இலக்குவனார் விழா

  திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் இலக்குவனார் முப்பெருவிழாவினைச் சிறப்பாக நடத்தின.   மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  3 நாளும் தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாளும் முப்பெரு விழாக்கள் நடைபெற்றன.   ம.தி.தா.இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட  தொன்மை வளம் சான்ற கல்லூரி….

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 ‘’ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்  புடைத்து’’ (398) இதில் ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு ‘ஒருபிறவி’,’ஏழுபிறவி’ என்று பொருளுரைத்தார். அவ்வாறு சொல்வது அறிவுக்கு ஒத்ததாக இல்லை என்று இலக்குவனார் சொன்னார். அவர் சொன்ன கருத்து ஒருமை-திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு எழுமை-மிகுதியும் “திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு கற்றகல்வி மிகுதியும் உறுதிதர வல்லது”…

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2- முனைவர் க.தமிழமல்லன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 இலக்குவனார் தன்மானமும் தமிழ் மானமும் போற்றிய பேராசிரியர். தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிகளிலும் சிறந்த ஆற்றல்பெற்றவர். தாம் பெற்ற அரசுப் பொறுப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத துணிச்சல் மிக்கவர். தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இழைக்கப்படும் தீங்குகளை இயன்றவரை எதிர்த்த வேங்கை. தவறு செய்வோர் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கும் இயல்பு கொண்டு…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 5/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம்   பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 5/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in குறள்நெறிப் பரப்புரைப்பணி பள்ளிமாணாக்கனாக இருந்த பொழுது உணவு நேரத்தில் அமைதி காப்பதற்காக நாள்தோறும் திருக்குறளைப்படிக்கும் பழக்கத்தை மேற்கொணடிருந்தார் பேராசிரியர் இலக்குவனார். படிக்குந்தோறும்  படிக்குந்தோறும் அதன் இன்பத்தில் மூழ்கினார். குறள்நெறியையே தம் வாழ்வின் நெறியாக அமைத்துக் கொண்டார். தாம் பெற்ற பேறு இவ்வையகம் பெற வேண்டும் என்றல்லவா ஆன்றோர் எண்ணுவர். அதன்படி…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in சொல்லாய்வுப்பணி   சொல்லாய்வின் மூலமாகத் தமிழின் தொன்மை, தூய்மை, காலம் முதலியவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் வரையறுக்கிறார்.   தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்/Origin and Growth of Tamil, தமிழ்ச்சொற்கள் பற்றிய சிற்றாய்வு/A Brief study of Tamil words, தமிழிலக்கண உருவாக்கம்/ Making of Tamil Grammar, தமிழ்மொழியில் முதல்நிலைச் சொற்களும்…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in தொல்காப்பியப் பரப்புரைப்பணி   மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியர் நமக்களித்த தொல்காப்பியம். இன்றைக்கு ஓரளவு தமிழ் படித்தவர்கள் தொல்காப்பியத்தைப்பற்றி அறிந்திருப்பினும் அறிந்திருக்க வேண்டிய அளவிற்கு அறிந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய – இந்திய வரலாற்றாசிரியர்கள் அறிந்திருக்க வேண்டிய – உலக மொழியறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 2/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 2/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in படைப்புப்பணி   படைப்புப்பணியில் குறிப்பிடத்தகுந்த சிறப்பை உடைய மொழிபெயர்ப்புப் படைப்புப்பணியும் அடங்கும். பேராசிரியரின் மொழிபெயர்ப்புப் பணி என்பதும் பள்ளிப் பருவத்திலேயே அரும்பி விட்டது. பள்ளி ஆண்டுமலரில் ஆங்கிலச் செய்யுள்களைத் தழுவி, “உலகம் நமதே! உயர்ந்தோர் நாமே!” என இவர் எழுதிய அகவல் வெளிவந்தது. இதுவே, இவரின் மொழிபெயர்ப்பு ஈடுபாடும் கவிதை ஈடுபாடும்…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 1/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 1/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in   பள்ளிப்பருவத்திலேயே தமிழ்நலப்பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் பேராசிரியச் செம்மல் முனைவர் சி.இலக்குவனார். தம் வாழ்நாளில் இறுதி வரை அத் தமிழ்ப்போராளி தம்முடைய தமிழ்சார் போராட்டப் பாதையில் இருந்து விலகவில்லை. பேச்சும் மூச்சும் தமிழாகக் கொண்டு வாழ்ந்தவர் அச்செந்தமிழ்ச் செம்மல். எண்ணம், எழுத்து, உரை, செயல் யாவும் தமிழ்நலமே எனத் திகழ்ந்தவர்…

கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..

  வினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா? விடைகள்: வட்டார மொழிப்பற்று இந்தியைப் புகுத்துவதற்குத் தடையாயிருக்கும் என்று அரசினர் கருதுவதால், தமிழ் மொழிப் பற்றூற்றும் இலக்கியப் பகுதிகளையும், தமிழ்ப் பற்றையும் தடை செய்கின்றனர். தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் ‘வாழிய செந்தமிழ்’ என்ற பாரதியின் பாட்டைப் பள்ளிகளில் பாட வேண்டாமென்று வேண்டியதும், இளங்கலை, இளமறிவியல் மாணவர்க்குத் தமிழ் இலக்கியப் பகுதியில் அமைந்த ‘கால்கோட்காதை’யை நீக்கியதும் இதற்குச் சான்று. இவ்வாறு மொழிப் பற்றூட்டும் பகுதிகளை நீக்குவதால் அவ்விலக்கியப் பகுதிகள் மறைய…

‘‘பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்

    ‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால் இந்தியைத் தேசிய மொழியாக்குவதில் நியாயமிருக்கிறது’’ -‘‘மொரார்சி’’ 28-3-64, காஞ்சிபுரம். இந்தி, தனிமொழியா? பழமை மொழியா? சொல்வளம், பொருள் வளமுண்டா? எழுத்து வனப்புண்டா? இலக்கிய விலக்கணங்களுண்டா? அறிவியல் நூல்களுண்டா? இந்தி படித்து ஒரு விஞ்ஞானியாகலாமா? ஒரு மருத்துவனாகலாமா? ஒரு பொறியியலனாகலாமா? ஒரு வழக்கறிஞனாகத்தானாக முடியுமா? அல்லது இந்தியைக் கொண்டு பிறநாட்டானோடு கலந்து பேசவியலுமா? என்ற கேள்விகட்கெல்லாம் விடைகள் இல்லையென்பது ஒப்பமுடிந்ததாய்விட்டது. இறுதிக்காரணம்? பெரும்பான்மையினர் பேசப்படுவதென்பதைத் திட்டமிட்டுத் ‘‘திடீர்ப்புளுகு’’கள் மூலம் உயர்த்திக்கொண்டே வருகிறார்கள். பொய்மையெனத் தயங்காது அதனையே மேன்மேலும் உறுதியுடன் பேசிவந்தால்…

கருத்தரங்கம் 3 :இந்தியால் தமிழுக்குக் கேடு…..! – கவிஞர் அரங்கசாமி

இந்தியை விரும்பும் செந்தமிழ் நண்பரே ஐயம் தெளிமின் –    பரணி பாடிய கவிஞர் அரங்கசாமி, இராசிபுரம் ஒருவன் பிறப்பால் தமிழனாயும், மொழியால் தமிழனாயும் இருப்பானாகில் அவன் நாடு எப்பெயரால் வளரும்? தேசியப் பற்றினால் அந்தந்த நாடு வளம் பெற வேண்டுமே தவிர பல கண்டத்தை இணைக்க முடியுமா? இந்தியா என்பது இந்நாட்டின் பொதுப்பெயர் என்று இலக்கியச்சான்று உண்டா? நேருவைத் தலைவராகக் கொள்வதும் காமராசரைத் தலைவராகக் கொள்வதும் அவரவர் விருப்பம், அதனால் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதன்று. மொழியால் தமிழைப்பெற்று, நாட்டை இந்தியா என்றால், இந்தி மொழி…