ஆங்கிலப் பணிப்பெண்ணிற்காகத் தலைவியாம் தமிழைப் புறக்கணிக்கக் கூடாது – பேரா.சி.இலக்குவனார்

ஆங்கிலப் பணிப்பெண்ணிற்காகத் தலைவியாம் தமிழைப் புறக்கணிக்கக் கூடாது   ஆங்கிலத்தைப் போற்ற வேண்டியது தமது முன்னேற்றம் கருதியேதான் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் அதற்காகத் தமிழை அறவே மறந்து விடுதல் கூடாது அன்றோ. நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமையை நினைத்து தமது வீட்டுத் தலைவியைப் புறக்கணித்து விடலாமா? தமிழர்களில் சிலர் அவ்வாறே செய்யும் நிலையில் இருக்கின்றனர். ஆங்கிலம் தமிழுக்கு அடுத்துக் கற்க வேண்டிய மொழியே அன்றித் தமிழை விடுத்துக் கற்பதற்குரியதன்று. ஒவ்வொரு தமிழரும் தமிழை முதன் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும்…

தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஞாலமெனும் கோளமதில் முன்பி றந்து ஞாயிற்றின் சுடரெனவே ஒளிப ரப்பிக் காலமெலாம் நின்றிருக்கும் நூல்கள் தந்து கவின்பெற்றுக் கலையுற்று வாழும் தாயே தாலசைத்தால் தமிழாகும் இயற்கை சொல்லும் தத்துவத்தின் வித்தகமாய் இலங்கு வாயே சாலவுனை வேண்டுவது தவத்தின் மேலாம் தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! நற்றிணையும் குறுந்தொகையாம் வரிசை எட்டும் நல்லதிரு முருகாற்றுப் படைதொ டங்கிச் சொற்றிறங்கள் காட்டுகின்ற பத்துப் பாட்டும் சுவையூட்டும் காப்பியங்கள் ஐந்தும் ஆகி மற்றுமுயர் பலசமய நூல்கள் தாமும் மாற்றரிய புதுமைசெயும் புலவோர் நூலும் எற்றானும் உனைமறவா நிலையில் நாளும்…

சங்கக்கால வாழ்த்துகள் சில!

வாணாள்   வாழ்த்து             பசி இல்லாகுக பிணிசேண் நீங்குக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 5             அறம் நனி சிறக்க அல்லது கெடுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 7             அரசுமுறை செய்க! களவுஇல் ஆகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 8             நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 9             மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 10             ஆயிர வெள்ள ஊழி வாழி!…

அகமே நீ வாழ்த்துக! – மேதை வேதநாயகம்

அகமே நீ வாழ்த்துக! கதிரவன் கிரணக் கையால்             கடவுளைத் தொழுவான் புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித்             துதிசெயும் தருக்க ளெல்லாம் பொதியலர் தூவிப் போற்றும்             பூதம்தம் தொழில்செய் தேத்தும் அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்             அகமேநீ வாழ்த்தா தென்னே மேதை வேதநாயகம் பிள்ளை: நீதித்திரட்டு

மின்னூல் பதிவிறக்க – து.நித்யாவின் எளியதமிழில் ‘சிஎசுஎசு’

  விழுத்தொடர் பாணித் தாள்கள்(Cascading Style Sheets -CSS) இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணிணிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் வி.பா.தா.(சி.எசு.எசு.) பெரும்பங்கு வகிக்கிறது. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com வலைப் பதிவு: http://nithyashrinivasan.wordpress.com     தமிழில் கட்டற்ற கணியன்கள்பற்றிய தகவல்களைக் “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழுப் புத்தகமாக…

மின்னூல் பதிவிறக்க : ‘(உ)ரூபி’ – பிரியா சுந்தரமூர்த்தி

  “எளிய இனிய கணினி மொழி” ‘(உ)ரூபி’ க்கு இதைவிடப் பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணையப் பயன்பாடுகள் ‘(உ)ரூபி’ ’யில் எழுதப்படுகின்றன. நிரலைச் சுருக்கமாக எழுதுவதே ‘(உ)ரூபி’ யின் ஆற்றல்வாய்ந்த இயல்புகளில் ஒன்றாகும். கணியன்(software)களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ‘(உ)ரூபி’ யில் உருவாக்க முடியும். ‘(உ)ரூபி’ யின் அடிப்படையையும், பரவலாகப் பயன்படுத்தப்படும் சிறப்புகளையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ‘(உ)ரூபி’ யின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் பரவியிருப்பது அவரது சிறப்பு. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில்…

கன்னித் தமிழ் மிகப் பழையவள்; ஆனாலும் மிகப் புதியவள்

  தமிழ்மொழி பல காலமாகத் தமிழருடைய கருத்தைப் புலப்படுத்தும் கருவியாக இருந்தது. பிறகு கலைத் திறமை பெற்றுப் பல பல நூல்களாகவும் உருப் பெற்றது. மனிதர்கள் பேசும் மொழி நாள்தோறும் உண்ணும் உணவைப் போன்றது. அவருள்ளே புலவர் இயற்றிய நூல்கள் வசதியுள்ளவர்கள் அமைத்த விருந்தைப் போன்றவை. தமிழில் இந்த இரண்டுக்கும் பஞ்சமே இல்லை. பேச்சு வழக்கு மாயாமல் நூல் படைப்பும் மங்காமல் மேலும் மேலும் வளர்ந்துவரும் ஒரு மொழியில் அவ்வப்போது புதிய புதிய துறைகள் அமைவது இயற்கை. புதிய புதிய அழகு பொலிவதும் இயல்பே….

முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! – இராமலிங்க வள்ளலார்

முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன்             சாத்திரக் குப்பையுந் தணந்தேன் நீதியும் நிலையுஞ் சத்தியப் பொருளும்             நித்திய வாழ்க்கையுஞ் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்             அருட்பெருஞ் சோதியென் றறிந்தேன் ஓதிய அனைத்தும் நீயறிந் ததுதான்             உரைப்பதென் னடிக்கடி யுனக்கே குலத்திலே சமயக் குழியிலே நரகக்             குழியிலே குமைந்துவீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து             நிற்கின்றார் நிற்கநா னுவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன்             மகிழ்ந்துநீ யென்னுள மெனும்…

வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாடு, சென்னை

  25 ஆவது விழா மருத்துவ அறிவியல் மாநாடு ஞாயிறு :24/01/16 காலை : 9 மணி முதல் 5 மணிவரை இடம் : இந்திய அலுவலர்கள் சங்கம் (IOA) 69,திரு.வி.க சாலை, அசந்தா அருகில் இராயப்பேட்டை , சென்னை -14 (பேசி: 28116807, 9841055774 தலைமை : மரு.கமலிசிரீபால் முன்னிலை :திருமதி . மணிமேகலை கண்ணன்,  மரு.செயச்சந்திரன் சிறப்பு விருந்தினர் : மரு. இளங்கோவன் : ‘மெய்நிகராக்கம் வாழ்கை’ புத்தகம் வெளியிட்டுச் சிறப்புரை தியாகி சுவாமிநாதன், தோப்பூர் சுப்ரமணியன் நினைவுப் பரிசு. நூல்…