மின்னூல் : நான் பெண்தான் (மலேசியச்சிறுகதைகள்) – நிருமலா இராகவன்

நான் பெண்தான் மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com கதை உருவாக்கம்: நிருமலா இராகவன், மலேசியா மின்னஞ்சல்: nirurag@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – பொதுமைப்படைப்பு(Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.)  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். முன்னுரை வணக்கம். எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் இத்தொகுப்பைப் படிக்க உட்கார்ந்திருப்பீர்கள். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வகையினரைப் பாருங்கள். 1              ஆண்கள் தவறே செய்யாதவர்கள்; அப்படியே தவறு செய்தாலும், ஒரு எழுத்தாளருக்கு அதைச் சுட்டிக்காட்ட எந்த அதிகாரமும் கிடையாது என்று ஆணித்தரமாக நம்புகிறவர்….

மின்னூல் : செல்வக் களஞ்சியமே -இரஞ்சனி நாராயணன்

செல்வக் களஞ்சியமே! இரஞ்சனி நாராயணன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com குழந்தை வளர்ப்பு பட்டறிவுத் தொடரின் தொகுப்பு ஆசிரியர்: இரஞ்சனி நாராயணன் மின்னஞ்சல்: ranjanidoraiswamy@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் மின்னஞ்சல் : Sivamurugan.perumal@gmail.com உரிமை – பொதுமைப்படைப்பு(Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.)  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். முன்னுரை   எனது வலைப்பதிவில் மட்டுமே எழுதி வந்த நான், பிற வலைத்தளங்களுக்குச் சென்று கருத்துரை கொடுத்துவிட்டு வருவேன். அப்படி தொடர்ந்து நான் சென்ற தளம் நான்குபெண்கள்.காம். மாறுபாடாக ஏதாவது செய்யவேண்டும் என்ற…

பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம்

மார்கழி 23, 2046 / 08.01.2016, வெள்ளிக்கிழமை  நேரம்: மாலை 4.30 மணி  இடம்: மூட்டா அரங்கம், காக்காதோப்பு தெரு, பெரியார் நிலையம் அருகில், மதுரை  தொடர்புக்கு: 8122184841 பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும்  – கருத்தரங்கம் மதுரை நகரில் அநேக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கூடுதலாக மூன்று நாட்கள் கடும் மழை பெய்திருந்தால் மதுரை நகருக்குள் வெள்ளம் வந்திருக்கும். அதே சமயம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும் நகரில் சில கண்மாய்கள் வறண்டு கிடப்பதற்கு என்ன காரணம்? இந்த மழைக்காலங்களிலும் ‘தண்ணீருக்காகச் சாலை மறியல்…

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29  ஆம் நாள் தொடங்கி  பிப்பிரவாி 7  ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி) அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு,                 “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் , அறங்கூ றவையம் அடைந்து விரைவில் நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ” எனலும் இருவரும் மின்னெனச் சென்று அவைய வாயிலை அடைய ஆங்குள காவலன் இவர்களைக் காணப் பெற்றதும் கையூட் டின்றி உள்விடா னாயினும் வழிவிட் டவரை விழைவுடன் பணிய துலைநா வன்ன சமனிலைக் குரிய இறைவனை யணுகலும், எழுந்து நின்று இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்…

சார்சாவில் பல் மருத்துவ இலவச முகாம்

சார்சா (உ)ரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறை மருத்துவக்கூடத்தில் இலவச பல் மருத்துவ முகாம் சனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த   மருத்துவர் சிராசுதீன்  பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான  மருத்துவம்  குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   – முதுவை இதாயத்து

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: தொடர்ச்சி) 14   நெல்லை நகரத்தில் சிறந்து விளங்கிய ம.தி.தா. இந்துக் கல்லூரியை விட்டு நீங்கி, விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரிக்கு வந்ததுதான் பெருங்குற்றம் என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார் இலக்குவனார். ‘               நெல்லைக்குரிய நீள்கல் லூரியில்                 பணிவிட் டிங்குப்படர்ந்ததே குற்றம்’ 16   நெல்லைக் கல்லூரியில் தலைமைப் பேராசிரியராய்ப் பதவிபெற வாய்ப்பில்லை என்பதைத் தவிர, வேறுகுறை எதுவும் இல்லை. ஆயினும் உண்மைத் தொண்டு ஆற்றுவதற்கு உரிய இடம் நெல்லையே. தமிழ்ப் புலவர்க்குத் தனிப்…

அறமே தெய்வம்! – பாரதியார்

அறமொன் றேதரு மெய்யின்ப மென்றநல் லறிஞர் தம்மை யனுதினம் போற்றுவேன் . . . தேசத் துள்ள இளைஞ ரறிமினோ! அறமொன் றேதரு மெய்யின்பம்; ஆதலால் அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால். – பாரதியார்  

அரிக்கமேடு – ஓர் ஆவணம் : தாழி இதழியல் கருத்தரங்கம்

  எமது நிறுவனத்தின் சார்பாக பல அரிய வரலாற்று, கலை, மொழியியல், பண்பாட்டு மீட்டுருவாக்க முயற்சியில் தொடர்ந்து எம்மை ஈடுபடுத்தி வருகின்றோம். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத் தூய பேதுரு மேனிலைப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் கல்விச் சுற்றுலா, புதுவையில் எமது நிறுவனம் சார்பாக நடைபெற்றது; புதுச்சேரி வரலாற்றில் “அரிக்கமேடு – ஓர்  ஆவணம்” என்ற தலைப்பில் புதுவை நகரில் அமைந்துள்ள தாழி இதழியல் அலுவலகத்தில் கருத்தரங்க நிகழ்வும் நடைபெற்றது.   இந்தத் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கென எமது நிறுவனத்தால் நடத்தப்படும் நான்காம் கருத்தரங்கம் இதுவாகும்….

நம் கடமை! – பாரதியார்

  கடமை யாவன தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல் . . . .     . . .       . . .       . . . உலகெலாங் காக்கும் மொருவனைப் போற்றுதல் இந்நான் கே இப் பூமியி லெவர்க்கும் கடமை யெனப்படும் . . .   . . . நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் சிந்தையே இம்மூன்றும் செய்! – பாரதியார்