தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! – பழ.தமிழாளன்

தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! 1 சீரார்க்கும்   எண்ணமுடன்  திகழ்கதிராம்                எழுச்சிநிறை  உணர்வே  பெற்றுச்     செந்தமிழை  இனம்நாட்டை நெஞ்சகத்தே         வைப்பவரைத்  தேரல்   வேண்டும் ! தேராதே  கட்சியையும்  தேர்தலிலே  நிற்ப                          ரையுந்  தேர்ந்தெ  டுத்தால்       தீராத  இன்னலையே  இருகையால்         வணங்கியுமே  அழைத்தல்   ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி                              ரைச்   செகுத்தல்  போல       குடியாட்சி  மாண்பழிக்கும்  கட்சிக்கே                வாக்கினையே  அளிப்போ  மாயின் ஏரார்த்த  தமிழ்மரபும் …

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில் படிக்கும் பொழுதே தனித்தமிழில் கவிதைகள் எழுதியவர். புலவர் படிப்பு மாணாக்கராக இருக்கும்போது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர். மாணாக்க நிலையில் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர்களில் முதலாமவராக இலக்குவனார் விளங்குகிறார். அது மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்புத் தழுவல் படைப்பாகும். அந்த வகையில் படிக்கும்…

இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் வெள்ளம்போல் தமிழர்களின் கூட்டம் அன்று   வீரத்தால் திரண்டெழுந்தபோது நம்மின் தெள்ளமுதத் தமிழ்ப்புலவர் என்ன செய்தார் திறனற்று வாய்மூடி இருந்தார்! ஆனால் கள்ளம்இல் குணம் கொண்டார் தமிழ்ப்ப கையைக் கனன்று எழுந்து தீய்க்கின்ற செந்தீ! அன்பை வள்ளல்போல் அளிக்கின்ற பெரிய ஆசான் வம்புக்குப் பணியாமல் குரல் கொடுத்தார்! சிறையினிலே அடைபட்டார்! இழந்தார் வேலை! செக்கிழுக்கும் மாட்டைப்போல் தமிழா சான்கள் குறைகொண்ட மதியாலே கண்டும் தம்மின் கும்பிஒன்று நிறைந்தாலே போதும் என்று முறையின்றிப் பேசாமல் இருந்தார்! மான மூச்சில்லை! இலக்குவனார்…

நூலாய்வு : சமற்கிருதம் செம்மொழியல்ல

நூலாய்வு:சமற்கிருதம் செம்மொழியல்ல வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருதநாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய்வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகியவை எந்த வகையிலும் இலக்கியத் தரமற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல்களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்தையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.–…

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர். கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது. யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம். எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர்…

உதிக்கும் சூரியனே! – க. இராசேசு

உதிக்கும் சூரியனே! பனியை உருக்க வரும் சூரியன்போல்பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடாபனிமலையையே உருக்க நீ நினைத்தால்பகலவனாய் வானில் நீ எரிந்திடடா! சிறுகச் சிறுக வரும் வியர்வைத்துளிஉன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்பெருகி பெருகி வரும் ஊனின் வலிஉன் உடலை செய்யும் உறுதியடா! ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வுமுடியாப் பாதையின் தொடர்ச்சியடா,வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டுஅதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்இனி எந்தப் பாதையிலும் ஓடிடலாம்! சூழும் துன்ப இருளை நீ நீக்கிடவேபுது சூரியனாய் வானில் உதித்திடடா,சிகர தூரம் அது மிகத் தூரமில்லைஉன் புன்சிரிப்பால் அதை…

இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் – தேமொழி

இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ, தனிமனிதர் ஒருவர் அல்லது சமூகத்தின் குறையை, அவர்கள் உணருமாறு அவர்களுக்கு உறுத்தவேண்டும் என்று வசையாகவும், அதே நேரம் நயத்துடனும் நகைச்சுவையுடனும் சொல்வது அங்கதம் எனப்படும். அதாவது, ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பதுதான் அங்கதம். இந்த இலக்கிய முறையை ஆங்கிலத்தில் ‘சட்டயர்’ (Satire) என்பர். நடுவுநிலைமை, நகைச்சுவை உணர்வு, சமுதாய அக்கறை என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு நகைப்பு, இகழ்ச்சி, நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சிறப்பு கொண்டது அங்கதம். தாக்குதலும் நகையும் இணைந்தே…

தமிழே நீ வாழி! – சந்தர் சுப்பிரமணியன்

தமிழே நீ வாழி! தூய தமிழே நீவாழி!தொன்மைத் தமிழே நீவாழி!பாயும் அமுதின் ஊற்றைப்போல்பழகும் தமிழே நீவாழி!ஆய நூல்கள் அணிகலனாய்அணிந்த தமிழே நீவாழி!தாயின் சிறந்தாய் நீவாழி!தங்கத் தமிழே நீவாழி! கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் வலைத்தமிழ்

சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! அரசியல் சிறப்புக் கட்டுரை Jul 24, 2022 08:49AMJul 24, 2022 IST : –இலக்குவனார் திருவள்ளுவன் சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்! 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி ஆடி 12, 2053 / 28.07.2022 -ஆடி 25, 2053/ 10.08.2022 நாட்களில் நடைபெறுகிறது. சதுரங்க ஞாலப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. நேப்பியர் பாலத்தைச் சதுரங்கக் கட்டங்களாக வண்ணந்தீட்டி விளம்பரப்படுத்துவதிலிருந்து எல்லா வகையிலும் முதல்வர் அவர்கள் அறிவுரைக்கிணங்க அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்….

காப்பியாற்றுப்படை – (உ)ருத்திரா

காப்பியாற்றுப்படை நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்ன‌வால் இயற்றிய வளைஇளம் நெற்றிகண்விழித்தாங்கு மொழி ப‌டாத்து மடமைகாப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்ற‌இலஞ்சி நீழல் குவி இணர் கவிக்க‌எழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்ப‌குணில் பாய் முரசம் உள்ளொலி எதிர‌மழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவிமலர் பொருது மற்று மண் பொருது இறங்கிபொறிப்பரல் முரல  நீர்வழி போன்ம்நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலைமுழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்காட்டி காட்டி மறைக்கும் மன்றிடைகள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்விளைதரும் என்று பலவு வீழ்த்த‌படப்பை…

தமிழன் என்றோர் இனமுண்டு, தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு – க.பூரணச்சந்திரன்

தமிழன் என்றோர் இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில், என் சிந்தனையில், அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வந்தவர்கள் ஒழுகலாறுகளையும்(கலாச்சாரத்தையும்) தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்த ஒழுகலாறுகளைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு. சமற்கிருதத்திற்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ்…

மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!,இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்! மின்னம்பலம் மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. “தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம்…

1 2 52