அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 21-23
(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 21. நரியும் பூனையும் காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது. நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது. சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் களிப்புற்றது. மற்றொருநாள் பூனை நரியை நகரத்திற்குள் விருந்துக்கு அழைத்தது. நகரத்திற்குள் வர நரி முதலில் தயங்கினாலும், பூனை கூறிய…
சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 731. Adaptation தழுவமைவு தகவமைவு வழியாக்கம் இந்தியச் சட்டத்தின் கீழ் தழுவல் என்பது அடிப்படையில் வடிவமைப்பின் மாற்றமாகும், அஃதாவது பதிப்புரிமை பெற்ற படைப்பு ஒரு வடிவமைப்பிலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றப்படுவது. கணிசமான அளவு புதிய உள்ளடக்கத்தைச் சேர்ப்பதன் மூலம் தழுவல் படைப்பு உருவாக்கப்பட்டால், அத்தகைய வேலை இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் தழுவலாகக் கருதப்படாது. சிலர் தழுவி எழுதி முற்றிலும் தனதுபோல் காட்டிக்கொள்ளவர்….
உ.வே.சா.வின் என் சரித்திரம் 104 – மடத்திற்கு வருவோர்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 103 – தேசிகர் சொன்ன பாடங்கள்-தொடர்ச்சி ) என் சரித்திரம் அத்தியாயம்—66 மடத்திற்கு வருவோர் மாணாக்க நிலையிலிருந்து நாங்கள் கற்று வந்த அக்காலத்தில் தேசிகர் கட்டளைப்படி ஆசிரிய நிலையில் இருந்து மடத்தில் உள்ள குட்டித் தம்பிரான்களுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ் நூல்களைக் கற்பித்தும் வந்தோம். என்னிடம் பாடம் கேட்டோர் என்னிடம் அக்காலத்திற் படித்த தம்பிரான்கள் சுந்தரலிங்கத் தம்பிரான். விசுவலிங்கத் தம்பிரான். சொக்கலிங்கத் தம்பிரான். பொன்னம்பலத் தம்பிரான். மகாலிங்கத் தம்பிரான், வானம்பாடி சுப்பிரமணியத் தம்பிரான். சிவக்கொழுந்துத் தம்பிரான் முதலியோர். வெள்ளை வேட்டிக்காரர்களுள் பேரளம்…
சங்க இலக்கியங்களில் அறிவியல் – 2, இலக்குவனார் திருவள்ளுவன், ஆத்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம்
அறிவியல் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வழங்கும் சங்க இலக்கியங்களில் அறிவியல் பகுதி 2 தமிழ் வளர்ச்சி மன்றம், ஆத்திரேலியா இணைய வழிக் கூட்டம் நாள்: ஆவணி 23, 2055/ 08.09.2024 இந்திய நேரம்: காலை 11.00 ஆத்திரேலியா நேரம் பிற்பகல் 3.30 இணைப்பு : https://streamyard.com/e184uetnv7 காணொளி : https://www.youtube.com/watch?v=sYNvpy RSA
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் அ.4. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல் – தொடர்ச்சி பொதுவாக மருத்துவத்தில் நோயாளியின் நிலை அறிவதே முதன்மையானது. நோயாளி நிலை என்பது நோயுள்ள உடல்நிலை மட்டுமன்று; நோயாளியின் மன நிலையுமாகும். உடல் நோய் நோயாளிக்குத் தரும் இடையூறு, இடுக்கண் உள்ளத்தைச் சோர்வடையச் செய்யும்; வருத்த வைக்கும்; அச்சத்தை ஏற்படுத்தும்; கலக்கத்தைக் கிள்ளிவிடும். தீர்ப்பான் இம்மனநிலையை உணரவேண்டும். முதலில் நோயாளியோ, இயல்பானமாந்தனோ இம் மனத் தாக்கத்தைப் பெறாது அமையும் முறையைக் கையாளவேண்டும்…
சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 721. Ad Interim இடைக்கால இடைப்பட்ட காலத்துக்குரியதை அல்லது இடைப்பட்டக் காலத்தில் நேர்வதைக் குறிப்பது. இலத்தீன் தொடர் 722. Ad Interim Injunction இடைக்கால நெறிகை இடைக்கால ஏவுரை இடைக்கால உறுத்துக் கட்டளை இடைக்கால உறுத்தாணை இடைக்கால ஏவாணை இடைக்காலத் தடையாணை வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது நீதி மன்றத்தால் வழங்கப்படும் இடைக்காலத் தடையாகும். விண்ணப்பதாரர் இத்தடை…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ? – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 17. நொச்சியும் உழிஞையும் மண்ணாசை கொண்டு, அண்டை நாட்டு அரசனோடு போரிடப் போன ஓர் அரசன், போரை விரும்பி மேற்கொண்டவனாதலின், அப்போரை மேற்கொள்வதன் முன்னர், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு வாய்ப்புடைய இடம் மாற்றானுக்கு வாய்ப்புடைய இடம், ஆகியவற்றைப் பலமுறை ஆராய்ந்து, ஆராய்ந்து, தன் வலிமிக்க நிலையில், தனக்கு ஏற்புடைய காலத்தில், வாய்ப்புடைய இடமாக நோக்கிப் போர்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு-தொடர்ச்சி) பூங்கொடி மீனவனைப் பழித்தல் என்றனன்; அவ்விடை இருந்தவர் ஒருவர் `நன்று நன்றடா! மரபினை நவிலக் கூசினை யல்லை! குலவுநின் மரபோ 125 ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை! சாதி கெடுத்தவள் தந்தைசொல் விடுத்தவள் வீதியில் நின்றவள் விடுமகன் நீயோ எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினை? வம்பினை விலைக்கு வாங்கினை சிறியோய்!’ 130 என்றிவை கூறி ஏளனம் செய்தனர்; மீனவன் வெஞ்சினம் `பெரியீர்! ஏளனப்…
சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 711. Actus Reus Non Facit Reum Nisi Mens Sit Rea குற்றம் புரியும் நோக்கில் செய்யாத செயல் குற்றமாகாது. குற்ற மனமில்லாத வரை செயல் ஒருவரைக் குற்றவாளியாக்காது, என்பதே இதன் விளக்கமாகும். பொது விதியாக, மனப் பிழை இல்லாமல் மேற்கொள்ளும் செயலுக்குக் குற்றவியல் சட்டம் பொறுப்பாக்காது. எனவே, மனமும் செயலும் சட்டமுரணாக இருந்தால்தான் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்ல இயலும். இலத்தீன்…
இலக்குவனார் நினைவு நாள் கட்டுரை: ஆங்கிலத் திணிப்பால் ஆட்சியை இழக்க விரும்புகிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தித்திணிப்பால் பேராயக்(காங்கிரசு) கட்சி ஆட்சி அகன்றது. ஆங்கிலத்திணிப்பால் தி.மு.க. ஆட்சி அகல ஆட்சியாளர்களே விரும்புகிறார்களா? தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் நினைவு நாள் ஆவணி 18 / செட்டம்பர் 3. இலக்குவனார், தம் வாணாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ்க்காப்பிற்காகவும் பல போராட்டக் களங்களைச் சந்தித்தவர். தமிழ்க்காப்பு என்பது பிற மொழிகளின் ஆதிக்ககத்திலிருந்தும் திணிப்புகளிலிருந்தும் தமிழைக் காக்கப் போராடியதுமாகும். “தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும்…
அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20
(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 16. தியாகக்கதை & 17. இன்சொலின் சிறப்பு – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 18. பொதுத் தொண்டு நான் ஒருமுறை பெங்களுர் சென்றிருந்தபோது, 95 வயதைத் தாண்டிய ‘சர். விசுவேசுவர ஐயா’ அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு கன்னட நண்பரின் துணையோடு பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம், என்னைப் “பொதுத் தொண்டு செய்பவர்” என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். பழுத்த பழமாகச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த சர். விசுவேசுவர ஐயா அவர்கள்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 701. Actuary பத்திரச் சான்றர் பத்திரச் சான்றாளர் காப்பீட்டு ஆலோசகர் காப்பீட்டு அறிவுரைஞர் காப்பீட்டு மதிப்பீட்டாளர் வாணாள் காப்பீட்டு நலன்கள், காப்பீட்டுப் பத்திரங்கள் முதலியவற்றை மதிப்பிடும் வல்லுநர். (ஆ.கா.க.சட்டம்(L.I.C.Act), பிரிவு 2(1) 702. Actuate தூண்டு செயல்படுத்து ஒரு செயல் நிகழ உந்துதலாக இருப்பது மேற்குறித்தவாறு பொதுவான பொருளில் வரும் இச்சொல், சட்டத்துறையில் ஒரு குற்றச்…
