நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்

நீயா நானா முகங்கள் தமிழில் வடமொழிக் கலந்ததால் சேர நாட்டை நாமே இழந்து விட்டோம் இலக்குவனார் திருவள்ளுவனிடம் அசுவின் நேர்காணல்

106.தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள் – சரியா? 107.சனாதன தருமத்தை ஒழிப்பது என்றால் கலாச்சாரத்தை அழிப்பதாகும் – நரேந்திர (மோடி) சரியா? இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம்  இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நன்னெறியான தமிழ் வேதம் எது? தீ நெறியான ஆரிய வேதம் எது? என்பதைப் புரிந்து நாம் பயன்படுத்த வேண்டும்.  தமிழ் வேதங்களைப் “புரையில் நற்பனுவல் நால் வேதம்” என்கிறார்…

வெருளி நோய்கள் 47-50 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள்44-46 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 47-50 47. ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி – Kusaophobia ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி. 00 48. ‘மா&மு’ வெருளி -M&M phobia ‘மா&மு’ இன்கண்டு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் ‘மா&மு’ வெருளி. மார்சு, முர்ரே(Mars & Murrie) நிறுவனங்களின் கூட்டு உருவாக்கம் என்பதால் இதற்கு இப்பெயர். வண்ணப் பொத்தான் வடிவ இன்கண்டு(colorful button-shaped chocolate)களில் ‘எம்’ என்னும் ஆங்கில எழுத்து…

104? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்கிறதா? 105. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை எதிர்க்கிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 இந்திய அரசியல் யாப்பு நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் முதலாவது சம உரிமைாகும்.  இதற்கு மாறாக வருண வேறுபாட்டைக் கூறும் சனாதனம் அரசியல் யாப்பிற்கு எதிரானதுதானே. இந்திய அரசியல் யாப்பு தரும் மற்றோர் அடிப்படை உரிமை தற்சார்பு உரிமையாகும்(Right to freedom) சனாதனம் என்பது பிராமணரையே சார்ந்து இருக்க வேண்டும் என்கிறது. அரசியல் யாப்பிற்கு எதிரான இதை எதிர்ப்பது முறைதானே. “சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன்…

வெருளி நோய்கள் 44 – 46 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 41-43 தொடர்ச்சி) 44. ‘பு – டை’  சொல் வெருளி – Inmaophobia ‘மறைவுறுப்பு’ / ‘cunt’ சொல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ‘பு – டை’ / ‘cunt’ சொல் வெருளி. பெண்களின் மறைவுறுப்பு குறித்த கீழ்த்தரமான சொல்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்  எனப்படும். செருமானியக் குடும்பமொழிகளில்  kunta என்றும் kunte என்றும் conte என்றும் அழைக்கப்பட்டது  ‘cunt’ என ஆனது. பெண்ணுறுப்பு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia உள்ளதால் வேறுபடுத்த வேண்டியுள்ளது….

வெருளி நோய்கள் 41- 43 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 36-40 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 41-43 41. ‘புணர் வாய்’ /’vagina’ சொல் வெருளி – Yindaophobia ‘புணர் வாய்’ /’vagina’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் புணர் வாய் /’vagina’ சொல் வெருளி. பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ‘vagina’ என்ற  சொல்லைப் பொதுவிடங்களிலும் தனிமையிலும் பெண்ணை வெறுப்பேற்ற சொல்கின்றனர். இப்பொழுது அலைபேசிவாயிலாகவும் தெரிவித்து ஏளனம் செய்வோரும் வெறுப்பூட்டுவோரும் உள்ளனர். எனவே, இச்சொல்லைக் கேட்டதும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர். 00 42. ‘புணர்குறி’ / ‘dick’ சொல் வெருளி Imkengphobia ‘புணர்குறி’ /…

