சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 351. Accession register அணுகல் பதிவேடு இதனை அருங்காட்சியக அணுகல் பதிவேடு, நூலக அணுகல் பதிவேடு என இரண்டாகக் குறிக்கலாம். அருங்காட்சியகத்திலுள்ள நிலையான காட்சியகப் பொருள்களின் பதிவுகளை மேற்கொள்வதற்குரிய பதிவேடு. நூலகத்தில் உள்ள புத்தகங்கள், ஒலிஇழை, ஒளிஇழை முதலான பல்வேடு வடிவங்களில் உள்ள நூற்பதிவுகள் ஆகியவற்றைப் பதியும் பதிவேடு. 352. accession to office பதவியிலிருத்துகை ஒருவரைப் பதவியில் அமர்த்தி இருக்க வைத்தல்….
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 201-215 201. திருச்சிறு புலியூர் உலா 1951 குறிப்புரை : கி. இராமாநுசையங்கார் 202. மறைமலையடிகள் – புலவர் அரசு 1951 203. கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு – அ. அருளம்பலம் 1952 204. சீனத்துச் செம்மல் – புலிகேசி 1952 205. பணம் – ரெ. சேசாசலம் 1953 206. நான்கண்ட…
பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2; இலக்குவனார் திருவள்ளுவன்
(பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½ – தொடர்ச்சி) முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2 மக்கள், மன்பதை, குடும்பம், அன்பு, விருப்பு-வெறுப்பு, நட்பு, வானகம்-வையகம், அண்டம், இயற்கை, அரசு, போர், அழுக்காறு, நன்னெறி, அறம், ஒழுக்கம், அரசாண்மை, அறிவு, வாழ்க்கை, பற்று, காலம், மொழி, பொருளியல், அரசியல், உறவு, வலியறிதல், பொறுமை, பணிவு, எளிய தீர்வுகள் எனப் பல பொருண்மைகளில், திருக்குறள் நூலிலும் தாவோ தே சிங்கு நூலிலும் உள்ள ஒப்புமைக் கருத்துகள் பலவற்றையும் எடுத்து…
சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 341. Access, direct நேரடி அணுகல் மின்னஞ்சல் முதலியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பு. 342. Access, open court to Which the public may have மக்கள் அணுகுவதற்கேற்ற வெளிப்படையான நீதிமன்றச் செயற்பாடு. கொள்கையளவில், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை அணுகலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றத்தின் மூலம் நீதி பெற உரிமை உண்டு என்பதை இஃது உணர்த்துகிறது. எந்தவொரு குடிமகனும் தங்கள்…
தேர்தல் முடிவுகளின் தாக்கம்! | தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி
முற்றம் இணையத் தொலைக்காட்சி தேர்தல் முடிவுகளின் தாக்கம் இலக்குவனார் திருவள்ளுவன் உடன் விசவனூர் வே. தளபதி உரையாடல்
உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 90 : அத்தியாயம்-55 : சிறு பிரயாணங்கள்-தொடரச்சி) என் சரித்திரம்நான் இயற்றிய பாடல்கள் தஞ்சை மார்சல் கல்லூரி தமிழ்ப்பண்டிதரும் என் ஆசிரியருடைய மாணாக்கருமாகிய ஐயாசாமிப்பிள்ளையென்பவரும் இலக்கணம் இராமசாமி பிள்ளையென்பவரும் வேறு சிலரும் விரும்பியபடி ஆசிரியர் தஞ்சை சென்று அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தார். அக்காலத்தில் நான் அவருடைய உத்தரவின்படியே உத்தமதானபுரம் சென்று என் தாய் தந்தையரோடு இருந்து வரலானேன். என் சிறிய தகப்பனாருடைய வருவாய் போதாமையால் குடும்பம் மிக்க சிரமத்தோடு நடைபெற்று வந்தது.அக்குடும்ப நிலை திருந்தவேண்டுமாயின் என் தந்தையார் மீட்டும்…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 19 : செங்கோன் தரைச் செலவு
