” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” கூட்ட அழைப்பிதழ்

” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு “         கூட்ட அழைப்பிதழ்    நாள்: ஐப்பசி 30, 2045 / நவம்பர் 16, 2014. ஞாயிறு காலை 10 மணி முதல் 4 மணி வரை இடம்: ரீசென்சி விடுதி அரங்கம், அபிராமி திரையரங்கம் அருகில், ஈரோடு. தோழமை அமைப்புத் தலைமைத் தோழர்களுக்கு ” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எமது வணக்கம்.   2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு…

தலையங்க விமரிசனம் – 100 ஆவது அமர்வு

  அன்புடையீர், பொருள்: நிகழ்ச்சி அறிவிப்பு   – அழைத்தல் வணக்கம். தலையங்க விமரிசனம் என்ற பெயரில் கடந்த 2043 மார்கழி 8 /2012ஆம் ஆண்டு திசம்பர் 23 முதல் வாரந்தவறாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வுகளில் இதழாளர்கள், செய்தியாளர்கள், ஊடவியலாளர்கள் முதலானோர் பங்கேற்று அந்த வாரத்தில் முதன்மை நாளேடுகளில் வெளிவந்த தலையங்களில் காணப்படும் செய்திகள், கருத்துக்களைத் திறனாய்வு செய்து உரையாற்றுவது வழக்கம். ஊடகத்துறையில் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர். மக்கள் நலன் சார்ந்த கண்ணோட்டத்தில் செய்தியை…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்க மாவட்ட மாநாடு, திண்டுக்கல்

  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இலெட்சுமி விலாசு வங்கி மேல்மாடியில் எதிர்வரும் கார்த்திகை 4, 2045- 20.11.2014 அன்று மாலை 5 மணியளவில் மாநாடு நடைபெற உள்ளது. இதன்தொடர்பாகச் செய்தியாளர்களிடம் கூறிய தமுஎகச அமைப்பைச்சேர்ந்த கவிவாணன் கூறுகையில், விடுதலைப்போராட்டத்தில் நம்நாட்டு விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துக்கொண்ட சுப்பிரமணிய சிவா, தமிழகத்தில் இரண்டாவது முழு நீளப் புதினமான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய நாவலாசிரியர் இராசம்(அய்யர்), மணிக்கொடி இதழின் ஆசியரான ‘மணிக்கொடி சிறுகதைகள்’ என்ற நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் திரைப்பட உரையாடலாசிரியருமான பி.எசு.இராமையா, ‘எழுத்து’…

60 கவிஞர்கள் கூடும் ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ கவியரங்கம்

60 கவிஞர்கள் கூடும் ‘பிரபாகரன் மாலைப் பொழுது‘ கவியரங்கம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டுச் சென்னையில் 60 கவிஞர்கள் கூடும் கவியரங்கம் நடைபெற உள்ளது.     புலவர் புலமைப்பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை (மெரீனா) கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்குப் பின்புறம் நடைபெற உள்ளது.   கிறித்து பிறப்பிற்கு முந்தைய நாளான 24 அன்று கிறித்துமசு மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று…

வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

  வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன்     ஊடகங்களில் உலா வந்த செய்தி உண்மையாயிற்று. ஆம்! வாசன் பேராயக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். புதிய கட்சி தொடங்குகிறார். என்றாலும் புதிய ஊர்தியில் பழைய பாதையில் செல்ல உள்ளாரே தவிர, புதிய பாதையில் நடைபோடப்போவதில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தி விட்டார்.   தனக்குப் பல பொறுப்புகளையும் பதவிகளையும் தந்த சோனியாவையும் கட்சியையும் தாக்க வேண்டா என எண்ணுவது நல்லது. அவ்வாறில்லாவிட்டாலும் தனிமனிதத் தாக்குதலற்ற அரசியலே நன்று. என்றாலும் கொள்கையில் மாற்றம் இல்லை என்ற பொழுது…

புதியபார்வை – இலக்குவனார் சிறப்பிதழ்

  புதியபார்வை நவம்பர் 16-30 இதழ் இலக்குவனார் சிறப்பிதழாக வெளிவருகிறது. ஆசிரியர் : முனைவர் ம.நடராசன் அஞ்சல்பெட்டி எண் 1069 189, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 பேசி : 044 24997401 / 24980176 மின்வரி :puthiyaparvai@gmail.com வலைத்தளம் : www.puthiyaparvai.com

செஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி

       (ஐப்பசி 6, 2045 / நவ.2, 2014 தொடர்ச்சி) 20. சீன மக்களைக் கொல்லும் உலகமய நுகர்வியம்     நுகர்விய வெறிப் பண்பாடு செழித்தோங்கும் வட அமெரிக்காவில் அவ்வப்போது பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். கைப்பேசி – காணாட்டம்(வீடியோ கேம்) முதலான பல மின்னணுக் கருவிகளிலும், வன்முறை நிறைந்த விளையாட்டுகளைப் பழகும் வடஅமரிக்க இளையோர், சமூகத்தில் அதனைப் பயன்படுத்திப் பார்க்க விழையும் போது, அது பள்ளிகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும் துப்பாக்கிச்…

மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி

அகநாழிகை, சென்னை  ஐப்பசி 29, 2045 / நவ.15,2014 மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும்  எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம் வரவேற்புரை: நாச்சியாள் முன்னிலை: திரு. செயகுமார் நினைவுகூர்வோர் : எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன் எழுத்தாளர்  சோடி குரூசு பேரா. பாரதி சந்துரு நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி இடம்: அகநாழிகை புத்தக உலகம் நேரம்:   ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி பரமக்குடியில் கண் குறைபாடு கொண்ட இந்து சமயத்தைச் சார்ந்த சிறுமியின் மருத்துவத்திற்குக் கீழப்பள்ளிவாசல் இசுலாமிய இளைஞர்கள் நிதியுதவி திரட்டி வழங்கினர். இன்று மாலை கீழப்பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது. கீழப்பள்ளிவாசல் தலைவர் எசு.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேசுவரம் காவல் நிலையத் துணை ஆய்வாளர், ஆசிரியர் எம்.பெரோசுகான், ஆசிரியர் க.இதாயத்துல்லா, அசுலம், சியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார். சமயச் சார்பற்ற உண்மையான உதவியை அனைவரும் பாராட்டினர். தரவு : முதுவை இதாயத்து

வைகை அணையில் தண்ணீர் திருடும் கும்பல்

(வைகை அணையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கிணறு)     பொதுப்பணித்துறையினர் உடந்தையுடன் வைகை அணையில் தண்ணீர் திருடும் மருமக்கும்பல்   வைகை அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடந்தையுடன் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துத் தண்ணீர் எடுப்பதால் வைகை அணையில் நீர்மட்டம் மளமளவெனச் சரியத் தொடங்குகிறது.   முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைஅணையின் கரையில் பெரிய தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அணையின் கரையை ஒட்டி நிலங்களை வாங்கி அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்துகிறோம் என்று பெயரளவில் வாங்கிச் சீமை இலுப்பை (sapota / sapodilla), எலுமிச்சை போன்றவற்றைப் பயிரிடுகின்றனர்.   இவ்வாறு அமைக்கப்படும்…