500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது

20.04.16 அன்று வழங்கப்படவிருந்த பெருந்தோட்ட 500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம்  நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் 3021 பேரில் 820 பேர் பேருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு 27.04.2016 ஆம்  நாள் நியமனம் வழங்கவுள்ளதாகக் கல்லி  இணையமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்தார். குறிப்பாக இந்த நியமனம் 20.04.2016 அன்று வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டருந்தது. சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்துச் சிக்கல்கள், மடல்…

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி!

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும்  ஒளிப்படப் போட்டி!   கோவை  இலட்சுமி இயந்திரப்பணிகள் (Lakshmi Machine Works Limited/LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த  முனைவர் செயவர்த்தனவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் தே.செ (D.J.) நினைவு  ஒளிப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது.  போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  எந்த அகவையினரும் கலந்து கொள்ளலாம்.  யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். படங்கள் இந்தியாவில் எடுத்ததாக இருக்கவேண்டும். அனுப்பும் படத்திற்குக் கட்டாயமாகத் தலைப்பு கொடுக்கப்பட வேண்டும். படங்களை  இணையவழியில்தான் அனுப்பவேண்டும்.   இயற்கை…

தமிழ்பற்றிய ஒற்றைவரி உண்மைகள் அனுப்புக – பொள்ளாச்சி நசன்

தமிழ்பற்றிய  ஒற்றைவரி உண்மைகள் அனுப்புக  – பொள்ளாச்சி நசன்     தமிழையும், தமிழர்களையும், அடையாளம் காட்டுகிற, உயர்த்திப்பிடிக்கிற,வரலாறு காட்டுகிற, வழி அமைக்கிற —  ஒற்றை வரிகளாக – எழுதி, உரியவரிடம் படம்  வரைய வைத்து, ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு வரி என்று அச்சாக்கி, அதனை ஆங்கில மொழியிலும் மொழி பெயர்த்து,  நூலாக்கிப் பரவலாக்கினால், நம் தமிழ் மொழியை உலகோர் உணர்ந்து உயர்த்திப் பிடிப்பர். அதற்கான தளம் அமைப்போம்.   முதற்கட்டமாக அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒற்றை வரிகளை எழுதுவோம். தனி ஒரு மனிதரது…

வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை

  வேட்பாளர்களும்  வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை     வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது.   வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம்.   தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு  (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும்.  …

பாலுமகேந்திரா விருது 2016 : குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன – தமிழ்ப்பட நிலையம்

பாலுமகேந்திரா விருது 2016 – (குறும்படங்களுக்கு மட்டும்) நண்பர்களே இயக்குநர் பாலுமகேந்திரா  நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது  நினைவுநாளான மே 19 அன்று, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்கத் தமிழ்ப்படநிலையம்(ஃச்டுடியோ) ஏற்பாடு செய்திருக்கிறது. விருதுத் தொகை: உரூபாய் 25000/-   தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும்,  பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.   கலந்துகொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும்….

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டம் : போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டத்துக்குத் தமிழக அரசு துணைபோனால் போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை   “பாறை எரிவளித் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டும் மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணைபோனால், சோழ மண்டல உழவர்களும், பொதுமக்களும் பெரும் சீற்றத்துக்கு ஆளாகி, கிளர்ந்து எழுந்து பெரும் போராட்டத்தை நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள்” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய…

தேர்தல் நிதி வேண்டுகிறது நாம் தமிழர் கட்சி!

தேர்தல் நிதி   வேண்டுகிறது நாம் தமிழர் கட்சி! நாம்தமிழர் கட்சிக்கு நிதியுதவ விரும்புவோர்அறிவதற்கு: நாம்தமிழர் தேர்தல் நிதி வங்கி :  இந்தியன் ஓவர்சீசு வங்கி / Indian Overseas Bank இராசாசி பவன், பெசண்டு நகர் கிளை , சென்னை / Rajaji Bhavan. Besant Nagar. Chennai. கணக்கின் பெயர் : நாம்தமிழர் கட்சி / Naam tamizhar katche கணக்கு எண் :         168702000000150 குறியெண் :               IOBA000189

பிரதிலிபியின் மகளிர் நாள் போட்டி – ‘யாதுமாகி நின்றாள்’

   வணக்கம். ‘யாதுமாகி நின்றாள்’ – மகளிர் நாளை முன்னிட்டுப் பிரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.  காலமாற்றத்திற்கு ஏற்பப் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்துப் பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துகள்/மாற்றுக்கருத்துகள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் எனப் பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். தலைப்புகள் பின்வருமாறு : 1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய பெண்கள்?…

தமிழர்களுக்கு மட்டும் வேண்டுகோள்! – ஆ.சு.மணியன், தமிழர் சங்கம்

தமிழர் சங்கம் ஆ.சு.மணியன்,    திருத்துறைப்பூண்டி அன்பு வேண்டுகோள்   உலகத்தமிழர்களே!   உலகத்தமிழர்களை (இணையம் வழியாக) ஒன்றிணைக்க முனைந்துள்ளோம்.   எனவே தமிழர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்! தமிழர்கள் அல்லாதவர்களைச் சேர்க்க மாட்டோம்  எனத் தமிழர் சங்கத்திலிருந்து   அறிவிக்கிறோம். தமிழர்கள் தங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல்முகவரி,   பேசி எண்கள், தந்தை மொழி, தாய்மொழி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குடும்பத்தில் காதல் திருமணம் செய்தவர் இருந்தால் அவர் குறித்த விவரம், மேலும் தமிழ் மக்கள்வளர்ச்சியடைய சிறந்தவழி முதலியவற்றைப்  பகிர்பேசி வழி, மின்னஞ்சல்வழி, யனுப்பிட வேண்டுகிறோம்…

2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்

2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்               இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயல் அமைப்பின் செய்தி:   கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் வழங்கும் வாழ்நாள் அருவினையாளர்(சாதனையாளர்) விருது (இயல் விருது) இம்முறை ‘தமிழ் விக்கிப்பீடியா’ என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சியக் கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17 ஆவது இயல் விருது ஆகும்.   அறிவு என்பதே உலகளாவிய…

பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடரியில் புதிய ஏற்பாடு!

விரும்பிய இடத்தில் மாறிக் கொள்ளும் வசதி!  தனியாகப் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்வண்டியில் புதிய ஏற்பாடு!   தொடர்வண்டிப் பயணத்தின்பொழுது சுற்றிலும் ஆண் பயணிகள் இருந்தால், பெண் பயணிகள் வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளும் வசதியைத் தெற்கு இருப்பூர்தித்துறை (Southern Railway Department) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தெற்கு இருப்பூர்தித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர்வண்டிப் பயணங்களின்பொழுது சில நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு, சுற்றிலும் ஆண் பயணிகளே இருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண்கள் வசதிக்குறைவாகவும், பாதுகாப்பு இன்றியும் உணர்கின்றனர்….