nellaikumarakapilan01

(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா)

‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும்.

கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது.

கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக உரூபாய் 2500, இரண்டாம் பரிசாக உரூபாய் 1500 மூன்றாம்பரிசாக உரூபாய் 1000 என அளிக்கப்படும்.

கவிதை வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20.07.2014

படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர் குமார சுப்பிரமணியம்,
செயலர்,
நெல்லை குமார கபிலன் இலக்கிய அறக்கட்டளை
தமிழ்மனை
854, இரண்டாம் தெரு,
தி.வி.சுந்தரம் நகர்,
திருநெல்வேலி 627 011