உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்! – சி.கருணானந்த இராசா
சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய் வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ! குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும் சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன். கானமயிலாடியதைக் கண்டபொல்லாக் கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி மோனநடம் ஆடியதைப்போல நானும் முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன் செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி) தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில் தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்…
தமிழர் கலாச்சார நற்பணி மன்றம் – 30 ஆவது ஆண்டுகலைத் திருவிழா
ஆவணி 19 & 20, 2046 / செப் 05 & 06. 2015 எசன் நுண்கலைக்கல்லூரி்
தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
எவராலே? ஈழம் சிதைவது எவராலே? தமிழர் அழிவது யாராலே? கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில் தமிழர் மடிவது எவராலே? உணவும் நீரும் சிறிதுமின்றி மருந்தும் உடையும் கிட்டாமல் நாளும் ஒழியும் சூழலுக்குத் தள்ளப்பட்டது யாராலே? கற்பும் பொற்பும் சிதைப்பவரை ஓட ஓட விரட்டாமல் அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை வந்தது இன்று எவராலே? தமிழர் அழுவது யாராலே? இந்தியம் சிரிப்பது எவராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
எமது படையணி விரைகிறது… எம் தேசத்தை மீட்க! – மேதகு வே.பிரபாகரன்
ஈழம் மீட்க அணிவகுத்துள்ளோம்! நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்… அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமதுஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது!…
வெல்வோம் நாமென உறுதியெடு! – இரவி இந்திரன்
வெற்றி நமக்கென முழக்கமிடு! வெல்வோம் நாமென உறுதியெடு! வல்லவனே வாழ்வான் வரலாறு சொல்கிறது. வெல்பவனே வாழ்வான் வெளிப்படை உண்மை. கொல்வோம் என்றொரு போர்க்குணம் கொண்டு எல்லையில் நிற்கிறது சிங்களம் இன்று வெல்வோம் நாமென வேங்கைகள் கூட்டம் பகை வென்றே காக்கிறார் எங்களின் தேசம் தருமம் என்றொரு அடிப்படை உண்டு தமிழனின் பக்கம் எப்போதும் உண்டு வெற்றி என்றொறு மந்திரம் உண்டு எங்கள் தலைவனுக்கது சொந்தம் என்றும் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் செய்! இரத்தம் சிந்தும் யுத்த அரசியல் செய்! அப்போது தான் நீ…
இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்
மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…
தமிழர் தம்முடைய பண்புகளிலும் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் – பேராசிரியர் சு. வித்யானந்தன்
தமிழர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர்(தமிழர்) நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தனால் திராவிடருக்கு(தமிழர்) உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம். இப்பொழுது கூடத் தமிழ் நாட்டிலும் ஈழத்தின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப்…
முள்ளிநிலத்தில் கள்ளக் கொலையாளிகள்! – – கவிஞர் தணிகைச் செல்வன்
முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…! பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம் முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…! கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ…! ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும் இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ…! ஐயோ உலகே! ஐயகோ பேருலகே! பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ? கையேந்தி வந்தாரைக் கரமேந்தி காத்த இனம் கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும். எல்லாம் இழந்தோம்…
தமிழீழ மக்கள் நினைவேந்தல் – சென்னைக் கடற்கரையில் அணிவகுப்பு மலரஞ்சலி
வைகாசி 3, 2046 / மே 17, 2015 (படத்தின் மேலழுத்திப் பெரிதாகக் காண்க.) – பதிவு
தொடரும் …. இனப்படு கொலை – அறிவாயுதத்தின் கருத்தரங்கம்
வைகாசி 09, 2046 / 23.05.2015 சென்னை
சுவிசு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அன்னை பூபதி விளையாட்டுப் போட்டிகள்
வைகாசி 17, 2046 / 31.05.2015
நினைவேந்தல்கள் – பெ.மணியரசன் & கரூர் இராசேந்திரன்
&