தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – முதலறிவிப்பு

    நண்பர்களே, கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 /அக்டோபர் 17 – 18  ஆகிய இரு நாளும்  சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – Tamil Typography Conference 2015’’ நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பதிவுகள் – விவரங்கள் கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் 30–09–2015 அன்று வௌியிடப்படும். கணித்தமிழ்ச் சங்கம் / உத்தமம் / ஆசிரியர் / மாணவர்களுக்கு 50% சலுகைக் கட்டணம் உண்டு. மீண்டும் விரிவான தகவல்களுடன்……

கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு   எத்துறையாயினும் அத்துறையறிவு தாய்மொழியில் வெளிப்படுத்தப் பட்டால்தான் அம்மொழியினருக்கு முழுப் பயன்பாடு கிட்டும்; அத்துறையும் சிறப்பான வளர்ச்சியை எட்டும். அந்த வகையில் கணிணியியலில் முழுமையும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டால்தான் கணிணியியல் முழு வளர்ச்சியடைந்ததாகும்.. இப்பொழுது அந்நிலை இன்மையால், அதனை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். கட்டுரையாளர்களும் நூலாளர்களும் இதழாளர்களும் தமிழில் கணிணியியலை விளக்குவதில் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், அவ்வாறு விளக்குவதில் உள்ள ஆர்வம் தமிழைப் பயன்படுத்துவதில் இல்லை. கணிணிக் கலைச்சொற்களாக நல்ல தமிழ்ச் சொற்கள் இருப்பினும் அதைப் பயன்படுத்தாதவர்களும் உளர்; தமிழ்க்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 10 இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 9 தொடர்ச்சி)   10 புறநானூறு: முகப்பு அட்டவணையிலோ பாடல் பக்கங்களிலோ தேடுதல் பகுதி இல்லை(பட உரு 59)   உ.வே.சா. உரைப்பக்க முகப்பு மேற்புறத் தேடுதலைச் சொடுக்கினால், ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன (பட உரு 60). உ.வே.சா. உரைப்பகுதியில் உரைப் பக்கங்களில் ‘பக்க எண் தேடல்’ உள்ளது (பட உரு 61). உரைவேந்தர் ஔவை உரைப்பக்க முகப்புத் தேடலைச் சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘பாடல் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன(படவுருக்கள் 62 & 63)…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 9 இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 8 தொடர்ச்சி)   9 கலித்தொகை: முகப்பிலும் பாடல் பகுதியிலும் தேடுதல் இல்லை. பாடலுடன் கூடிய உரைப்பக்கங்க ளிலும் தேடுதல் பொறியும் இல்லை (பட உரு 51). ஆனால், நேரடியாக உரைக்குச் சென்றால், உரைப்பக்கங்களில் ‘பக்க எண்’ தேடல் வருகிறது (பட உரு 52). உரைப்பக்க அட்டவணை மேற்புறத்தில் உள்ள தேடுதலைச் சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன(படவுருக்கள் 53 & 54) இவ்வாறு, உரைப்பக்கத்தை அணுகும் முறைக்கேற்ப, தேடலின்மை, பக்க எண் தேடல், பக்கமும் சொல்லும்…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 தொடர்ச்சி)   7 ஙி.) மொழிக்கொலைக்குத் துணை நிற்கக்கூடாது :   தமிழ் இணையக்கல்விக்கழகம் அரசு சார் நிறுவனம். எனவே, அரசின் கொள்கைக்குமாறான செயல்களில் ஈடுபடவோ அரசின் கொள்கைக்கு மாறான கருத்துகளைப் பரப்பவோ இடம் தரக்கூடாது. தமிழக அரசு, சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச்சிதைவிற்கு எதிரானது. ஆனால், இதன் தளத்தில் முந்தைய தலைவர் வரிவடிவச்சிதைவில் ஈடுபாடுள்ளவர் என்பதால் அதற்குரிய விளக்கத்தைக் காணொளி வாயிலாகப் பரப்பிவந்தனர்.   அதனை அகற்றுமாறு வேண்டியும் அகற்றவில்லை. அதற்கு மாறான உண்மைக் கருத்தை…

வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை – த.தே.வி.இ.கருத்தரங்கம்

திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம்   இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் …. இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம். திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து……

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 8 இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 7 தொடர்ச்சி) 8 38-45.] எட்டுத்தொகை    நற்றிணை    குறுந்தொகை பிற நூல்களில் முகப்புப் பக்கம் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பும் அதைச் சொடுக்கினால் தேடுதல் பகுதியும் வரும். மாறாக, இவற்றில் தலைப்பில் ‘சொல்’ தேடுதல் பகுதி உள்ளது(படவுருக்கள் 40 &41)    ஐங்குறுநூறு உரையில் மட்டும் தேடுதல் பகுதி (பக்கம் தேடல், சொல் தேடல்) உள்ளது(படவுருக்கள் 42 & 43). பதிற்றுப்பத்து: முகப்பு இடப்பக்க அட்டவணையிலும் தலைப்பிலும் தேடுதல் குறிக்கப் பெற்றுள்ளது. சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’,…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

 (அகரமுதல 95, ஆவணி 20, 2046 /  செப்.06, 2015 தொடர்ச்சி) மீள்பார்வைக் குழு : த.இ.க.கழகத்தின் தளத்தில் நூற்பதிவு முடிந்த பின்னர் அல்லது இது போன்று ஏதும் பதிவாக்கம் முடிந்த பின்னர் அவை சரியான முறையில் உள்ளனவா எனப் பார்ப்பதில்லை. ஒருவரிடம் அல்லது அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர், அவர்கள் பணி முடிவிற்குப் பணம் கொடுத்ததும் அப்பணி நிறைவுற்றது என்ற போக்கே இக்கழகத்தில் உள்ளது. எனவே, தவறுகள் கண்டறியப்படாமல் உள்ளன. எனவே, மீள்பார்வைக் குழுவை அமைத்து, ஒவ்வொரு பணி முடிந்த பின்னர் உரிய…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப். 06, 2015 தொடர்ச்சி)   7 11.] நம்பி அகப்பொருள் விளக்கம் 11.1 முகப்பிலோ, மூலப் பாடலிலோ, மூலமும் உரையும் இணைந்த பகுதியிலோ தேடுதல் பொறி இல்லை. 11.2.உரைப்பகுதி முகப்புப் பக்கத்தில் மட்டும் தேடுதல் குறிக்கப்பெற்று, அதனைச் சொடுக்கினால், பக்கம் தேடல், சொல் தேடல் வருகின்றன(படவுரு 38) 11.3. ஒருவரின் (திரு கா.இர. கோவிந்தராச முதலியார்) உரைதான் உள்ளது. எனினும் வழக்கம்போல் உரைப் பகுதியைத் தேர்வு செய்தால் மட்டுமே உரை காண இயலும் (படவுரு…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) 4 த.இ.க.க.வளர்ச்சிக்காக அமைக்கப்பட வேண்டிய குழுக்கள்: என்னென்ன குழுக்கள் தேவை எனப் பார்ப்போம். செம்மையாக்கக் குழு:    த.இ.க.கழகத்தின் பாடங்களில் தவறுகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு அடிப்படையில் எழுத்து வளர்ச்சி எனக் கூறுவது தவறான விளக்கம். கல்வெட்டில் உள்ளதுபோன்ற எவ்வரிவடிவ மாற்றமும் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றதில்லை. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என இலக்கண நூல்களே வரிவடிவ மாற்றமின்மையைக் குறிக்கின்றன. எனவே, இது போன்ற…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)   ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5).  தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.  ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம்…