இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)   ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5).  தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.  ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம்…

மொழியுரிமை மாநாடு, சென்னை

  மொழி உரிமை மாநாடு – பொது நிகழ்வு     வணக்கம். எதிர்வரும் புரட்டாசி 02-03 / செப்டம்பர் 19-20   நாள்களில் நடைபெறவுள்ள, தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் நடத்தும் மொழியுரிமை மாநாட்டின் பொது நிகழ்வுக்குத் தங்களை அன்போடு அழைக்கிறோம். மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு கூட்டியக்க உறுப்பினர்களும் மொழிக்கொள்கை அறிஞர்களும் கலந்துகொள்ளும் கலந்துரையாடல். அதன் இரண்டாம் நாள் அமர்வுகள் அனைத்தும் மொழியுரிமையில் ஆர்வமுள்ள அனைவருக்குமான பொது நிகழ்வாகும்.   உள்ளரங்க நிகழ்ச்சி புரட்டாசி 02 / செப்டம்பர் 19, 2015 கவிக்கோ…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி)      சங்கப்புலவர்கள் மரபில் அகவற்பாக்கள் பலவற்றை எழுதியுள்ள பேராசிரியர்  இலக்குவனார் அவர்கள், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாவகைகளிலும் பாக்கள் யாத்துச் செந்தமிழ்வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பை அளித்துள்ளார். விருத்தம், கண்ணி, கீர்த்தனை வடிவங்களில் இசைப்பாடல்களையும் எழுதித் தமிழிசை இயக்கத்திற்கு எழுச்சியும் ஏற்படுத்தியுள்ளார். தமிழர் தலைவர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளதுடன், வாழ்த்துப் பாடல்கள், இரங்கற்பாக்கள், பொங்கல் வாழ்த்துக் கவிதைகள், திருமணநாள் வாழ்த்துகள், படையல் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர் சி….

கணித்தமிழ் எழுத்தரங்கம்

பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கம் 1. கணித்தமிழ் எழுத்தரங்கம் பதின்மூவருக்குப் பரிசுகள் பங்கேற்பாளர்களுக்குக் கணித்தமிழ் ஆர்வலர் விருதிதழ்கள்   தமிழ்க்காப்புக்கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து ‘அகரமுதல’ மின்னிதழ் மூலமாகப் பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கத்தை நடத்த உள்ளன. ஒவ்வோர் அறிவியல் துறையிலும் பாடநூல் நோக்கில் கட்டுரைகளையும் சொல்லாக்கங்களையும் (நல்ல) தமிழில் எழுதி அனுப்ப வேண்டும். இவை ‘அகரமுதல’ மின்னிதழ்த்தளத்தில் வெளியிடப் பெறும். கருத்தாளர்கள், தத்தம் கருத்துகளை கட்டுரைகளின் பின்னூட்டாகப் பதிய வேண்டும். அதன்பின் கட்டுரையாளர்கள் ஏதும் திருத்தம் இருப்பின் குறிப்பிட வேண்டும். கட்டுரைகளும்…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி)   3 ஙா.) குழுக்கள்: குழுக்களில் தமிழறிஞர்களுக்கு இடமில்லை அல்லது மிகச் சிறுபான்மையராக உள்ளனர். பன்னிருவர் உறுப்பினராக உள்ள பொதுக்குழுவிலும் ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள இயக்குநர் குழுமக்குழுவிலும் பதவி வழி உறுப்பினர்கள்தாம் உள்ளனர். தமிழறிஞர்கள் இல்லை. பதினொருவர் உறுப்பினராக உள்ள கல்விப் பேரவைக் குழுவில் இருவர் மட்டுமே தமிழறிஞர்கள். ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள கைப்பேசி வல்லுநர் குழுவில் ஒருவர்கூடத் தமிழறிஞர் இல்லை. பத்தொன்பதின்மர் உறுப்பினராக உள்ள அறிவுரை(ஆலோசனை) நிலைக் குழுவிலும் தொடக்கத்தில் தமிழறிஞர் இல்லை….

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 5   & 8.] யாப்பருங்கலம் & யாப்பருங்கலக்காரிகை இவற்றுள், பொருளடக்கம் பகுதி மேற்பகுதியில் தேடுதல் தலைப்பின் கீழ்ப், பக்கம் தேடல் பாடல் தேடல் சொல் தேடல் உள்ளன(பட உரு 29). இருப்பினும் உள் பக்கங்களில் ‘சொல் தேடல்’ தலைப்பு இல்லை. பக்க எண் தேடல் மட்டுமே உள்ளது(பட உரு 30). யாப்பருங்கலத்தில். பொருட்குறிப்பகராதி அரும்பதம் முதலியவற்றின் அகராதி சூத்திர முதற்குறிப்பு அகராதி இலக்கண மேற்கோள் முதற்குறிப்பு அகராதி இலக்கிய மேற்கோள் முதற்குறிப்பு அகராதி…

இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.   தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும்…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) 2   தமிழ்ப்புலமையுள்ளவர்களே இயக்குநர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அரசிற்கு முறையீடு அளிக்கப்பட்டது. இதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது :  “இத்தகைய நோக்கங்களையும் குறிக்கோளையும் நிறைவேற்ற தமிழ்ப்புலமை உள்ளவர் அதனை வழி நடத்தலே ஏற்றது என அனைவரும் அறிவர். ஆனால் இயக்குநராக நியமிக்கப்பட விரும்பியவரின் தகுதி அடிப்படையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அப்போதைய அரசால் இயற்பியல் / பொறியியல் / தகவலியலில் முனைவர் பட்டம் பெற்றிருத்தலே அடிப்படைத் தகுதியாக…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

      உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர்.   இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத்…

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 4 expertise : தனித்துறைச் சிறப்பறிவுத்திறம், சிறப்புத்திறமை, சிறப்பறிவாளர் ஆய்வுரை, சிறப்பறிவுத் திறம் , சிறப்பறிவாளர் கருத்துரை, தொழில் நுட்ப அறிவு, வல்லமை, நிபுணத்துவம், சிறப்புத் திறன் எனப் பலவாகக் குறிப்பிடுகின்றனர். வல்லமை என்பதையே கையாளலாம். மருத்துவ வல்லமை – medical expertise வல்லமை அறிவாற்றல்     – expertised knowledge வல்லமை மேலாண்மை – expertise management இவ்விடங்களில் வல்லுநர் அறிவாற்றல், வல்லுநர் மேலாண்மை எனக் குறி்க்கின்றனர். அது தவறு. வல்லமையுடையவர் வல்லுநர் ஆவார். இங்கே…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 4 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 3.] சங்க இலக்கியச் சொல்லடைவு இதில் தேடுபொறி இல்லை. அகரவரிசைப்படி நாம் சொல்லைத் தேடுவதற்கு மாற்றாகச் சொல் தேடுதல் அமைந்தால் எளிதில் பொருள்காண இயலும். நேரம் வீணாவது தடுக்கப்படும். நூற்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளது. 4.] திருக்குறட் சொல்லடைவு ‘திருக்குறட் சொல்லடைவு சொல் தேடல்’ என்னும் தலைப்பு உள்ளது. இதன் மூலம் அகரவரிசையிலான முழுப் பக்கங்களைத்தான் காண இயலும்(பட உரு 20). வேண்டும் சொல்லுக்கான பொருளை எளிதில் காண இயலாது. ஆனால், இதில் பக்க…