கலைச்சொல் தெளிவோம்! 4.] தோலும் அதளும் : இலக்குவனார் திருவள்ளுவன்

   தோலும் அதளும் – (skin and leather)   தொல்லியல், பொறிநுட்பவியல், கால்நடையியல் ஆகியவற்றில் leather-தோல் எனப்படுகின்றது; மனையியலில் பதனிட்ட தோல் எனப்படுகிறது. வேளாணியல், தொல்லியல், மருத்துவயியல், கால்நடையியல் ஆகியவற்றில் skin-தோல் எனப்படுகின்றது. இவற்றை வேறுபடுத்திக் கூற வேண்டும். அதளன்(1) (அகநானூறு 274.6) அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண் ஆற்றுப்படை 151) அதட்பள்ளி- தோற்படுக்கை இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி – மதுரைக் காஞ்சி 310 மெய்உரித்து இயற்றிய மிதிஅதள் பள்ளித் – மலைபடுகடாம் 419 ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் –…

தாய்போல யாருமுண்டோ? – செயராமர், மெல்பேண்

தலைவருடி எனையணைத்து தனதுதிரம் தனைப்பாலாய் மனமுருகித் தந்தவளே மாநிலத்தில் தாய்தானே மடிமீது எனைவைத்து மாரியென முத்தமிட்டு விழிமூடித் தூங்காமல் விழித்தவளும் தாய்தானே படிமீது கிடந்தழுது பலமுறையும் வேண்டிநின்று பாருலகில் எனைப்பெற்ற பண்புடையோள் தாய்தானே விரதமெலாம் பூண்டொழுகி விதியினையே விரட்டிவிட்டு வித்தகனாய் இவ்வுலகில் விதைத்தவளும் தாய்தானே மலடியென மற்றவர்கள் மனமுடையப் பேசிடினும் மால்மருகன் தனைவேண்டி மாற்றியதும் தாய்தானே நிலவுலகில் பலபிறவி வந்துற்ற போதினிலும் நிம்மதியைத் தருவதற்கு நிற்பவளே தாய்தானே தாய்மைக்கு இலக்கணமே தாய்மைதான் ஆகிவிடும் தாய்போல இவ்வுலகில் தகவுடையார் யாருமுண்டோ வேருக்கு நீராகத் தாயிருப்பாள் எப்போதும்…

புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் – வைகை அனிசு

தேனிமாவட்டத்தில் புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் தேனிமாவட்டத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது ஆடு வளர்க்கும் தொழில். நமது நாட்டில் கால்நடைக்கணக்கெடுப்பு இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடைப் பேணுகை, பால்வளம், மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. இக்கணக்கெடுப்பு 19191 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 19ஆவது அகில இந்தியக் கால்நடைக் கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்டுக் கால்நடைப் பேணுகைத்துறை புள்ளியல் பிரிவு வாயிலாக வெளியிடப்படுகிறது. இக்கணக்கெடுப்பு கால்நடைகளின் இனவளர்ச்சிக் கொள்கைகளை வழிவகுப்பதற்குப் பயன்படுகிறது. கால்நடைகளின் நலவாழ்வு…

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை – வைகை அனிசு

ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை தேனிப்பகுதியில் பகுதியில் ஆலைக் கழிவுகளால் நீர்க்காக்கை இனங்கள் அழிந்து வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், வைகை அணை, அ.வாடிப்பட்டி பகுதிகளில் காப்பித்தொழிற்சாலை, சர்க்கரைத்தொழிற்சாலை, சாயத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரோடு கலந்து விட்டன. மேலும் கழிவுநீர்களை இப்பகுதியில் உள்ள ஊருணிகளில் இரவோடு இரவாக ஊற்றி வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள், பறவைகள் இறந்து வருகின்றன. நவம்பர் மாதம் முதல் பிப்பிரவரி மாதம் வரை இப்பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்தத்தண்ணீரில் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள், கொக்குகள்,…

இலக்கு – காவிரிமைந்தன்

இலக்கு   இதயத்தின் மையப்புள்ளி எதைநோக்கிப் பார்க்கிறதோ அதுதான் இலக்கு! முறையான செயல்செய்யும் அறிவான பெருமக்கள் தேர்ந்தெடுப்பது இலக்கு! நடைபோடும் வாழ்க்கையிலே நாம்விரும்பும் பயணங்கள் அமைப்பதற்கு இலக்கு.. வெற்றிக்கும் தோல்விக்கும் விடைசொல்லிப் பார்த்தாலே மத்தியிலே அமர்ந்திருக்கும் இலக்கு! திட்டங்கள் இடுவோரின் திண்மையாவும் தீர்க்கமாய்த் தெரிவதிந்த இலக்கு! தட்டுத்தடுமாறிக் கால்பதித்து நடக்கத் தொடங்கிய நாள்முதலாய் குட்டிக்குட்டியாய் இலக்குகள்! நமக்குள் நாமே கூர்மைகொள்ள அமைத்திடும் இலக்குகள் ஆயுதமாகும்! சிந்தனையொன்றிச் சிறப்பாய்ச் செயல்பட வகுத்திடும் இலக்குகள் வழிவகுக்கும்! வாழ்வின் பொருளை வகையாய் அறிந்தோர் வசப்படுத்துவது இலக்கு! வாகைசூடிட நினைப்போரெல்லாம் வாரியணைப்பது…