103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே!  ? சனாதன நூலான நாட்டிய சாத்திரத்தைப் பார்த்துத்தான் தொல்காப்பியர் எழுதினார். அப்படி என்றால் அவரே சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகத்தானே பொருள் என்கிறார்களே! “தொல்காப்பியத்தால் பெண்கள் மேம்பாடு அடைந்தார்கள். நாட்டிய சாத்திரத்தால் தேவதாசி முறையும், பெண்ணடிமைத்தனமும், பரத்தமையும் (விபச்சாரமும்) வளர்ந்தன.”  என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “தொல்காப்பியம் தமிழ் கற்பவர்களுக்கு எழுதப் பட்டது. நாட்டிய சாத்திரம் இந்தியாவில் உள்ள மக்கள் உல்லாசமாக…

வெருளி நோய்கள் 36-40 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 31-35 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 36-40 36. ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி Deltaphobia ‘(ண்)டி’ / ‘D’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி. 00 37. ‘தீயன்’ / ‘booger’ சொல் வெருளி – Biniuphobia ‘தீயன்’ / ‘booger’ குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘தீயன்’ / ‘booger’ வெருளி 00 38. ‘நரகத்திற்குப் போ’ / ‘damn’ சொல் வெருளி – Jigotophobia ‘damn’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்…

101. வருண வரிசை தவறல்ல- ஆர்.வி.ஆர் என்பவர் 102.   பிற நாட்டார் சனாதனத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். (பாண்டியன் பரிசு, இயல் : 56) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்கிறார் கண்ணதாசன் (கருப்புப்பணம் திரைப்படப்பாடல்) இவ்வாறு சாதி வேறுபாடற்ற பொருளுடைமைதானே நம் இலக்கு. இதன் அடிப்படையில் மிகச் சரியாகச் சுருக்கமாக இலக்கணமாகச் சனாதனம் குறித்து மு.க.தாலின் எடுத்துரைத்துள்ளார்.  வருண அடிப்படையில் இன்னார்க்கு…

வெருளி நோய்கள் 31-35: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 26-30 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 31-35 31. ‘கே’ /’K’ எழுத்து வெருளி – Kappaphobia ‘கே’ /’K’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கே’ /’K’ எழுத்து வெருளி 00 32. ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி – Lantsuophobia சாணக்குவியல்(cock) சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி. 00 33. ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி-Cammaphobia ‘சி’ / ‘C’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி….

99. சனாதன ஒழுக்கத்தை அருத்த சாத்திரம் கூறுகிறதல்லவா? 100. அருத்த சாத்திரம் பொதுவான நீதி நூலா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 (சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என அருத்த சாத்திரம் கூறுகிறது. தமிழ் நெறியோ பிறன் மனை விழையாமையையும் கற்பொழுக்கத்தையும் வலியுறுத்துகிறது. மரம் முதலியவற்றால் இரவில் இலிங்கங்களைச் செய்து வைத்து, இது பூமியைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றிய சுயம்புலிங்கம் என்று எல்லோருக்கும் அறிவித்து அதற்குத் திருவிழா முதலியவற்றைச் செய்யுமுகமாக மக்களிடமிருந்து பொருளை ஈட்டல் வேண்டும். கடவுள், மரம் முதலியவற்றில் தெய்வம் வீற்றிருக்கிறது என மக்களை நம்ப வைப்பதற்காக,…

29.06.2025 நீயா நீனா நிகழ்வில் தலை காட்டுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

வரும் ஆனி 15, 2056 / 29.06.2025 ஞாயிறு நண்பகல் 12.30-2.00 மணி நீயா நீனா நிகழ்வில் நானும் தலை காட்டுகிறேன். மேற்கோள் முதலிய தேவைக்கேற்ப தமிழை ஆங்கிலத்தில் ஒலி பெயர்ப்பு முறையில் எழுதுவது இயற்கையே. ஆனால், தமிழைச் சுருக்கி ஆங்கில எழுத்துகளில் எழுதும் தங்கிலீசு முறையை ஏற்பவர்களை ஒரு தரப்பாகவும் அதற்கு எதிர்ப்பானவர்களை மறு தரப்பாகவும் கொண்டு இந்நிகழ்விற்கான ஒளிப்பதிவு ஏறத்தாழ இரவு 9.00 மணி முதல் மறுநாள் யாமம் 3.00 மணி வரை நடைபெற்றது. நானும், தொண்டினையே புனைபெயராகக் கொண்ட தமிழாசான்,…