுறைத் தகாப்பாட்டைத் தடுப்பதற்காக அல்லது நீதிமுறையின் நோக்கங்களைப் பாதுகாக்க மட்டுமே முறைமன்றம் மு.த.அ.(முதல் தகவல் அறிக்கையை) -ஐ இல்லாமல் ஆக்கலாம். குற்றமற்ற ஒருவர் தேவையின்றி வழக்கிற்கு உள்ளானால் அல்லது சரியான ஏதுக்கள் இன்றி…
தமிழ்க்காப்புக்கழகம் : 12.05.2024 காலை 10.00 : ஆளுமையர் உரை 93 & 94 ; என்னூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் : இணைய அரங்கம் நிகழ்வு: சித்திரை 29, 2055 — 12.05.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 93 & 94 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் காது மூக்கு தொண்டை மருத்துவர்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அதிகாரம் 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை குறளுரை பரப்புதல் நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்குஉணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5 தாமரைக்கண்ணி வருகை காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇநீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழிகூறா நின்றனள்; கூறிய நங்கையை 10ஆரத் தழுவி அப்பெரு மாட்டிவீரத் திருமகள் வாழிய என்றனள்; பூங்கொடி வினவல் அன்னையும்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 99-120 99. உதயணசரிதம் – பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் 1924100. பத்மினி – வே. முத்துசாமி ஐயர் 1924101. (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் – கிருட்டிணசாமிசருமா 1924102. பிரமானந்த நான்மணி மாலை – பி.பி. நாராயணசாமி நாயுடு 1924103. தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு – ஆர். விசுவநாத ஐயர் 1924104. சிவனடியார் திருக்கூட்டம் 1925105. தேசபந்து விசயம் – ம. க. சயராம்…
சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 271-275 271.abuse of discretion உளத்தேர்வின் பிழைபாடு முடிவெடுப்பதற்கு உளத்தேர்வைத் தவறாகப் பயன்படுத்தலை இது குறிக்கிறது. குற்ற வழக்கிலும் உரிமை வழக்கிலும் கீழமைவு மன்றங்களின் முடிவுகளை மறு ஆய்வு செய்கையில் மேல்முறையீட்டுமன்றம், உளத்தேர்வு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக என ஆராயும். discretion – விருப்புரிமை என்றுதான் சொல்லிவந்தனர். அவ்வாறாயின் விருப்பு வெறுப்பிற்கேற்ப எடுக்கும் முடிவு எனப் பொருளாகிறது. எனவே, அவரது மனம்…
உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம் – தொடர்ச்சி) என் சரித்திரம் விடை பெறுதல் 121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம்முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப் பெற்றன. அடிக்கடி சுப்பிரமணியதேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியேசென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள்நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் உண்டாகும். நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆனபகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார்.அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார்.செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர்…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு-தொடர்ச்சி) தமிழர் வீரம்வீர மாதர் வீரத் தாய்தமிழ் நாட்டில் பெண்களும் மனத்திண்மை உடைய வராய் விளங்கினார்கள்; தன் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர். வாளெடுத்த தாய்வயது முதிர்ந்து, வற்றி உலர்ந்து, தள்ளாத நிலையில் இருந்தாள் ஒரு தாய். அவள் மகன் போர் புரியச் சென்றான். அவன்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 02. என் கடன் பணி செய்து கிடப்பதே!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01 – தொடர்ச்சி) 1. என் தமிழ்ப்பணி என் கடன் பணி செய்து கிடப்பதே! 1932 : செய்யாறு உயர்நிலைப் பள்ளியில் 8-வது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழாசிரியர், உயர் திருவாளர், மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள். எங்கள் ஊரில் பானு கவியார் என்ற பெரும் புலவர், துறவியார் இருந்தார். வடலூர் வள்ளலார் இயற்றிய அருட்பா குறித்து எழுந்த “அருட்பா, மருட்பா’ வாதத்தில் அருட்பாவாத நெறியாளரோடு நின்று வாதிட்ட வன்மையாளர். எங்களூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு வேதபுரீசுவரர்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 266. Abundance மிகுதி ஏராளம் பேரளவு எ.கா. இம்மன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் இதற்கு முன்பே மிகுதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர். 267.Abundant ஏராளமான மிகுதியான பேரளவான மிக அதிகமான அல்லது மிகையான அளவில் வழங்குதல். செழிப்பையும் குறிக்கிறது. 268.Abundant caution மிகு எச்சரிக்கை எ.கா. : உணர்வு பூர்வமான இவ்வழக்கை நீதிமன்றம் மிகு…
முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்! – இலக்குவனார்திருவள்ளுவன்
முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்! நரேந்திரர், அமித்து சா, ஒன்றிய அரசு வெளிப்படுத்தும் இந்தி, சமற்கிருதத் திணிப்பு தொடர்பான பேச்சு, தீர்மானம், நடவடிக்கை முதலியவற்றிற்கு மு.க.தாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமற்கிருதத் திணிப்பிற்கு வழிகோலவே இந்தித்திணிப்பு நடைபெறுவதாகக் கூறி வருகிறார். இவற்றின் மூலம் ஒரே நாடு, ஒரே மொழி என்ற நிலைப்பாட்டைக் கொணர்ந்து மக்கள்நாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் நாட்டுத் தொண்டு சங்கம்/ இரா.சே.சங்கத்தின் செயற்திட்டத்தைப் பாசக நிறைவேற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். அண்மையில் வானொலியில்…