( (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை-தொடர்ச்சி) தமிழர் வீரம் செங்கோன் தரைச் செலவு செங்கோன் படையெடுப்புசெங்கோன் என்பவன் பழங்காலத் தமிழரசருள் ஒருவன். அவன் ஆண்ட நாடு பெருவளநாடு. அந்நாட்டில் மணிமலையும், பேராறும், முத்தூரும் இருந்தன என்பர். அம் மன்னவன் அயல் நாட்டின்மீது படையெடுத்தான்; போர் புரிந்தான்; வெற்றி பெற்றான். அப்போரைப் பாடினார் சேந்தன் என்ற செந்தமிழ்க் கவிஞர். “செங்கோன் தரைச் செலவு” என்பது அப்பாட்டின் பெயர். யாத்திரை என்ற வடசொல்லைப் போலவே செலவு என்ற தமிழ்ச் சொல்லும் படையெடுப்பைக்…
பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½; இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 1/2 முனைவர் மெய்.சித்திரா அறிவியலிலும் கணிப்பொறிப் பயன்பாட்டிலும் வரலாறு-தொல்லியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன் தகவல் முறைமைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்; கல்வெட்டியலில் பட்டயம் பெற்றுள்ளார்; இதழியலில் சான்றிதழ் பெற்றுள்ளார்; தொடர்ந்து கல்விப் பட்டங்கள் பெற்று வருகிறார். தமிழ்-கொரிய, தமிழ்-சுமேரிய, தமிழ்-சீன பண்டைய தொடர்புகள், கோவில் குறியீடுகள், கோலங்கள் பற்றிய ஆய்வாளராகத் திகழ்கிறார். ஆங்காங்கு தமிழ் மலர் ஆசிரியராக 4 ஆண்டுகள்(2014-2018) தொண்டாற்றி யுள்ளார். 2020 முதல் ‘இலக்கியச் சுடர்’ மின்னிதழ் ஆசிரியர்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 07. திருக்கோவையார் உரைநயம்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!-தொடர் ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 4. திருக்கோவையார் உரைநயம் மணிவாசகர் பாடிய இருவாசகங்கள் திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். செவிக்கும் சிந்தைக்கும் இனிக்கும் சொல் நயமும் பொருள் நயமும் வாய்ந்த திருவாசகத்தைத் “தித்திக்கும் திருவாசகத்தேன்” எனப் போற்றும் புலவர்கள், திருக்கோவையார் எண்ணுவார்-எண்ண விழைவுகளுக்கேற்ப. ஆரணமாகவும், “ஆகமத்தின் காரணமாகவும் அமைந்து ஆயுந்தொறும் ஆராம்பேரின்ப வாரிதியாகும் எனப் போற்றுவர்.கோவையார் பெற்றிருக்கும் இவ்வின்பக்குவியல்களைப் படிப்பார் உள்ளத்தில் கொண்டு சென்று கொட்டுவது, அக்கோவைக்குப் பேராசிரியர் வகுத்திருக்கும் உரையாகும். அவர்…
சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன் Accepted and countersigned ஏற்று மேலொப்பமிடப்பட்டது ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது. ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள், என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும். Accepted in principle கொள்கையளவில் ஏற்றல் முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல் – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 11. ஏடு பெற்ற காதை பொழிலில் பூங்கொடி தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்க் தோமறு தமிழ்க்குக் கொண்டுகள் ஆற்றப் பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள் பொழில் நலங் காணும் விழைவினள் செல்வுழி, மூதாட்டி வருகை மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி நரை மூதாட்டி நல்லன எண்ணிப் புரையறு செயலே புரிவது காட்டும் முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள், அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே எதிர்ப்பட் ‘டாயிழாய் யார்நீ…
சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 321. acceptance of final bill இறுதிப் பட்டி ஏற்பு இறுதிப் பட்டியை ஏற்றல் கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல். 322. acceptance of less sum குறை தொகை ஏற்பு குறைந்த தொகை ஏற்றல் ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல். 323. acceptance of offer தருகை ஏற்பு…
