ஈழ மாணவர் சுட்டுக்கொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை – மே 17

  யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரை சிங்களப் பேரினவாதக் காவல்துறை சுட்டுக்கொலை செய்திருக்கிறது. ஈழ மாணவர் எழுச்சியே 2009 இனப்படுகொலைக்குப் பின்பான அரசியலில் முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள், மாவீரர்  விளக்குகள் விடுதலைக் கனலாய் பல்கலைக்கழக வளாகத்தில் முளைத்திருந்தன. தொடர்ந்து சிங்களப் பேரினவாதத்தின் முயற்சிகளுக்கு எதிராய்ப் போராட்டங்களும், மோதல்களும், முழக்கங்களும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே பிறந்தன. இந்தப் பின்புலத்திலிருந்தே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யாழ் மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய கோரமான படுகொலையின் 29ஆவது நினைவு நாள் இன்று. இந்த நிலையில் இந்தப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பன்னாடுகளின் தோல்வியும், அமெரிக்கத் தீர்மானத்தின்…

வட்டு இந்து இளைஞர் சங்கத்தின் தீபாவளிக்கான சிறப்பளிப்புகள்

  வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் தீபாவளி நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குப் புத்தாடைகளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன..   எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த பரஞ்சோதிஉலோகஞானம், தன் தந்தை பரஞ்சோதி (17.10.2016),  தங்கை இராசேசுவரி (16.10.2016) பிறந்த  நாள்களை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலனற்ற, சிறப்புத் தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குச் சிறப்பு நண்பகல் உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி  நாளினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு  ஏறத்தாழ 1,13,000  உரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு…

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 – சொருணபாரதி

(புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2  தொடர்ச்சி) புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம்  2/2   அத்துடன், தான் பார்த்த ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவற்றையும் விவரிக்கிறார். பசுமந்தான் அருள்மிகு வரதராசப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார்.  அது மட்டுமில்லாமல், அந்தக் கோவிலை வழங்கிய திருவரங்கம்இராசா இராமநாத(ரெட்டியா)ர்பற்றிய குறிப்பையும் தருவதோடு, அவர்தம் கொள்ளுப்பேரன் வாசுவைச் சந்தித்ததையும் குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமின்றி, கோவிலில் தட்டில் போடப்படும் காசைக் கூட அருட்சுனைஞர் (அர்ச்சகர்) எடுத்து உண்டியலில் போட்டு விடுவதைப் பற்றியும்,  கவனிப்புடன் சொல்கிறார். கம்பையில் ஒரு…

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்

(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3   – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி  கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ?. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது?   இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை  ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால்  அணைத்துக்கொள்ளவும் எனது…

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 – க.வி.விக்கினேசுவரன்

(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3  தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3   நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன?   ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் நிகரான நிலை அளிக்கப்பட்டு வந்தது.   ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் வல்லாட்சியை (ஆதிக்கத்தை) நாடு முழுவதும் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற,…

பன்னாட்டுக் கலைப்பாலம் 2016, கனடா

மிகச் சிறந்த ஈழத்துக் கலைஞர்களின் சங்கமத்துடன் கனடா திருமறைக் கலைமன்றம் வழங்கும் பன்னாட்டுக் கலைப்பாலம் 2016   ஈழத்தில் 1965 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட திருமறைக் கலைமன்றம்(கலாமன்றம்), 50 ஆண்டுகள் நிறைவைக் கனடாவில்  பன்னாட்டு விழாபீவாகக் கொண்டாடுகிறது.   கனடா திருமறைக் கலைமன்றம் தமது 25வது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த வருடத்தில், தாய் மன்றத்தின் பொன்விழாவையும், கனடிய மன்றத்தின் வெள்ளி விழாவையும் ஒன்றாக இணைத்துப்,  பன்னாட்டுக் கலை விழாவாகக் கொண்டாடுகிறோம். சுகாபரோவில், மைக்கோவன்-எல்சுமெயர் சந்திக்கருகே, இல.1686 எல்சுமெயர் வீதியில் அமைந்துள்ள   சேசிசு மண்டபத்தில்…

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பாராட்டு விழா, சென்னை

புரட்டாசி 25, 2047 / அட்டோபர் 11, 2016 மாலை 5.30   சுவிட்சர்லாந்து எழுத்தளார் மதிவதனிக்கு வரவேற்பும் பாராட்டும் ஆதித்தனார் விருது பெற்ற அருகோ, பேரா.தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்குப் பாராட்டு முனைவர் கோ.பெரியண்ணன், முனைவர் இதயகீதம் இராமானுசம் புலவர் இரா.இராமமூர்த்தி

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 – வித்தியாசாகர்

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை   – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி  கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் 1/3   இணையத்திலும், இலக்கிய உலகிலும் பல்வேறு அன்பர்களைத் தன்  சுவைஞர்களாகக் கொண்டு, தமிழ் மண்ணை விட்டுக் குவைத்தில் பணிசெய்யும் பொழுதும், தமிழிலக்கிய வானில் நட்சத்திரமாய் மின்னும் எழுத்தாளர், கவிஞர் திரு வித்யாசாகர் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட  செவ்வி. ?. வணக்கம். குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள்,  தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான  பின்புலம் என்ன?  …

இனமானப் புலி எங்கே? – காசி ஆனந்தன்

  இனமானப் புலி எங்கே? இன்றிருந்த பகல்தனிலே ஞாயிறில்லை! இரவினிலும் நிலவில்லை! விண்மீன் இல்லை! இன்றெரிந்த விளக்கினிலே வெளிச்சம் இல்லை! எண்டிசையும் செடிகொடியில் பூக்கள் இல்லை! இன்றிதழ்கள் ஒன்றிலுமே முறுவல் இல்லை! இன்றெமது நாட்டினிலே பெரியார் இல்லை! எவர்தருவார் ஆறுதல்? இங் கெவரும் இல்லை! கோல்தரித்து நேற்றுலகைத் தமிழன் ஆண்டான்! கொற்றவனை அவனை இழி வாக்கி மார்பில் நூல்தரித்து மேய்ப்போராய் நுழைந்த கூட்டம் நூறு கதை உருவாக்கி “பிரம்ம தேவன் கால்தரித்த கருவினிலே தமிழன் வந்தான் காணீர் என்றுரைத்தமொழி கேட்டுக் கண்ணீர் வேல்தரித்து நெஞ்சில்…

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்

(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3  தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3   கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன?  போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…

‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு!

‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு!    (புரட்டாசி 15, 2047 / 01-10-2016 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலகச் சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் முதலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசத்துப் பற்றாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்; சிறப்பித்தனர். உலகத் தமிழர்…

துபாயில் சிறுநீரகப்பாதிப்புற்ற தமிழ்ச்சிறுவனுக்கு மருத்துவப் பொருளுதவி தேவை!

துபாய்  மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால்  மருத்துவம் பெற்று வரும் தமிழகச் சிறுவன் சிகிச்சைக்கான கட்டணம் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் தவித்து வரும் தந்தை, உதவிட வேண்டுகோள்   துபாய் :   துபாய்  மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் தமிழகச் சிறுவன்  (இ)ரீகன் பெய்த்து பால் (அகவை 7)  பண்டுவம்பெற்று வருகிறார். இவரது  மருத்துவக் கட்டணததைச் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் இருந்து வரும் அவரது தந்தை தவித்து வருகிறார். நல்ல மனம் கொண்டவர்கள் இந்த மருத்துவத்திற்காக உதவிடவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.   துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில்…