வாழ்ந்து தழை – அரியரவேலன்

வாழ்ந்து தழை – அரியரவேலன் புள்ளல்லவே? – நீ புழுவல்லவே? – பின் புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்? கல்லல்லவே? – நீ கசடல்லவே? – பின் கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்? மண்ணல்லவே? – நீ மரமல்லவே? – பின் மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்? விழலல்லவே? – நீ வெற்றல்லவே? – பின் வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்? கண்ணைத் திற! – கீழ் விண்ணை அறி! – இரு கைகளை ஏனினும் கட்டுகிறாய்? கூட்டை உடை! – சங்கை ஊதி எழு! – சேவல் கூவிய…

தேனிப்பகுதியில் 200 உரூபாய் வரை விற்பனை ஆகும் புற்றீசல்கள்.

தேவதானப்பட்டிப் பகுதியில் ஈசல்கள் படி 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஈசல், ஆங்கிலத்தில் இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று அழைக்கப்படுவது உண்டு. கறையான் இனத்தைச்சேர்ந்த ஈசல் படி ஒன்று 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. அக்டோபர், நவம்பர், திசம்பர் வரை மழைக் காலம் என்பதால் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றது. பெரும்பாலும் கறையான் புற்றுகளில் வாழும் ஈசல்கள் மழை பெய்தவுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறும். மாலை நேரம் ஆனவுடன் விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் படையெடுக்கும். ஈசல் இறக்கைகள் மென்மையாக இருப்பதனால்…

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!- சுப காண்டீபன்

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! சுப காண்டீபன் பசிக்கிறதம்மா…  பசிக்கிறது!  இரு கரம் கூப்பி கேட்கின்றேன். என் வயிற்றினுள் ஏதோ சத்தங்கள் பல கேட்கின்றன. எனக்கு அச்சத்தம் என்னவென்றும் தெரியவில்லை. ஒன்றும் புரியவும் இல்லை. ஈர் இரண்டு நாட்களாக எந்த உணவும் உண்ணவில்லை. இரண்டு நாட்களாக மலம் கூடக்கழிக்கவில்லை. ஒட்டிய வயிற்றுடன் அலைந்து திரிகின்றேன். ஒரு பிடி உணவேனும் தருவீர்களென எண்ணி! எனைப்பெற்றவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் வருவேனா உங்களின் வாசல் தேடி? முலைப்பால் கூட முழுதாகப்பருகவில்லை. எனை வயிற்றினில் சுமந்தவளும் வயிராற…

சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்!

அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!     தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகசுடன், இலாங்லெட்டு, பிரசாந்து ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாகப் பொய் வழக்கு போட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர்…

தேனிப்பகுதியில் கூடுதலான கம்பிவடக் கட்டணம்

தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலான கம்பிவடக் கட்டணம் தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் பெறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த தி.மு.க.ஆட்சியில் கம்பிவடக் கட்டணத்தைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வரையறுத்து அடாவடியில் ஈடுபட்டனர். தமிழக அரசு, அதன் பின்னர் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கி நுகர்வோர்களிடம் உரூ.70 மட்டுமே பெறவேண்டும் என வரையறுத்தது. அந்த அரசு அறிவிப்பு வந்தவுடன் அரசு வரையறுத்த கட்டணத்தைப் பெற்றனர். ஆனால், இப்பொழுது அரசு வரையறுத்த கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாகப் பெறுகின்றனர்….

தேனிப் பகுதியில் தீயொழுக்கப் படம் எடுக்கும் மருமக்கும்பல்

தேவதானப்பட்டிப் பகுதியில் அலைபேசி மூலம் தீயொழுக்கப் படம் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.   தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, வைகை அணை முதலான அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் திறந்துவிடப்பட்டன.  இப்பகுதியில் வாய்க்கால், கண்மாய்கள், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் துணிகளைத் துவைப்பதற்கும் குளிப்பதற்கும் ஆறுகள், வாய்க்காலைப் பயன்படுத்தி வருகின்றனர்.   இதனை நோட்டமிடும் மன்மதன்கள் குளிக்கின்ற காட்சிகளைத் தங்கள் அலைபேசிகள் மூலம் ஒளிப்படம் எடுத்தும் காட்சிப்படம் எடுத்தும் இணைய மையங்களுக்கு…

“மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் – புத்தக அறிமுகம்

நண்பர்களே!   புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம். -சீனப் பழமொழி போரில் கலந்து கொள்வதைவிடக் கூடுதல் வீரம் சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.- எல்பர்கிரிக்சு பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள்தாம் என்றாராம் – மார்டின் லூதர்கிங்கு “மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் புத்தகங்ளை அறிமுகம் செய்தல், அறிவியல் பற்றிய தெளிவு பெறுதல், முற்போக்குத் திரைப்படங்கள் திரையிடல் போன்ற அமர்வுகளாக கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.   வரும் அமர்வில் வரலாறு என்றால்…

தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தண்ணீர் தனியாருக்கு விற்பனை

தேனி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீர், தனியார் தோப்புகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொம்மிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்திற்குச் சொந்தமாகக் கிணறு உள்ளது. இக்கிணறுகள் மூலம் பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டியில் 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீரைத் தனியார் தோட்டங்களுக்கு மணிக்கு இவ்வளவு உரூபாய் என வரையறுத்து விற்பனை செய்துவருகின்றனர். தண்ணீரைத் தொட்டியில் நிரப்பியவுடன் அந்தத்தண்ணீரை கால்வாய் மூலம் அருகில்…

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-3 : நாக.இளங்கோவன்

  (ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி) முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்கு மாற்றாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும் இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ விடுகுறி(caret)யையோ அலைக்குறி(tilde)யையோ போடலாம் என்று உகர ஊகாரத் துணைக்குறியீடாக அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர் போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த முன்வைப்பின் உச்சம் எனலாம். பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும் எழுத்துகளிற்குப் பல்வேறு  வேடங் கட்டிபிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ இன்னொரு போட்டியாளர் தனது எழுத்துவடிவ…