இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்

வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..              ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம், ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு,              மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது.. தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்..                                தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்..   சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்..               விருதாளர்: விசால் ஆர்.சாபுரம். அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்.. உறவும் நட்புமாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் : ச.பாலமுருகன்

 அறிமுகம்    உலகில் உள்ள தொன்மைச் சமூகங்களில் ஒன்றாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இயங்கிவரும் தமிழ் மன்பதையினர் தலைசிறந்த இலக்கியம், கலை, பண்பாட்டு, கோயில் கட்டடக்கலை, வானவியல் துறைகளில் அறிவு பெற்றவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர்களின் சிறப்பு உலகத்திற்கு தெரிவித்து நிற்பன செல்வியல் தன்மை வாய்ந்த இலக்கியங்களும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் ஆகும். ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்கள் நம் தமிழ்நாட்டில் விரவிக்கிடக்கின்றன. அவை ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நடுகற்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவிக்கிடக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள்…

மாமூலனார் பாடல்கள் 25: சி.இலக்குவனார்

உரு. எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! – தலைவி –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) திருமணம் நிகழ்ந்தபின் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளான். பண்டைத் தமிழ்நாட்டில் திருமணம் நிகழ்ந்த சின்னாட்களில் தலைவன் தலைவியைப் பிரிதல் சிறப்புக்கல்வி பெறும்பொருட்டும், அரசியல் அலுவல் பொருட்டும். பொருளீட்டும் பொருட்டும் நிகழ்ந்தது. இப் பிரிவுகளைப்பற்றிய விரிவுகளைத் தொல்காப்பியர் இலக்கண நூலில் தெளிவுற அறியலாம். இப்பாடலில் வருகின்ற தலைவனும் அவ்வாறே பிரிந்து சென்றுள்ளான். தலைவனைப்பிரிந்த தலைவி வருந்துகின்றாள்….

செஞ்சீனா சென்றுவந்தேன் 3 – – பொறி.க.அருணபாரதி

(ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) 3. இந்தியப்பணத்தாளில் காந்தி … சீனப் பணத்தாளில் மாவோ!   சீனாவுக்குள் நுழைந்தவுடன் சிகப்பு நிறத்தில் மாவோ – இலெனின் படங்கள் என்னை வரவேற்கும் என நினைத்திருந்தேன். ஆனால், நுழைந்தவுடன் சிவப்பு நிறப்பின்னணியுடன் வட அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி. நிறுவன முதலாளி சாண்டர்சு படத்துடன்கூடிய வணிகச்சின்னம்தான் என்னை வரவேற்றது! ஒரு சில இடங்களில் டெங் சியோ பிங்கின் படங்களைக் கொண்ட பதாகைகளில் சீன எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. நம்மூரில், எப்படி மகிழுந்துகளின் முன்புற…

பாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு

  – தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013   கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா:     “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது.   “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை:  இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…

குறுங்கதைப் போட்டி

  காட்சி ஊடக நுட்பகத்தின் (Visual Media Technologies) 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, துணுக்கு எழுத்தாளர்’சேலம் எசுகா’ உடன் இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி இந்தப் போட்டியில் தேர்வாகும் சிறந்த தேர்வாகும் சிறந்த 50 கதைகள் கைப்பேசி இயங்கு தளங்களில் உலகத்தமிழர்கள் காணும் வகையில் கணியனாக (software) உருவாக்கப்படும். கதைகளை அனுப்பவும், தொடர்பிற்கும் மின்வரிகள் murali@visualmediatech.com yeskha@gmail.com கதைகள் அனுப்ப கடைசி நாள் : 20.07.2014 முதல் பரிசு : 20 ‘கிராம்’ வெள்ளி நாணயம் இரண்டாம் பரிசு : 10…

கரை சேருமா கச்சத்தீவு? – க. இராமையா

  தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய சிக்கல், கச்சத்தீவு பற்றியது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களைக் காவு வாங்கியும், பசியடங்காக் காலனின் கொடுமைக்குக் காரணமான கச்சத்தீவின் சிக்கலுக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவைத் தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று?   தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், இராமேசுவரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தொலைவு, 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20 ஆம் நூற்றாண்டில்,இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த…

நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கியப் போட்டி

(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா) ‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம். படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும். கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது. கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக…

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆடி 10, 2045 / 26-07-2014

நிகழ்ச்சி நிரல் செம்மொழித் தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு உரை: பேராசிரியர் அ.சண்முகதாசு சிறப்பு விருந்தினர்கள் உரை: பேராசிரியர் அ.யோ.வ.சந்திரகாந்தன் முனைவர் பார்வதி கந்தசாமி திரு.குணரட்ணம் இராசுகுமார் ஆனி மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம் ஐயந்தெளிதல் அரங்கு நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் [3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9] தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்