கலைச்சொல் தெளிவோம்! 3.] உணவும் சாப்பாடும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      உணவு- meal(ஆட்.,கால்.), food(வேளா.,சூழ.,), diet(பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். (இ)டயட்(டு) – diet என்பதைத் திட்ட உணவு(ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத் தக்கனவும் தள்ளத்தக்கனவும்…

கலைச்சொல் தெளிவோம்! 2.] பொரித்தலும் வறுத்தலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

    (குஞ்சு)பொரித்தல்-hatch/hatching(வேளா., பயி., மனை., கால்.);  fry/frying (கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று   அடைகாத்துக் குஞ்சுபொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறுவகைக்குக் குறிப்பிடுகின்றனர்.   சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்தகறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு (நற்றிணை367.3) [கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக்கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத்திரளை] பசுங்கண்கருனைச்சூட்டொடுமாந்தி…

கலைச்சொல் தெளிவோம்! 1.] கொழுப்பு வகைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

    கொழுப்பு(2), நிணம்(24) சொற்களுடன் இறைச்சிக்கொழுப்பைக் குறிக்கும் பிறதொடர்களும் சங்கஇலக்கியங்களில் உள்ளன. இப்பொழுது பின்வருமாறு கொழுப்பின் வகைகள் குறிக்கப்படுகின்றன. கொழுப்பு – lipid   (வேளா., பயி., சூழி.,மீனி.,மனை.,கால். ) ; fat  (வேளா., மனை.,மரு.); adipose ( பயி.,);  cholesterol  ( மரு.); கொழுப்புஅமிலங்கள்–triglycerides (மனை.); உயர்மாவுச்சத்து – triglycerides ( மரு.). இப்பொழுதுநாம்அமிலம்என்றுசொல்வதைச்சங்கஇலக்கியங்கள்காடி(6) என்றேகுறிப்பிடுகின்றன. ஆதலின் சங்கச் சொற்கள் அடிப்படையில் கொழுப்பு வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். நிணம் – cholesterol கொழுப்பு – fat கொழுமை – adipose கொழுமைமெய்ம்மி – adipose tissue கொழுமியம் – lipid…

கடைநிலை மாறுமா ? – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்

கடைநிலை மாறுமா ?   மது கொடுக்கும் மயக்கத்தால் மதியிழக்கும் மாக்களெல்லாம் நிதியிழப்பார் ,  மன நிம் – -மதியிழப்பார் , குடல் கெட்டு , உடல் கெட்டு உயிரிழப்பார் .குடும்பத்தார் கதியிழப்பார் , மங்கலப் பெண்டிரெல்லாம் மங்களம் இழப்பார் , மண் கலமாய் உடைந்திடுவார் மகன்கள் கல்வியிழப்பார் , மகள்கள் மணமிழப்பார் . சந்தடி ஏதுமின்றி சந்ததியே   மறைந்துவிடும். இரக்கமின்றி அழிக்கும் அரக்கன் என்பதனால்தான் ஆங்கிலத்தில் ‘ ARRACK ‘ என்றழைத்தாரோ . ‘குடி குடி கெடுக்கும் ‘ என்று பொடி எழுத்தில்…

‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன       வணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள் வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின் முதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள படைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால் மாணவர்கள் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை ஒரே கட்டுக்குள் மின்னஞ்சலிலோ இதழின் முகவரிக்கோ அனுப்பலாம். பல்கலைக் கழகப் பேராசியர்களும் கல்லூரிப் பேராசியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் நவீனநொச்சி வாசகர்களும் அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழர் திருநாளாகிய…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – காட்சி 2

[கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி]   காட்சி – 2 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (சிட்டுக்கள் இரண்டும் மெட்டுரையாடல்) ஆண்   :  என்ன பேடே! சிரிப்பென்ன? எனக்கும் சொல்லேன்! சிரிக்கின்றேன்! பெண் :   என்னவோ! வாழ்வை நினைத்திட்டேன்! இனிமையில் என்னையே மறந்திட்டேன்! வண்ண எண்ணங்கள் விரிந்ததனால் என்னையே மறந்து சிரித்திட்டேன்!   ஆண் :   அதுவா! உண்மை! உண்மைதான்! இதயம் குளிர்ந்த சிரிப்புத்தான்! இனிய…